Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

EPFO 3.0 : விரைவில் ATM மற்றும் UPI மூலம் PF பணத்தை எடுக்கலாம்.. வெளியான முக்கிய தகவல்!

EPFO ATM and UPI Withdrawals | தற்போதைய நிலவரத்தின் படி, இபிஎஃப்ஓ உறுப்பினர்கள் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தின் இணையதளம் மூலம் விண்ணப்பித்து பிஎஃப் பணத்தை எடுத்து பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், உறுப்பினர்கள் நேரடியாக ஏடிஎம் மற்றும் யுபிஐ மூலம் பணத்தை எடுத்துக்கொள்வதற்கான அம்சம் விரைவில் அறிமுகமாக உள்ளது.

EPFO 3.0 : விரைவில் ATM மற்றும் UPI மூலம் PF பணத்தை எடுக்கலாம்.. வெளியான முக்கிய தகவல்!
மாதிரி புகைப்படம்
vinalin-sweety
Vinalin Sweety | Updated On: 30 Jun 2025 12:30 PM

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் (EPFO – Employee Provident Fund Organization) உறுப்பினர்கள் விரைவில் ஏடிஎம் (ATM – Automated Teller Machine) மற்றும் யுபிஐ (UPI – Unified Payment Interface) மூலம் பிஎஃப் (PF – Provident Fund) பணத்தை எடுத்துக்கொள்ளலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. 2025 ஏப்ரல் மாதம் முதல் இதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், பிஎஃப் பணத்தை ஏடிஎம் மற்றும் யுபிஐ மூலம் எடுப்பது குறித்து வெளியாகியுள்ள புதிய தகவல் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

கோடிக்கணக்கான உறுப்பினர்கள் பயன்பெறும் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம்

இந்தியாவில் உள்ள அரசு மற்றும் தனியார் ஊழியர்களின் நலனை பாதுகாக்கும் விதமாக ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தில் அவர்களது பெயர்களில் கணக்கு தொடங்கப்பட்டு, ஊழியர்களின் மாத ஊதியத்தில் இருந்து குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டு இந்த பிஎஃப் கணக்கில் வரவு வைக்கப்படும். அவ்வாறு வரவு வைக்கப்படும் பணத்தை ஊழியர்கள் எப்போது வேண்டுமானாலும் தங்களது தேவைகளுக்காக பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. இந்த நிலையில் ஊழியர்கள் தங்களது பிஎஃப் கணக்கில் இருந்து பணத்தை எடுக்க வேண்டும் என்றால் அதற்கு ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தின் இணையதளம் மூலம் விண்ணப்பித்து பணம் வரும் வரை காத்திருக்க வேண்டும்.

இதற்கு குறைந்தது ஐந்து நாட்கள் ஆகும் நிலையில் விரைவாக உறுப்பினர்களுக்கு பணத்தை வழங்க ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தில் அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. அதாவது இபிஎஃப்ஓ 3.0 (EPFO 3.0) திட்டத்தின் மூலம் ஏடிஎம் மற்றும் யுபிஐ மூலம் பிஎஃப் பணத்தை எடுத்துக் கொள்வதற்கான அனுமதி வழங்கப்படும் என்று தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் அறிவித்திருந்தது. இதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அது குறித்து முக்கிய தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

விரைவில் அமலுக்கு வரும் இபிஎஃப்ஓ 3.0 திட்டம்

இபிஎஃப்ஓ 3.0 திட்டத்தை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் அதற்கான பணிகள் விரைவாக நடைபெற்று வருவதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதனை பயன்பாட்டிற்கு கொண்டுவர இபிஎஃப்ஓ கணக்குகள் உறுப்பினர்களின் வங்கி கணக்குகளுடன் இணைக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். பிஎஃப் பணத்தில் குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்படும் என்றும் மீதம் உள்ள பெரிய தொகையை ஏடிஎம் மற்றும் யுபிஐ மூலம் எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.