Iran – Israel Conflict : ஈரானுக்கு எதிராக ராணுவ தாக்குதல்?.. 2 வாரங்களில் டிரம்ப் முடிவு செய்வார்..வெள்ளை மாளிகை பரபரப்பு தகவல்!
White House on Iran - Israel Issue | ஈரான் மீது தாக்குதல் நடத்துவது தொடர்பாக இரண்டு வாரங்களுக்குள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முடிவு செய்வார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. முன்னதாக செய்தியாளர்களுக்கு பதில் அளித்திருந்த டிரம்ப், ஈரான் மீது தாக்குதல் நடத்துவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என கூறியிருந்த நிலையில், வெள்ளை மாளிகை இவ்வாறு கூறியுள்ளது.

அமெரிக்கா, ஜூன் 20 : ஈரானுக்கு எதிராக ராணுவ தாக்குதல் நடத்துவது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (America President Donald Trump) அடுத்த இரண்டு வாரங்களில் முடிவு செய்வார் என்று வெள்ளை மாளிகை (White House) பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளது. ஈரான் – இஸ்ரேலுக்கு இடையே கடந்த சில நாட்களாக மோதல் நீடித்து வரும் நிலையில், ஈரானுக்கி எதிராக டொனால்ட் டிரம்ப் கருத்து தெரிவித்து வருகிறார். இந்த விவகாரத்தில் அவர் ஈரானை பலமுறை கண்டித்தும் உள்ளார். இந்த நிலையில், அமெரிக்கா இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் – இஸ்ரேல் இடையே நிலவும் கடுமையான மோதல்
அணு ஆயுத உற்பத்தி (Nuclear Weapon Production) விவகாரத்தில் ஈரான் தங்களது மீது தாக்கத்தில் நடத்துமோ என்ற எண்ணத்தில் இஸ்ரேல், ஈரான் மீது தாக்குதல் நடத்த தொடங்கியது. குறிப்பாக ஜூன் 13, 2025 அன்று ஆப்ரேஷன் ரைசிங் லைன் (Operation Rising Lion) என்ற பெயரில் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த தொடங்கியது. இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆப்ரேஷன் ரூப் பிராமிஸ் 3 (Operation True Promise 3) என்ற பெயரில் ஈரானும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் காரணமாக ஏழு நாட்களுக்கும் மேலாக ஈரான் – இஸ்ரேல் இடையே கடும் மோதல் நிலை வருகிறது.
ஈரான் மீது தாக்குதல் நடத்துவது குறித்து பேசிய டிரம்ப்
ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே நிலவி வரும் மோதலில் அமெரிக்கா, தொடர்ந்து ஈரானுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. குறிப்பாக இஸ்ரேல் தலைவர் அலி காமெனி சரணடைய வேண்டும் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார். டிரம்பின் இந்த எச்சரிக்கைக்கு எதிர்வினை ஆற்றி இருந்த காமெனி, ஈரான் – இஸ்ரேல் விவகாரத்தில் அமெரிக்கா ராணுவ ரீதியாக தலையிட்டால் அந்நாட்டுக்கு சரி செய்ய முடியாத அளவு சேதம் ஏற்படும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார். ஈரானின் இந்த எச்சரிக்கை காரணமாக, ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த டிரம்ப், ஈரான் மீது தாக்குதல் நடத்துவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்று கூறியிருந்தார்.
ஈரான் மீது ராணுவ தாக்குதலா? – வெள்ளை மாளிகை சொன்ன பரபரப்பு தகவல்!
🚨 @PressSec shares an important message from President Donald J. Trump: “Based on the fact that there’s a substantial chance of negotiations that may or may not take place with Iran in the near future, I will make my decision whether or not to go within the next two weeks.” pic.twitter.com/Xh3rNuURn0
— The White House (@WhiteHouse) June 19, 2025
— Dave Gahary (@DGahary94205) June 19, 2025
இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த வெள்ளை மாளிகையின் பத்திரிக்கை செயலாளர் கரோலின் லீவிட், ஈரானுக்கு எதிராக ராணுவ தாக்குதலை நடத்துவதா, வேண்டாமா என்பது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அடுத்த இரண்டு வாரங்களுக்கு முடிவு எடுப்பார் என்று கூறியுள்ளார்.