Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

டமாஸ்கஸில் தேவாலயத்தில் நடத்தப்பட்ட தற்கொலை படை தாக்குதல்.. 22 பேர் உயிரிழந்த சோகம்..

Damascus Terror Attack: சிரியா நாட்டின் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள மார் எலியாஸ் கிரேக்க ஆர்த்தோடாக்ஸ் தேவாலயத்தில் ஜூன் 22, 2025 அன்று ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதி தேவாலயத்தில் நுழைந்து தனது உடலில் கட்டி இருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்து தற்கொலை படை தாக்குதலில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டமாஸ்கஸில் தேவாலயத்தில் நடத்தப்பட்ட தற்கொலை படை தாக்குதல்.. 22 பேர் உயிரிழந்த சோகம்..
தேவாலயத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்
aarthi-govindaraman
Aarthi Govindaraman | Published: 23 Jun 2025 10:26 AM

மேற்கு ஆசிய நாடான சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸின் ஒரு பகுதியான ட்வைலாவில் உள்ள மார் எலியாஸ் தேவாலயத்தில் ஜூன் 22 2025 ஆம் தேதி, தற்கொலை படையின் தாக்குதல் நடத்தப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதில் 22 பேர் உயிரிழந்ததாகவும் 63 பேர் படுகாயம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினரே காரணம் என அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. ஐ எஸ் ஐ எஸ் அமைப்பை சேர்ந்த ஒரு பயங்கரவாதி தேவாலயத்தில், வழிபாட்டு நேரத்தின் போது கிரேக்க ஆர்தோடக்ஸ் தேவாலயத்திற்குள் நுழைந்து தாக்குதலை நிகழ்த்தியதாக சிரியா அரசாங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேவாலயத்தில் தற்கொலை படை தாக்குதல்:


தேவாலயத்திற்குள் நுழைந்த பிறகு அந்த பயங்கரவாதி தனது உடலில் கட்டி வைக்கப்பட்டு இருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்வதற்கு முன்பு அந்த பயங்கரவாதி இடம் இருந்த துப்பாக்கியால் அங்கிருந்து மக்களை பார்த்து சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து அவரது உடலில் கட்டி இருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்ததாக கூறப்படுகிறது. இதில் 22 பேர் உயிரிழந்ததாகவும் 60க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும் சுகாதார அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டு டிசம்பரில் சிரியாவின் முன்னாள் அதிபர் பஷார் அல் அசாதை இஸ்லாமியவாத தலைமையிலான கிளர்ச்சியாளர்களால் வீழ்த்திய பின் நடந்த முதல் தாக்குதல் இதுவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் இரண்டு தீவிரவாதிகள் ஈடுபட்டதாகவும், ஒருவர் மட்டுமே தனது உடலில் வெடிகுண்டை கட்டி இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளர்ச்சியாளர்கள் ஆட்சியை கைப்பற்றிய பிறகு ஐஎஸ்ஐஎஸ் மேற்கொண்ட முதல் தாக்குதல் இதுவாகும். இதற்கு முன்பு பலமுறை தாக்குதல் நடத்த முயற்சி செய்த போதிலும் அது தோல்வியில் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.

கண்டனம் தெரிவித்த அரசு:

இந்த தாக்குதலில் தேவாலயத்தின் உட்புற பகுதிகள் கடுமையாக சேதம் அடைந்துள்ளது. இது தொடர்பாக கிரேக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் சிரியாவில் டமாஸ்கஸில் உள்ள மார் எலியாஸ் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் தேவாலயத்தில் நடந்த பயங்கரவாத தற்கொலை குண்டுவெடிப்பை கடுமையாக கண்டிக்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தவும், கிறிஸ்தவம் மற்றும் பிற மதத்தை சேர்ந்த மக்களை பாதுகாக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சிரியாவின் இடைக்கால அரசாங்கத்தை மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.