Narendra Modi : 3 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி.. சைப்ரஸில் இந்தியா குறித்து பெருமிதம்!
PM Narendra Modi Cyprus Visit | இந்திய பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாடுகளுக்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ளார். அந்த வகையில் மூன்று நாட்கள் கனடாவில் நடைபெறும் ஜி7 உச்சி மாநாட்டில் அவர் பங்கேற்க உள்ளார். முன்னதாக சைப்ரஸ் சென்றடைந்த அவர், முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினார்.

லிமாசோல், ஜூன் 16 : 3 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Indian Prime Minister Narendra Modi), நேற்று (ஜூன் 15, 2025) சைப்ரஸ் நாட்டுக்கு சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில், லிமாசோலில் நடைபெற்ற தொழிலதிபர்கள் மாநாட்டில் கலந்துக்கொண்டு பேசிய மோடி, 6 தசாப்தங்களுக்கு பிறகு ஒரே அரசாங்கம் தொடர்ந்து மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது நிகழ்ந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் டிஜிட்டல் புரட்சி ஏற்பட்டுள்ளது என்று இந்தியா குறித்து பெருமிதம் தெரிவித்துள்ளார்.
3 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி
2025 ஆம் ஆண்டுக்கான ஜி7 உச்சி மாநாடு (G7 Summit) கனடாவில் நடைபெற்று வருகிறது. ஜூன் 15, 2025 அன்று தொடங்கி இந்த உச்சி மாநாடு ஜூன் 17, 2025 வரை நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை கனடா பிரதமர் மார்க் கார்னி அழைத்ததன் பெயரில் பிரதமர் மோடி ஜி 7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார். அது மட்டுமன்றி, உலக நாடுகளின் தலைவர்களுக்கும் இந்த மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இதில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொழிலாளர்கள் மாநாட்டில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி
Ενίσχυση των επιχειρηματικών δεσμών!
Ο Πρόεδρος Νίκος Χριστοδουλίδης και εγώ συναντηθήκαμε με κορυφαίους Διευθύνοντες Συμβούλους, με στόχο την ενίσχυση των εμπορικών δεσμών μεταξύ Ινδίας και Κύπρου. Τομείς όπως η καινοτομία, η ενέργεια, η τεχνολογία και άλλοι προσφέρουν… pic.twitter.com/GtrI1J40tm
— Narendra Modi (@narendramodi) June 15, 2025
மூன்று நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, நேற்று (ஜூன் 15, 2025) டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்றார். முதலில் சைப்ரஸ் நாட்டுக்கு சென்றடைந்த அவருக்கு விமான நிலையத்தில் அந்த நாட்ட அதிபர் கிறிஸ்டோவுலிட்ஸ் வரவேற்பு அளித்தார். அதனை தொடர்ந்து லிமோசோவில் நடைபெற்ற தொழிலதிபர்கள் மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மோடி உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர் 6 தசாப்தங்களுக்கு பிறகு ஒரே அரசாங்கம் தொடர்ந்து மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டது நிகழ்ந்துள்ளது. கடந்து 10 ஆண்டுகளில் டிஜிட்டல் புரட்சி ஏற்பட்டுள்ளது. இன்று உலகின் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் 50 சதவீதம் இந்தியாவில் ஒருங்கிணைந்த கட்டணம் அதாவது யுபிஐ (UPI – Unified Payment Interface) மூலம் நடைபெறுகிறது. பிரான்ஸ் போன்ற பல நாடுகள் இதனுடன் தொடர்புடையவை. இதில் சைப்ரஸையும் சேர்ப்பது குறித்து பேச்சு வார்த்தைகள் நடந்து வருகின்றன. அதை நான் வரவேற்கிறேன் என்று கூறியுள்ளார்.