UN : ஈரான் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்கா.. உலகிற்கு பேரழிவை ஏற்படுத்தும் என்று ஐ.நா பொதுச்செயலாளர் கவலை!
UN Secretary Antonio Guterres on Iran Attack | ஈரான் - இஸ்ரேல் விவகாரத்தில் ஈரானின் அணு உலைகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த நிலையில், அமெரிக்காவின் இந்த தாக்குதல் உலகிற்கு பேரழிவை ஏற்படுத்தும் என்று ஐ.நா பொதுச் செயலாளர் ஆன்டோனியோ குட்டேரெஸ் கவலை தெரிவித்துள்ளார்.

நியூயார்க், ஜூன் 22 : ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல் (America Attack on Iran) உலகிற்கு பேரழிவை ஏற்படுத்தும் என்று ஐ.நா (UN – United Nations) பொதுச்செயலாளர் கவலை தெரிவித்துள்ளார். ஈரான் – இஸ்ரேல் விவகாரத்தில் (Iran – Israel Conflict), அமெரிக்கா தொடர்ந்து ஈரானுக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்து வந்தது. இந்த நிலையில், ஈரானின் மூன்று அணு உலைகள் மீது அமெரிக்கா வெற்றிரமாக தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் இந்த நடவடிக்கை உலக நாடுகள் மத்தியில் கடும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அது குறித்து என்று ஐ.நா கவலை தெரிவித்துள்ளது.
ஈரான் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்கா
ஜூன் 13, 2025 முதல் ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு (Iran and Israel) இடையெ கடும் மோதல் நிலவி வருகிறது. இதற்கிடையே, இஸ்ரேலின் உட்சபட்ச தலைவரை சரணடைய கூறியது, ஈரான் மீது தாக்குதல் நடத்துவது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என கூறியது உள்ளிட்ட ஈரானுக்கு எதிராக அமெரிக்கா பல்வேறு கருத்துக்களை முன்வைத்து வந்தது. இதன் காரணமாக ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே மோதல் ஏற்படும் பதற்றம் நிலவியது. இந்த நிலையில், ஈரான் மீது தாக்குதல் நடத்தி அந்த பதற்றத்தை அமெரிக்கா மேலும் அதிகரித்துள்ளது.
ஈரான் தாக்குதல் குறித்து பதிவிட்ட டிரம்ப்
— Donald J. Trump (@realDonaldTrump) June 21, 2025
இந்த நிலையில், இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானில் உள்ள பர்தவ், நடான்ஸ் மற்றும் எஸ்பஹான் ஆகிய மூன்று அணு உலைகள் மீது நாங்கள் வெற்றியுடன் தாக்குதல் நடத்தியுள்ளோம் என்று கூறியுள்ளார். மேலும், ஈரானின் முதன்மையான பகுதிகளில் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஈரான் மீதான அமெரிக்காவின் நடவடிக்கைக்கு ஐநா கவலை
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஐநா பொதுச் செயலாளர் ஆன்டோனியோ குட்டேரெஸ், ஈரானுக்கு எதிராக அமெரிக்கா தனது ராணுவ பலத்தை பயன்படுத்தி இருப்பது மிகவும் கவலை அளிக்கிறது. ஏற்கனவே போரின் விளிம்பில் இருக்கும் ஒரு பிராந்தியத்தில் இது மிகவும் ஆபத்தான நடவடிக்கையாகும். மேலும் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு நேரடி அச்சுறுத்தலாகும் என்று கூறியுள்ளார். இந்த மோதல் விரைவில் கட்டுப்பாட்டை இழக்கும் அபாயம் அதிகரித்து வருகிறது. இது பொதுமக்கள், மத்திய கிழக்கு பிராந்திய மற்றும் உலகிற்கு பேரழிவு தரும் விளைவுகளை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார்.
ஐநா பொதுச் செயலாளர் ஆன்டோனியோ குட்டேரெஸ் எக்ஸ் பதிவு
I am gravely alarmed by the use of force by the United States against Iran today. This is a dangerous escalation in a region already on the edge – and a direct threat to international peace and security.
There is a growing risk that this conflict could rapidly get out of…
— António Guterres (@antonioguterres) June 22, 2025
மேலும் ஐநா சபையின் சாசன மற்றும் சர்வதேச சட்ட விதிகளின் கீழ் ஐநா உறுப்பு நாடுகள் தங்கள் கடமைகளை நிலைநிறுத்தவும், போர் பதற்றத்தை தணிக்கவும் முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்த ஆபத்தான நேரத்தில் மேலும் குழப்பம் ஏற்படுவதை தவிர்ப்பது மிகவும் முக்கியம். இராணுவ நடவடிக்கை எதற்கும் தீர்வு இல்லை. பேச்சுவார்த்தை மட்டுமே முன்னோக்கி செல்லும் ஒரே வழி. அமைதி மட்டுமே ஒரே நம்பிக்கையை என்று அவர் கூறியுள்ளார்.