பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. 32 பேர் உயிரிழந்த சோகம்..
இன்று காலை 7.37 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்துக்குப் பிறகு பல்வேறு பின்அதிர்வுகளும் ஏற்பட்டன. இந்த அதிர்வுகள் அருகிலுள்ள மலேசியா நாட்டிலும் உணரப்பட்டன. சுனாமி அலைகள் இந்தோனேசியா மற்றும் மலேசியா கடற்கரைகளிலும் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிலநடுக்கத்தால் ஜெனரல் சாண்டோஸ் சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.
ஜூன் 8, 2026: பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு கடல்பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் சேதமடைந்ததுடன், முக்கிய அணுகுமுறை பாலமும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், சுமார் 1 மீட்டர் உயரம் கொண்ட சுனாமி அலைகளும் கரையை தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 32 பேர் உயிரிழப்பு:
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர். அதிகாரப்பூர்வ தகவலின்படி, இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், பெரும்பாலானோர் நிலச்சரிவில் வீடுகள் இடிந்து சிக்கியதாலேயே பலியாகியுள்ளனர்.
மேலும் படிக்க: முடிந்தது டிரம்பின் எச்சரிக்கை.. மீண்டும் போர் அபாயம்? அடுத்து நடக்கப்போவது என்ன?
சரங்கானி மாகாண பேரிடர் மேலாண்மை அதிகாரி ரெனே புன்சலான், “கிளான்” என்ற மலைப்பகுதி நகரில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட நிலச்சரிவில் வீடுகள் இடிந்து விழுந்ததில் 13 பேர் உயிரிழந்தனர் என்று தெரிவித்துள்ளார். மேலும், சரங்கானி பகுதியில் இன்னும் தெளிவாகாத காரணங்களால் 4 பேர் உயிரிழந்ததாகவும் கூறியுள்ளார்.
மலேசியாவில் உணரப்பட்ட நில அதிர்வு:
இன்று காலை 7.37 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்துக்குப் பிறகு பல்வேறு பின்அதிர்வுகளும் ஏற்பட்டன. இந்த அதிர்வுகள் அருகிலுள்ள மலேசியா நாட்டிலும் உணரப்பட்டன. சுனாமி அலைகள் இந்தோனேசியா மற்றும் மலேசியா கடற்கரைகளிலும் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நிலநடுக்கத்தால் ஜெனரல் சாண்டோஸ் சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. இதன் காரணமாக 17 உள்நாட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதாக சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலநடுக்கம் “கோடபாட்டோ ட்ரெஞ்ச்” பகுதியில் ஏற்பட்ட நிலத்தட்டு நகர்வினால் ஏற்பட்டதாக பிலிப்பைன்ஸ் எரிமலை மற்றும் நிலநடுக்கவியல் நிறுவனம்
தெரிவித்துள்ளது. சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
அந்நிறுவன இயக்குநர் தெரெசிடோ பகோல்கோல் கூறுகையில், “இது மிகப் பெரிய நிலநடுக்கம். ஏற்கனவே பல கட்டிடங்கள் சேதமடைந்த காட்சிகள் கிடைத்துள்ளன. மேலும் சேதங்கள் இருக்கக்கூடும்” என தெரிவித்துள்ளார்.
3 அடி உயர சுனாமி அலை:
சரங்கானி மற்றும் சுல்தான் குடராட் மாகாணங்களில் 1 மீட்டர் (சுமார் 3 அடி) உயரம் கொண்ட சுனாமி அலைகள் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேபோல், பிற பகுதிகளிலும் குறைந்த அளவிலான கடல் அலை மாற்றங்கள் பதிவாகியுள்ளன.
பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் பொதுமக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கையில், “சுனாமி எச்சரிக்கையை அலட்சியம் செய்ய வேண்டாம். உடனடியாக உயரமான பகுதிகளுக்கு செல்லுங்கள். உயிர் தான் முக்கியம்” என தெரிவித்துள்ளார்.
பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் வெளியிட்ட தகவலின்படி, பிலிப்பைன்ஸ் கடற்கரையின் சில பகுதிகளில் 3 மீட்டர் (10 அடி) உயரம் வரை சுனாமி அலைகள் உருவாகும் அபாயம் இருந்ததாக கூறப்பட்டுள்ளது. மேலும், இந்தோனேசியா மற்றும் மலேசியாவின் சில கடற்கரைப் பகுதிகளில் 1 மீட்டர் உயரம் வரை அலைகள் பதிவாகும் வாய்ப்பும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.