AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்… மருத்துவமனையில் குழந்தைகளை காப்பாற்றிய செவிலியர்கள் – வைரல் வீடியோ

Viral Video : அசாமில் நடந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தின் போது நாகனில் உள்ள ஆதித்யா மருத்துவமனையில் ஐசியூவில் இருந்த குழந்தைகளை செவிலியர்கள் காப்பாற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில் செவிலியர்களின் துணிச்சலை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்… மருத்துவமனையில் குழந்தைகளை காப்பாற்றிய செவிலியர்கள் – வைரல் வீடியோ
குழந்தைகளை காப்பாற்றிய செவிலியர்கள்
Karthikeyan S
Karthikeyan S | Published: 15 Sep 2025 21:31 PM IST

கடந்த செப்டம்பர் 15, 2025 அன்று அசாமில் ஏற்பட்ட நிலநடுக்கம் (Earthquake) மக்களிடையே மிகுந்த பீதியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், இந்த நிலநடுக்கத்தின் போது நாகவன் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் இரண்டு செவிலியர்கள் காட்டிய துணிச்சலான சம்பவம்  இப்போது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. மாலை 4.40 மணி அளவில் ஆதித்யா நர்சிங் ஹோமில் புதிதாகப் பிறந்த குழந்தைகள் வைக்கப்பட்டிருந்த ஐசியுவின் சிசிடிவி காட்சிகள்.. நிலநடுக்கத்தின் தீவிரத்தையும் செவிலியர்களின் துணிச்சலையும் தெளிவாகக் காட்டுகிறது.

நிலநடுக்கத்தில் இருந்து குழந்தைகளை காப்பாற்றிய செவிலியர்கள்

வைரலாகும் வீடியோவில் நிலநடுக்கம் தொடங்கியவுடன், இரண்டு செவிலியர்கள் தாமதமின்றி குழந்தைகளை நோக்கி விரைந்தனர். ஒரு செவிலியர் இரண்டு குழந்தைகளை இறுக்கமாகப் பிடித்து அவர்கள் கீழே விழாமல் காப்பாற்றினார், அதே நேரத்தில் மற்றொரு செவிலியர் மற்றொரு குழந்தையை தனது மடியில் எடுத்துக்கொண்டு காப்பாற்றினார்.

இதையும் படிக்க : மகனின் அமெரிக்க காதலி.. மலர் தூவி மகிழ்ச்சியுடன் வரவேற்ற ஜம்மு & காஷ்மீர் குடும்பம்!

நிலநடுக்கத்தின் தீவிரத்தை வீடியோ தெளிவாகக் காட்டியது. அறையில் இருந்த ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், கண்ணாடிகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் நகர்ந்து கொண்டிருந்தபோது, ​​செவிலியர்கள் தங்கள் உயிரைப் பொருட்படுத்தாது. குழந்தைகளை காப்பாற்றுவதில் கவனம் செலுத்தினர். நிலநடுக்கத்தின் தீவிரம் ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தின் தீவிரம் உதல்கிரி மாவட்டத்தில் 5 கிலோமீட்டர் அளவுக்கு மையம் கொண்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வைரலாகும் வீடியோ

 

குறிப்பாக குவஹாத்தி, உதல்கிரி, சோனித்பூர், தனுல்பூர், நல்பாரி மாவட்டங்களில் நிலநடுக்கம் மிகவும் கடுமையாக எதிரொலித்தது. மேலும் பல பகுதிகளில் மக்கள் பயத்தில் வீடுகளை விட்டு வெளியே ஓடினர். இதனால் அப்பகுதியில் மிகவும் பரபரப்பாக காணப்பட்டது.

இதையும் படிக்க : சன்ரூஃபை திறந்து வேடிக்கை பார்த்த சிறுவன்.. அடுத்து காத்திருந்த அதிர்ச்சி.. ஷாக் வீடியோ

பின்னர், சில நிமிடங்களுக்குள் மேலும் இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. மாலை 4.58 மணிக்கு 3.1 ரிக்டர் அளவிலும், மாலை 5.21 மணிக்கு 2.9 ரிக்டர் அளவிலும் மேலும் இரண்டு நிலநடுக்கங்கள் பதிவாகின. மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளத்திலும் இதன் விளைவு லேசாக உணரப்பட்டது. இந்த சம்பவத்தில் குழந்தைகளை காப்பாற்றிய செவிலியர்களின் துணிச்சலை சமூக ஊடகங்களில் நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

Follow Us