Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
Spiritual Experience

Spiritual Experience

ஆன்மீகம் என்பது பற்றி பலருக்கும் பலவிதமான கருத்துக்கள் இருக்கும். அது ஆன்மாவுடன் தொடர்புடையது, கடவுளைத் தேடும் வழி, வாழ்வின் பொருள் மற்றும் நோக்கத்தை அறிவதற்கான ஒரு தனிப்பட்ட தேடல் என பல வகைகளில் பொருள் கூறப்படுகிறது. அடிப்படையில் ஆன்மிகம் என்பது ஒரு மத நம்பிக்கை என கொள்ளலாம். இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒரு உலகைப் பற்றியது என சாஸ்திரங்களில் சொல்லப்பட்டு வருகிறது. கடவுள் இருக்கிறார், கடவுள் இல்லை, கடவுள் நம்மிடையே இருக்கிறார் என பல வகையான கருத்துக்கள் ஆன்மீகத்தில் உள்ளது. உலகின் வாழும் ஒவ்வொரு மக்களும் தாங்கள் சார்ந்த மதத்தை தாண்டி மற்ற மதங்களின் கடவுள்கள் மீது அபரிமிதமான நம்பிக்கை கொண்டுள்ளனர். பல சமயங்களின் கடவுளின் சக்தியையும் உணர்ந்துள்ளனர். அப்படியாக சமூகத்தில் பல்வேறு துறைகளில் புகழ்பெற்று விளங்கும் பிரபலங்கள் தங்களுடைய ஆன்மீக அனுபவங்களை பற்றி தெரிவித்துள்ளார்கள். அதனைப் பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம்.

Read More

திருவண்ணாமலை கிரிவலத்தில் நடந்த ஆச்சரியம்.. நடிகை சாந்தினி நெகிழ்ச்சி!

நடிகை சாந்தினி அவர்களின் ஆன்மீக அனுபவங்கள் பற்றி நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார். . தீவிர சிவ பக்தையான அவர் திருவண்ணாமலை கிரிவலத்தில் ருத்ராட்சம் பெற்ற அனுபவம், நாடோடிகள் படப்பிடிப்பின் போது ஆஞ்சநேயர் கோயில் சென்றது போன்ற அதிசயங்களைப் பகிர்ந்துள்ளார். அவரது வாராந்திர வழிபாட்டு முறைகள் பற்றியும் பேசியுள்ளார்.

முருகன் அருளால் நடந்த மறக்க முடியாத சம்பவம்.. சுஜாதா பகிரும் தகவல்கள்!

நடனக் கலைஞர் மற்றும் நடிகை சுஜாதா, தனது ஆன்மிக அனுபவங்களை நேர்காணல் ஒன்றில் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் சமயபுரம் மாரியம்மன் மற்றும் முருகனை தனது இஷ்ட தெய்வங்களாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் மற்றவர்களுக்கு உதவுவதை ஆன்மிகமாகக் கருதுவதாகவும், பக்தி என்பது அடுத்தவரை குறை சொல்லாமல் இருப்பது எனவும் கூறியுள்ளார்.

முருகனை நாடும் இளம் வயதினர்.. ஆன்மிக அனுபவங்களைப் பகிரும் வேல்முருகன்!

பிரபல பாடகர் வேல்முருகன் தனது ஆன்மீக அனுபவங்களைப் பற்றி நேர்காணல் ஒன்றில் பகிர்ந்து கொண்டுள்ளார். தைப்பூச நாளில் பிறந்த அவர், முருகனின் அருளால் இசைத்துறையில் பாடகராக வெற்றி பெற்றதாகவும், சமீபகாலமாக முருகன் கோயில்களுக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் தெரிவித்தார்

வாழ்க்கையை மாற்றிய ரமண மகரிஷி.. நடிகர் வெங்கடேஷின் ஆன்மிக அனுபவம்!

பிரபல நடிகரான வெங்கடேஷ் டகுபதி ஆன்மீகப் பயணம், கடவுள் மீதான பயத்திலிருந்து அமைதி நோக்கிய ஒரு மாற்றத்தைக் காட்டுவதாக அமைந்திருக்கிறது. ஆரம்பத்தில், பாரம்பரியமான ஆன்மீக நம்பிக்கைகளைக் கொண்டிருந்த அவர், பின்னர் ஓஷோ, ராமகிருஷ்ண பரமஹம்சர் போன்றோரின் எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டு, கடவுளின் மற்றொரு பரிணாமத்தை உணர்ந்ததாக தெரிவித்துள்ளார்.

எந்த கடவுளையும் தொல்லை செய்வது இல்லை.. வடிவுக்கரசியின் ஆன்மிக அனுபவம்!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகையான வடிவுக்கரசி தனது வாழ்வில் பல்வேறு ஆன்மீக அனுபவங்கள் மற்றும் நம்பிக்கைகள் குறித்து நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார். அதில் திருப்பதி யாத்திரை, சத்யநாராயண பூஜை, பாண்டிச்சேரி அன்னை வழிபாடு, கிறிஸ்துவம் குறித்த அவரது பார்வை உள்ளிட்டவை பற்றி தெரிவித்துள்ளார்.

மூகாம்பிகை தான் எல்லாம்.. இளையராஜாவின் ஆன்மிக அனுபவம்!

இசைஞானி இளையராஜா 1974ல் மைசூரில் இசைக்கச்சேரிக்குச் சென்றபோது ஏற்பட்ட கடுமையான காய்ச்சலில் இருந்து மூகாம்பிகை அம்மனின் அருளால் மீண்டதையும், கோயிலில் நடந்த அதிசயமான நிகழ்வுகளையும் நேர்காணலில் ஒன்றில் தெரிவித்துள்ளார். மூகாம்பிகை அம்மன் தனது சன்னதியில் என்னைப் பாட வைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

Actress Lakshmi: கனவில் வந்த மாரியம்மன்.. நடிகை லட்சுமி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்!

பிரபல தமிழ் நடிகை லட்சுமி அவர்கள் தனது ஆன்மீக அனுபவத்தை நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார். மீண்டும் மீண்டும் வந்த ஒரு விசித்திரமான கனவில், அவர் ஒரு பிரசாதத்தைப் பெற்று, ஒரு கோவிலுக்குச் செல்லும்படி வழிநடத்தப்படுகிறார். கனவில் வந்த கோவிலைப் பின்னர் அடையாளம் கண்டு சென்று வழிபட்டதாக கூறியுள்ளார்.

கர்வத்தால் திருப்பதியில் நடந்த சம்பவம்.. டிரம்ஸ் சிவமணியின் ஆன்மிக அனுபவம்!

இசைத்துறையில் தனக்கென தனியிடம் பிடித்திருக்கும் டிரம்ஸ் சிவமணி தன்னுடைய ஆன்மிக அனுபவங்கள் பற்றி பேசியுள்ளார். அதில் திருப்பதி கோயிலுக்கு தான் சென்றபோது நடந்த நிகழ்வுகளையும், தன்னிடம் இருந்த கர்வம் ஒழிந்தது பற்றியும் பிரமிப்புடன் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் பாபாஜியிடம் வேண்டியது நடந்தது எனவும் அவர் கூறியுள்ளார்.

பிரம்ம முகூர்த்த கடவுள் வழிபாடு.. நடிகை ப்ரீத்தியின் ஆன்மிக அனுபவங்கள்!

பிரபல சின்னத்திரை நடிகை பிரீத்தி சஞ்சீவ் தன்னுடைய ஆன்மீக அனுபவங்கள் மற்றும் வீட்டு வழிபாட்டு முறைகள் குறித்த நேர்காணலில் கருத்துகளை பகிர்ந்துள்ளார். வாஸ்து, பிரம்ம முகூர்த்த வழிபாடு, விளக்கு ஏற்றுதல் போன்றவற்றின் முக்கியத்துவம், நம்பிக்கை மற்றும் பாசிட்டிவ் எண்ணங்களின் பங்கு ஆகியவற்றை அவர் பேசியுள்ளார்.

Sai Baba: வீட்டிலேயே சாய்பாபா வழிபாடு.. அனிதா குப்புசாமி சொல்லும் டிப்ஸ்!

அனிதா குப்புசாமி அவர்கள் சாய்பாபா பற்றிய தனது ஆன்மீக அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார். அரசியலில் ஈடுபட தடுத்த சாய்பாபாவின் தலையீடு, சாய்பாபா வழிபாட்டு முறைகள், சிறந்த நேரம், மஞ்சள் நிறத்தின் முக்கியத்துவம் மற்றும் லட்சுமி குபேர பூஜையின் நன்மைகள் போன்றவற்றைப் பற்றியும் விளக்கியுள்ளார்.

Anu Mohan: கடவுள் ரூபத்தில் வந்த தகவல்.. சிறைக்கு சென்ற அனுமோகன்..

நடிகர் அனுமோகன் தனது இளமைக் காலத்தில் நடந்த ஆன்மீக அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். அவர் இன்ஜினியரிங் படிக்கும்போது, சாமியார் போன்ற தோற்றம் கொண்ட நபர் அவர் சிறைக்கு செல்வார் என்று எச்சரித்துள்ளார். முதலில் அதனை அனுமோகன் பொருட்படுத்தவில்லை. ஆனால் அவர் கைது செய்யப்பட்ட சமயம் அந்த சாமியார் சொன்ன நேரத்துடன் பொருந்தியது. இந்த நிகழ்வை அனுமோகன் அதிசயமாகவும், கடவுள் அருளாகவும் கருதுகிறார்.

எப்போதும் கருமாரி துணையிருப்பாள்.. நடிகை நளினி வாழ்வில் நடந்த அதிசயம்!

நடிகை நளினி அவர்களின் கருமாரியம்மன் அன்னையின் மீதான அசைக்க முடியாத நம்பிக்கையையும், அவரது வாழ்வில் நிகழ்ந்த அதிசய நிகழ்வுகளையும் பற்றி நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். கருமாரியம்மன் புகைப்படத்தை வெளியே எறிந்ததன் விளைவாக ஏற்பட்ட உடல்நலப் பிரச்சினைகள் தொடங்கி குழந்தை பிறப்பு வரை அதில் பேசியிருப்பார். அதனைப் பற்றிக் காணலாம்.

VJ Archana: “நான் பிறந்ததே அந்த அம்மன் அருளால் தான்”.. அர்ச்சனாவின் ஆன்மிக அனுபவம்!

விஜே அர்ச்சனா தனது ஆன்மீக அனுபவங்களை நேர்காணல் ஒன்றில் பகிர்ந்து கொண்டார். அவரது குழந்தைப் பருவம் மூன்று கோயில்களில் கழிந்ததாக தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் மலேசியா முருகன் அவரது வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார். தஞ்சாவூர் ஓவியத்தில் உள்ள புவனேஸ்வரி அம்மன் படம் அவரது வீட்டு பூஜை அறையில் இடம்பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சிலிர்க்க வைத்த ராஜ ராஜேஸ்வரி அம்மன்.. தாரிணி பகிரும் ஆன்மிக அனுபவங்கள்!

நடிகை தாரணி அவரது ஆன்மீக அனுபவங்களை நேர்காணல் ஒன்றில் பகிர்ந்திருந்தார். அதில் சிறுவயது முதலே தனக்கு விநாயகர் மீது கொண்ட அளவற்ற நம்பிக்கை இருந்ததாகவும், முருகன் பாடல்களை கேட்டு தான் ஒருநாளின் பணிகளை தொடங்குவேன் என்றும் கூறினார். மேலும் மெய்சிலிர்த்த காமாட்சி அம்மன் தரிசனம் மற்றும் ராஜ ராஜேஸ்வரி அம்மன் அனுபவம் உள்ளிட்டவற்றையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.

Tamilisai Soundararajan: வாரத்தில் 5 நாட்கள் கோயில் தான்.. தமிழிசை பகிரும் ஆன்மிக அனுபவங்கள்!

தமிழக அரசியலின் தவிர்க்க முடியாத பெண் தலைவர்களில் ஒருவரான தமிழிசை சௌந்தரராஜன் நேர்காணல் ஒன்றில், இறை நம்பிக்கையின் முக்கியத்துவம், அன்றாட வாழ்வில் ஆன்மீகத்தின் பங்கு, குலதெய்வ வழிபாடு மற்றும் கடவுள் மீதான அசைக்க முடியாத தனது நம்பிக்கை ஆகியவற்றை பற்றி பேசியுள்ளார்.

சிலையென நினைத்து நிஜ முதலையிடம் சிக்கிய இளைஞன்!
சிலையென நினைத்து நிஜ முதலையிடம் சிக்கிய இளைஞன்!...
சம்பளத்தை வச்சிகோங்க.. தேசியப் பாதுகாப்பு நிதி வழங்கிய இளையராஜா!
சம்பளத்தை வச்சிகோங்க.. தேசியப் பாதுகாப்பு நிதி வழங்கிய இளையராஜா!...
'இந்தியன் 2' படம்.. மாறிய பிளான்.. எஸ்.ஜே சூர்யா வருத்தம்!
'இந்தியன் 2' படம்.. மாறிய பிளான்.. எஸ்.ஜே சூர்யா வருத்தம்!...
ஸ்ரீநகரில் வெடிசத்தங்கள்! ஜம்மு காஷ்மீர் முதல்வர் கண்டனம்..!
ஸ்ரீநகரில் வெடிசத்தங்கள்! ஜம்மு காஷ்மீர் முதல்வர் கண்டனம்..!...
இந்தியாவிற்கு ஆதரவு.. ஆமிர் கான், சைஃபை கொண்டாடும் இந்தியர்கள்..!
இந்தியாவிற்கு ஆதரவு.. ஆமிர் கான், சைஃபை கொண்டாடும் இந்தியர்கள்..!...
போர் ஒப்பந்தத்தை மீறி மீண்டும் தாக்குதல் நடத்த முயன்ற பாகிஸ்தான்!
போர் ஒப்பந்தத்தை மீறி மீண்டும் தாக்குதல் நடத்த முயன்ற பாகிஸ்தான்!...
இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை வரவேற்கும் தலைவர்கள்!
இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை வரவேற்கும் தலைவர்கள்!...
கோடையில் தயிர் ஏன் விரைவாக கெட்டுப்போகிறது? தடுப்பது எப்படி..?
கோடையில் தயிர் ஏன் விரைவாக கெட்டுப்போகிறது? தடுப்பது எப்படி..?...
நடிகர் சூப்பர் குட் சுப்பிரமணி உடல்நல குறைவால் காலமானார்!
நடிகர் சூப்பர் குட் சுப்பிரமணி உடல்நல குறைவால் காலமானார்!...
அடுத்த வாரம் முதல் மீண்டும் ஐபிஎல்... பிசிசிஐ புதிய திட்டம்..?
அடுத்த வாரம் முதல் மீண்டும் ஐபிஎல்... பிசிசிஐ புதிய திட்டம்..?...
இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தம் - இந்திய ராணுவம் விளக்கம்!
இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தம் - இந்திய ராணுவம் விளக்கம்!...