Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
SIR (சிறப்பு தீவிர திருத்தம்)

SIR (சிறப்பு தீவிர திருத்தம்)

பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) நடத்தியது. இதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் 12 மாநிலங்களில் SIR உத்தரவிடப்பட்டது. சிறப்பு தீவிர திருத்தத்தின் (SIR) நோக்கம், வாக்காளர் பட்டியலை மிகவும் வெளிப்படையானதாகவும் துல்லியமாகவும் மாற்றுவதும், போலி அல்லது நகல் உள்ளீடுகளை நீக்குவதும் ஆகும். இது ஒவ்வொரு தனிநபரின் அடையாளம் மற்றும் குடியுரிமையை சரிபார்ப்பதை உறுதி செய்யும். உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, ஆதார் அட்டையும் சேர்க்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஆதார் என்பது குடியுரிமைக்கான சான்றாக அல்ல, அடையாள அட்டையாக மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த செயல்முறையை பல்வேறு எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றன. முதல் கட்டத்தில், SIR (சிறப்பு தீவிர மதிப்பாய்வு) பீகாரில் மட்டுமே நடத்தப்பட்டது. இரண்டாம் கட்டம் 12 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் நடத்தப்படுகிறது: அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், சத்தீஸ்கர், கோவா, குஜராத், கேரளா, லட்சத்தீவுகள், மத்தியப் பிரதேசம், புதுச்சேரி, ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகியவை ஆகும்.

Read More

நாளையுடன் நிறைவடையும் எஸ்ஐஆர் பணிகள்… வாக்காளர்களுக்கு எச்சரிக்கை

Voter List Update: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில், எஸ்ஐஆர் எனப்படும் சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் ஜனவரி 18, 2026 அன்றுடன் முடிவடைவதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

சென்னையில் இரு நாள்கள் வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்…மாநகராட்சி அறிவிப்பு!

Voter List Revision Camp In Chennai: சென்னையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக இரண்டு நாள்கள் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளதாக சென்னை பெருநகர மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதில், பல்வேறு கோரிக்கைகளை படிவங்களை சமர்ப்பித்து பயன் பெறலாம் .

எஸ்.ஐ.ஆர். பணியில் திமுக இரட்டை வேடம்…எதிர்க் கட்சிகள் பரபரப்பு குற்றச்சாட்டு!

DMK Playing Double Role In SIR: சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த பணியில் திராவிட முன்னேற்றக் கழகம் இரட்டை வேடம் போடுவதாக எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. மேலும், இது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையம், தமிழக தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டுமா? இன்றும் நாளையும் சிறப்பு முகாம் – முழு விவரம் உள்ளே..

SIR - Special Camp: இந்த வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க விரும்பினால் படிவம் 6 பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், முதல் முறை வாக்காளர்களும் இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் சூழலில், இதற்கான சிறப்பு முகாம் தமிழக தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் நடந்த வாக்காளர் சிறப்பு தீவிர முகாம்.. 2 நாட்களில் 4.42 லட்சம் பேர் விண்ணப்பம்..

4.42 lakh people applied in special camps: இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த முகாம்களில், 4,42,070 பேர் படிவம்–6 மற்றும் 6A ஆகியவற்றை சமர்ப்பித்துள்ளனர். மேலும், இறந்த 4,741 பேரின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க, அவர்களின் குடும்பத்தினர் படிவம்–7 ஐ அளித்துள்ளனர்.

எஸ்ஐஆர்: 1,255 உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் நியமனம்.. 10 லட்சம் பேருக்கு நோட்டீஸ்!

SIR draft voters list: சரியாக தகவல் அளிக்காத சுமார் 10 லட்சம் வாக்காளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பும் பணியையும் தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. வாக்காளர் விவரங்களை சரிபார்க்க தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ள 13 வகை ஆவணங்களில் தங்களுக்கு பொருந்தக்கூடிய தகுந்த சான்றுகளை வாக்காளர் விசாரணையின்போது சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வாய்ப்பு.. இன்றும், நாளையும் சிறப்பு முகாம்..

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய 4 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கடந்த வாரம் அறிவித்தார். அதன்படி, இந்த சிறப்பு முகாம் டிசம்பர் 27, 28ம் தேதி (இன்று, நாளை) நடைபெறுகிறது.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 4 நாட்கள் சிறப்பு முகாம்.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு

draft voter list: வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாதவர்கள் மற்றும் 18 வயது நிரம்பிய தகுதியானவர்கள் படிவம்-6 மற்றும் உறுதிமொழி படிவத்துடன் விண்ணப்பித்து பெயரைச் சேர்க்கலாம். ஏற்கனவே பட்டியலில் உள்ள பெயர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவோ, தேவையற்ற பெயர்களை நீக்கவோ விரும்புவோர் படிவம்-7 மூலம் விண்ணப்பிக்கலாம்.

SIR படிவத்தை சரியாக பூர்த்தி செய்யவில்லை.. 10 லட்சம் பேருக்கு நோட்டீஸ்.. இடியை இறக்கிய தேர்தல் ஆணையம்!!

Election Commission issue Notice: அவ்வாறு தேர்தல் ஆணைய தரப்பில் இருந்து நோட்டீஸ் பெற்றவர்கள், சம்பந்தப்பட்ட அதிகாரி முன்பு நேரில் ஆஜராகி தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். ஆஜராகாதவர்களின் பெயர் இறுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெறாது என தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடுதான் டாப்.. 4 மாநிலங்களில் மட்டும் 95 லட்சம் பேர் நீக்கம்.. வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணி முழு விவரம்!

95 Lakhs Voters Removed From Voters List | இந்திய தேர்தல் ஆணையம் 2025, நவம்பர் மாதம் தனது வக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகளை தொடங்கிய நிலையில், வரைவு வாக்காளர் பட்டியல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், 4 மாநிலங்களில் மட்டும் சுமார் 95 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

SIR | “தகுதியான ஒரு வாக்காளர் கூட விடுபட்டுவிடக் கூடாது”.. மா.செக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்!

MKStalin advices to dmk district secretaries: வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த விஷயத்தில் திமுக மட்டும் தீவிரமாக செயல்பட்டது. அதிமுகவும், பாஜகவும்கூட எதிர்ப்பில் ஈடுபடவில்லை. அதுவே சந்தேகத்திற்கு இடமளிக்கிறது என்றார். நீக்கப்பட்ட வாக்காளர்களில் நம் ஆதரவாளர்கள் உள்ளனரா என்பதை கவனமாக சரிபார்க்க வேண்டும் என்றார்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விரைவில் சிறப்பு முகாம்.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு

SIR: வரைவு வாக்காளர் பட்டியலில், பெயர் விடுபட்டவர்கள், புதிய முகவரிக்கு குடியேறியவர்கள், அந்தப் பகுதியின் வாக்குச்சாவடி நிலை அலுவலர் முகாமிட்டு இருக்கும் வாக்குச்சாவடிக்கு சென்று 6ஆம் எண் படிவத்தை வாங்கி பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். வாக்காளர் பதிவு அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் ஆகியோரிடமும் படிவத்தை பூர்த்தி செய்து அளிக்கலாம்.

எத்தனை லட்சம் வாக்காளர்கள் நீக்கம்? முதல்வர் ஸ்டாலின், இபிஎஸ் உள்ளிட்ட விஐபி தொகுதிகளின் நிலவரம்!!

voters draft list: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் 2,90,653 வாக்காளர்கள் இருந்தனர். தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில், கொளத்தூர் தொகுதியில் 1,03,812 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். எனவே தற்போதைய நிலையில் 1,86,841 பேர் மட்டுமே வாக்காளர்களாக உள்ளது தெரிய வந்துள்ளது.

பீகார், குஜராத்தை விட தமிழகத்தில் அதிகளவில் வாக்காளர்கள் நீக்கம்.. ஷாக் தகவல்!!

Massive Voter Deletions in Tamil Nadu: தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், 97.38 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளது அரசியல் கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிலும், குறிப்பாக சென்னையில் பெருமளவில் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அதைத்தொடர்ந்து, 9 மாவட்டங்களில் அதிகளவில் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இல்லையா? இப்படி மீண்டும் விண்ணப்பிக்கலாம்!!

வரைவு வாக்காளர் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுவிட்ட நிலையில், ஒவ்வொரு வாக்காளரும் தங்கள் பெயர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதா என்பதை கீழ்க்கண்ட வழி முறைகள் மூலம் சரிபார்த்து அறிந்து கொள்ளலாம். பெயர் விடுப்பட்டவர்கள் விண்ணப்பிக்க ஜன.18ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.