20 விநாடிகளில் முழு உடல் பரிசோதனை: வியப்பில் ஆழ்த்தும் ஏஐ கருவி – மருத்துவ உலகில் பெரும் புரட்சி
Medical AI Update: செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ கருவிகளின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் குயிக் விட்டல் ஏஐ கருவி மூலம் வெறும் 20 விநாடிகளில் முழு உடல் பரிசோதனையை மேற்கொள்ளும். மேலும் இரத்த பரிசோதனைக்கு உங்கள் உடலில் இருந்து இரத்தம் எடுக்க தேவையில்லை.

இன்றைய பரபரப்பான வாழ்க்கையில், உடல்நலப் பரிசோதனைக்கு நேரம் ஒதுக்குவது கடினமாகி வருகிறது. குறிப்பாக இரத்தப் பரிசோதனைகளைப் (Blood Tes) பொறுத்தவரை, ஊசியால் இரத்தம் எடுக்கப்படும் முறை மக்களை இன்னும் பயமுறுத்துகின்றன. பலர் இதைத் தவிர்க்க முயற்சி செய்கிறார்கள். இந்த நிலையில் தற்போது செயற்கை நுண்ணறிவின் உதவியுடன், ஊசி பயன்படுத்தாமல் இரத்தம் சோதிக்கப்படும். முக ஸ்கேன் மூலமாகவே இரத்த பரிசோதனை செய்ய முடியும். இது மட்டுமல்லாமல், உங்கள் உடலைப் பற்றிய பல முக்கியமான தகவல்களை முக ஸ்கேன் மூலம் அறியலாம். இவை அனைத்தும் ஏஐ (AI) மூலம் சாத்தியமாகியிருக்கிறது. சுகாதார துறையில் செயற்கை நுண்ணறிவு புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டுவரப் போகிறது. முக ஸ்கேன் மூலம் உங்கள் உடல்நிலை குறித்து வெறும் 20 வினாடிகளில் தெரிந்துகொள்ளலாம்.
கேமராவை பயன்படுத்தி உடல்நலப் பரிசோதனை
குயிக் விட்டல் (Quick Vital) எனப்படும் ஏஐ அடிப்படையிலான செயலி இப்போது பரிசோதனை முறைகளை முற்றிலும் மாற்றியமைக்கவிருக்கிறது. இந்த செயலி 2024 இல் தொடங்கப்பட்டது. முதன்முதலில் ஹைதராபாத்தின் அரசு மருத்துவமனையான நிலோஃபரில் பயன்படுத்தப்பட்டது. இங்கு கர்ப்பிணிப் பெண்களின் இரத்த சோகையை பரிசோதிக்கப் பயன்படுத்தப்பட்டது, பெரும்பாலானோருக்கு இது மிகத் துல்லியமான முடிவுகளை வழங்கி ஆச்சரியப்படுத்தியிருக்கிறது.
இந்தக் ஏஐ டூல் எப்படி வேலை செய்கிறது?
இந்த பரிசோதனை முறை ஃபோட்டோபிளெதிஸ்மோகிராபி (PPG) என்று அழைக்கப்படுகிறது. நல்ல வெளிச்சத்தில் உங்கள் முகத்தை ஸ்கேன் செய்யும்போது, இந்த செயலி தொலைபேசியின் கேமராவிலிருந்து பிரதிபலிக்கும் ஒளியைப் படம்பிடிக்கிறது. பின்னர் கைடன்ஸ் உதவியுடன், இதயத் துடிப்பு, சுவாசம் மற்றும் இரத்த ஓட்டம் தொடர்பான அறிகுறிகளைப் படிப்பதன் மூலம் அது ஒரு மருத்துவ அறிக்கையை அளிக்கிறது.
20 வினாடிகளில் உடலின் பல பாகங்களை பரிசோதிக்கும்
இந்த ஏஐ தொழில்நுட்பம் உடலின் பல முக்கிய பாகங்கள் பற்றிய தகவல்களை 20 வினாடிகளில் அளிக்கும் ஆற்றல் பெற்றது. இது இரத்த அழுத்தம், ஹீமோகுளோபின் அளவு, இதய துடிப்பு, ஆக்ஸிஜன் அளவு (SpO2), மன அழுத்த அளவு, கொழுப்பு, இதய துடிப்பு (HRV) மற்றும் பாராசிம்பேடிக் செயல்பாடு பற்றிய தகவல்களையும் பகிர்ந்து கொள்ளும். வருங்களாலங்களில் இது மேலும் வளர்ச்சி அடையும் என்பதால் மருத்துவ உலகில் இது பெரும் ஏற்படுத்தப்போகிறது.
இந்தியாவில் பெரும்பாலான பகுதிகள் கிராமங்களாக இருந்து வருகிறது. எனவே பல பகுதிகளில் இரத்த பரிசோதனை வசதிகளோ அல்லது ஆய்வகங்கள் போன்ற வசதிகளோ இருக்காது. இந்த நிலையில் இந்த தொழில்நுட்பம் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். எதிர்காலத்தில், இது ஆரம்ப சுகாதார நிலையங்கள், பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் இதன் மூலம் பரிசோதனை செய்ய முடியும்.
இந்தியாவில், ஒவ்வொரு 10 பெண்களில் 4 பேர் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தகைய சூழ்நிலையில், இரத்தம் எடுக்காமல் விரைவாக பரிசோதனை செய்யமுடியும் என்பதால் இது சரியான நேரத்தில் சிகிச்சை சாத்தியமாகும். இந்த ஏஐ டூல் சுகாதாரத் துறையில், குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் சிறு குழந்தைகளுக்கு, புரட்சியை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் நம்புகின்றனர்.
விரைவில் இந்த தொழில்நுட்பம் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும்
இப்போது இந்த செயலி மகாராஷ்டிராவில் விரிவுபடுத்தப்படுகிறது. விரைவில், 5 வயதுக்குட்பட்ட 1,000 குழந்தைகளிடம் ஒரு மருத்துவ பரிசோதனை நடத்தப்படும், அதில் அதன் முடிவுகள் பாரம்பரிய இரத்த பரிசோதனைகளுடன் ஒப்பிடப்படும். எல்லாம் சரியாக நடந்தால், இந்த தொழில்நுட்பம் முழு நாட்டிலும் சுகாதார பரிசோதனைக்கான எளிதான மற்றும் விலை குறைந்த பரிசோதனை முறையாக மாறும்.