AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

விளையாட்டு வினையானது.. தொண்டையில் பலூன் சிக்கி 6 வயது சிறுவன் பரிதாப பலி.. திருப்பத்தூரில் சோகம்!!

Tragic Incident in Tirupattur: திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே விளையாடிக் கொண்டிருந்த போது பலூன் தொண்டையில் சிக்கி 6 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இரட்டைச் சகோதரர்களில் ஒருவனான சிறுவன் பலூன் ஊதிய போது எதிர்பாராதவிதமாக தொண்டைக்குழியில் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விளையாட்டு வினையானது.. தொண்டையில் பலூன் சிக்கி 6 வயது சிறுவன் பரிதாப பலி.. திருப்பத்தூரில் சோகம்!!
பலியான சிறுவன்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 25 Aug 2026 14:12 PM IST

திருப்பத்தூர், ஆகஸ்ட் 25: சிறு குழந்தைகள் விளையாடும் பொருட்களில் கவனக்குறைவாக இருக்கும் போது ஏற்படும் விபத்துகள் சில சமயங்களில் பெரும் துயரத்தில் முடிந்துவிடுகின்றன. அந்த வகையில், திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி பகுதியில் 6 வயது சிறுவன் ஒருவன் விளையாடிக் கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக பலூன் தொண்டையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்குப் பொம்மைகள் மற்றும் விளையாட்டுக் பொருட்களை வாங்கித் தரும் போது எத்தகைய விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் எச்சரிக்கை மணியாக இச்சம்பவம் அமைந்துள்ளது.

இதையும் படிக்க : “கூட்டணி இல்லையென்றால் ஜெயித்திருக்க முடியுமா?”.. பேரவையில் திமுக-அதிமுக-காங்கிரஸ் இடையே காரசார விவாதம்!!

சம்பவம் குறித்து முழு விவரம்:

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூர் பகுதியைச் சேர்ந்த குமார் – சத்யா தம்பதியினருக்கு ஐந்து குழந்தைகள் உள்ளனர். இதில் மூன்று ஆண் குழந்தைகளும் இரண்டு பெண் குழந்தைகளும் அடங்குவர். இந்நிலையில், இவர்களது மகன்களான சோம்நாத் மற்றும் சேஷாந்த் ஆகிய இரட்டைச் சகோதரர்கள் இருவரும் வீட்டில் இருந்த பலூன்களை எடுத்து ஊதி விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, 6 வயதான சோம்நாத் பலூனை ஆசையோடு வாயில் வைத்து ஊதிக்கொண்டிருந்த வேளையில், அது எதிர்பாராதவிதமாக அவனது தொண்டைக் குழியில் சென்று சிக்கிக் கொண்டது.

மருத்துவமனையில் பரிசோதனை:

பலூன் தொண்டையில் சிக்கியதால் சிறுவன் சோம்நாத் மூச்சு விட முடியாமல் திணறி துடித்துள்ளான். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள், உடனடியாக அவனைக் மீட்டு நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர். அங்குச் சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள், மூச்சுத்திணறல் காரணமாகச் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து, சிறுவனின் தொண்டைக் குழியில் அடைத்துக்கொண்டிருந்த பலூனை அகற்றிய மருத்துவர்கள், உடற்கூறாய்வு பரிசோதனைக்காகச் சிறுவனின் உடலைக் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிக்க: “பரந்தூர் விமான நிலைய திட்டம் குறித்து பேரவையில் காரசார விவாதம்”.. ‘ஜி-ஸ்கொயர் மாப்பிள்ளை’ vs ‘லாட்டரி மருமகன்’ வார்த்தை மோதலால் பரபரப்பு!

போலீசார் தீவிர விசாரணை:

வீட்டில் ஊதி விளையாடிய பலூனே சிறுவனின் உயிரைப் பறித்த இந்தச் சோகச் சம்பவம் நாட்டறம்பள்ளி மற்றும் பச்சூர் பகுதியில் பெரும் சோக அலையை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறிய வயதுக் குழந்தைகளுக்குப் பலூன் உள்ளிட்ட காற்றடைக்கும் பொம்மைகளைக் கொடுக்கும் போது பெற்றோர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பதை இச்சம்பவம் மீண்டும் வலியுறுத்துகிறது.

Follow Us