திருவாரூர்: கோவிலில் பள்ளம் தோண்டிய போது கிடைத்த அம்மன் சிலைகள்… பக்தர்கள் பரவசம்

Thiruvarur Temple Excavation: திருவாரூர் மாவட்டம், மாத்தூரில் பழைய கோவில் இடத்தில் அகழ்வாராய்ச்சிப் பணியின் போது, 1½ அடி மற்றும் 1 அடி உயரமுள்ள இரண்டு அம்மன் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவை உலோகத்தால் செய்யப்பட்டவை எனக் கூறப்படுகிறது. சம்பவ இடம் கிராம நிர்வாக அலுவலருக்கும், தொல்லியல் துறைக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவாரூர்: கோவிலில் பள்ளம் தோண்டிய போது கிடைத்த அம்மன் சிலைகள்... பக்தர்கள் பரவசம்

அம்மன் சிலைகள் கண்டுபிடிப்பு

Published: 

21 Jul 2025 07:50 AM

 IST

திருவாரூர் ஜூலை 21: திருவாரூர் மாவட்டம் (Thiruvarur District) மாத்தூர் பகுதியில் பழைய கோவில் இடத்தில் பள்ளம் தோண்டும் பணியில் 2 அம்மன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன (2 Amman idols found). 1½ அடி மற்றும் 1 அடி உயரமுள்ள சிலைகள் உலோகத்தில் செய்யப்பட்டவை என கூறப்படுகிறது. பணியின் போது மண்ணுக்குள் இருந்து சத்தம் கேட்கப்பட்டதையடுத்து அவை தோண்டி கண்டுபிடிக்கப்பட்டன. இது குறித்து கிராம நிர்வாக அலுவலருக்கு தெரிவிக்கப்பட்டு அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்தனர். சிலைகள் எந்த காலத்தைச் சேர்ந்தவை என்பது தொல்லியல் துறையின் (Department of Archaeology) ஆய்வுக்கு பின் தெரியவரும். இந்த செய்தியை அறிந்த மக்கள் கூடிவந்து சிலைகளை வணங்கி சென்றனர்.

அண்மைக்காலமாக கிடைக்கும் சிலைகள்

தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளில் நடைபெற்று வந்த பள்ளம் தோண்டும் பணிகள், விவசாய வேலைகள் மற்றும் வீடு கட்டும் நடவடிக்கைகளின் போது பல பண்டைய சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை தமிழ்நாட்டின் கலாசாரப் பெருமையை வெளிப்படுத்தும் வகையில் தொல்லியல் துறையிலும், பாதுகாப்பு விசாரணைகளிலும் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

Also Read: மழை காலத்தில் வீடுகளுக்குள் தண்ணீர் வந்தால் எங்கே செல்வது? வெளியான அறிவிப்பு

2024 ஜூன் மாதம், தஞ்சாவூரில் ஒரு வீட்டின் அடித்தளம் தோண்டும் பணிக்கிடையில், பஞ்சலோகம் (ஐந்து உலோக கலவை) மூலம் உருவாக்கப்பட்ட 13 சிலைகள், அம்மன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. இவை அனைத்தும் தொல்லியல் ஆய்வுக்காக இந்திய தொல்லியல் ஆய்வு கழகத்திடம் (ASI) அனுப்பப்பட்டன. 2023 அக்டோபரில் தஞ்சாவூர் பெரிய கோவில் அருகேயுள்ள GA கால்வாயில் பக்தர்கள் ஒரு 3 அடி உயரம் கொண்ட கருங்கல் அம்மன் சிலையை கண்டெடுத்தனர்.

கோவில் பணியின் போது கிடைத்த அம்மன் சிலை

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா வேலங்குடி ஊராட்சி வடகரை மாத்தூரில் அமைந்துள்ள பழமையான காசி விஸ்வநாதர் கோவில் சிதிலமடைந்த நிலையில் காணப்பட்டதையடுத்து, அந்தப் பகுதி பொதுமக்கள் புதிய கோவில் கட்டும் பணி மேற்கொண்டனர். இந்த பணியின் ஒரு பகுதியாக 2025 ஜூலை 20 நேற்று பள்ளம் தோண்டும் வேலைகள் நடைபெற்று வந்தபோது, மண்ணுக்குள் இருந்து சத்தம் கேட்கப்பட்டது. அந்த இடத்தில் ஆழமாக தோண்டியபோது, உலோகத்தால் செய்யப்பட்ட 1½ அடி மற்றும் 1 அடி உயரமுள்ள இரண்டு அம்மன் சிலைகள் மற்றும் சில பூஜை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.

Also Read: ஆண் நண்பருடன் பேசிய பெண்.. ஆத்திரத்தில் குத்திக் கொன்ற காதலன்.. 

விஏஓ மற்றும் தொல்லியல் துறைக்கும் தகவல்

உடனடியாக கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, பின்னர் நன்னிலம் தாசில்தார் ராமச்சந்திரன் மற்றும் இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து, சிலைகளையும் பூஜைப் பொருட்களையும் நேரில் பார்வையிட்டனர். தொடர்ந்து, இவை குறித்து தொல்லியல் துறைக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த சிலைகள் எந்த காலத்தைச் சேர்ந்தவை? அவை ஐம்பொன்சிலைகளா? என்பது தொல்லியல் துறையின் ஆய்வுக்குப் பிறகு உறுதி செய்யப்படும். இதனை அறிந்தவுடன், மாத்தூர் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் திரண்டுவந்து, அதிநிதியாய் கண்டெடுக்கப்பட்ட அம்மன் சிலைகளை வணங்கிக் கொண்டிருக்கின்றனர்.

பலத்த காற்றால் சாய்ந்த சுதந்திர தேவி சிலை - பிரேசிலில் ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம்
கைலாச மலை – யாரும் ஏற முடியாத தீராத மர்மம்
எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பயோபிக்கில் நடிக்கும் சாய் பல்லவி?
ஜிம்மில் பயிற்சி செய்தபோது திடீரென பார்வை இழந்த 27 வயது இளைஞர்