AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மின் வினியோகம் துண்டிக்கப்பட்டால் நுகர்வோருக்கு காரணம் சொல்லுங்க…

TANGEDCO: வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் மின் இணைப்புகள் துண்டிக்கப்படும் போது, அதன் காரணத்தை உடனடியாக எஸ்எம்எஸ் அல்லது வாட்ஸ்அப் மூலம் நுகர்வோருக்கு அறிவிக்க வேண்டும் என மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின்வாரியத்துக்கு கடும் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகம் முழுதும் மின் வினியோகம் செய்யும் பணியை, மின்வாரியம் மட்டுமே மேற்கொள்கிறது.

மின் வினியோகம் துண்டிக்கப்பட்டால் நுகர்வோருக்கு காரணம் சொல்லுங்க…
மின் இணைப்பு துண்டிப்பு Image Source: pinrest
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 25 Apr 2025 06:47 AM IST

சென்னை ஏப்ரல் 25: வீடுகள் மற்றும் வணிக இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டால் (power connection is disconnected), அதன் காரணத்தை எஸ்எம்எஸ் அல்லது வாட்ஸ்அப் (SMS or WhatsApp) மூலம் நுகர்வோருக்கு தெரிவிக்க வேண்டும் என மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (Electricity Regulatory Commission) மின்வாரியத்திற்கு உத்தரவிட்டுள்ளது. மின் இணைப்புக்கு விண்ணப்பிக்கும் முறை எளிமைப்படுத்தப்பட்ட மென்பொருள் மூலம் அமைய வேண்டும் என்றும், சந்தேகங்களுக்கு உடனடி பதில் கிடைக்கும் வசதியும் சேர்க்கப்பட வேண்டும். தொழிற்சாலைகளில் உச்சநேர மின் பயன்பாட்டை கணக்கிட, மீட்டர் பொருத்த வேண்டும். அனைத்து ஆன்லைன் விண்ணப்பங்களுக்குமான ஆவண அளவு குறைந்தபட்சம் 5 எம்பியாக உயர்த்தப்பட வேண்டும்.

மின் கட்டணம் செலுத்தாத நிலையில், இணைப்பு துண்டிக்கப்பட்டால் அதன் விபரங்கள் நேரடியாக நுகர்வோருக்கு அனுப்பப்பட வேண்டும். தவறான பதிவுகள் காரணமாக அதிக அபராதம் விதிக்கப்படுவதைத் தவிர்க்க, மின் துண்டிப்பு தகவல் தெளிவாக தெரிவிக்கப்படும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மின் சேவை குறித்து ஆய்வு

தமிழகம் முழுவதும் மின்சார விநியோகம் செய்யும் பணியை மின்வாரியம் ஒரே வகையில் மேற்கொண்டு வருகிறது. இப்பணிகள் எப்படி செயல்படுகின்றன என்பதைப் பற்றி அதிகாரிகளுடன் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் விரிவான ஆய்வு மேற்கொண்டது. இந்த சந்திப்பில், மின்வாரியத்தின் சேவைகளை மேம்படுத்தும் வகையில் பல முக்கிய உத்தரவுகள் வழங்கப்பட்டன.

விண்ணப்ப முறைகளில் மாற்றம் வேண்டும்

ஆணைய அதிகாரிகள் தெரிவித்ததாவது, புதிய மின் இணைப்பு உள்ளிட்ட அனைத்து சேவைகளுக்கும் விண்ணப்பங்கள் மின்வாரிய இணையதளம் மூலமாக மட்டுமே பெறப்பட வேண்டும். இதற்காக எளிமையான மென்பொருள் உருவாக்கப்பட வேண்டும். மேலும், விண்ணப்பிக்கும் போது சந்தேகம் ஏற்பட்டால் அதற்கான பதில்கள் உடனே கிடைக்கும் வகையில் கேள்வி-பதில் அடிப்படையிலான சேவையும் மென்பொருளில் சேர்க்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தனர்.

தொழிற்சாலைகளுக்கு உச்சநேர கண்காணிப்பு

தாழ்வழுத்த மின்விநியோக பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் உச்சநேர மின்பயன்பாட்டை கண்காணிக்க தகுந்த வகையில் மீட்டர் பொருத்த வேண்டும். கட்டுமான பணி முடிந்ததும் தற்காலிக இணைப்பிலிருந்து நிரந்தர இணைப்புக்கு ஆன்லைனில் மாற்ற வசதி வழங்கப்பட வேண்டும்.

ஆவண அளவு மற்றும் கட்டண பிணைப்பு

விண்ணப்பதாரர்கள் இணையதளத்தில் பதிவேற்றும் ஆவணங்களின் அளவு குறைவாக இருப்பதால், அதை குறைந்தபட்சம் 5 எம்பி வரை உயர்த்த வேண்டும். மேலும், மின்கட்டணம் செலுத்தப்படாவிட்டால், மின்விநியோகம் துண்டிக்கப்படும். ஆனால், இது பற்றிய தகவல் வீடுகளில் யாரும் இல்லாதபோது நுகர்வோருக்கு தெரிவிக்கப்படவில்லை என்பதாலும், பலர் அபராதம் செலுத்தும் நிலை ஏற்படுகிறது.

துண்டிப்பு பதிவும் சரியான செயல்பாடும்

சில நேரங்களில், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது என்று அலுவலக கணினியில் பதிவு செய்யப்பட்டாலும், செயல்பட மறுக்கப்படுவதால் நுகர்வோர் குழப்பத்தில் விழுகிறார்கள். இதனால் அதிக அபராதம் செலுத்தும் நிலை உருவாகிறது. இதனைத் தவிர்க்க, மின்விநியோகம் துண்டிக்கப்படும் போதெல்லாம் அதற்கான காரணத்துடன், எஸ்எம்எஸ் அல்லது வாட்ஸ்அப் மூலமாக நுகர்வோருக்கு கட்டாயமாக தகவல் தெரிவிக்க வேண்டும் என மின்வாரியத்திற்கு ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

Follow Us