AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பெண்கள் உயிரிழப்பில் அரசு அமைதி காப்பது ஏன்? தமிழிசை கேள்வி

Tamilisai Soundararajan Criticizes: உகாதி விழாவில் தமிழிசை சௌந்தரராஜன் அரசியல் விமர்சனம் முன்வைத்தார். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்த குற்றச்சாட்டு எழுப்பினார். திமுக கூட்டணி மற்றும் மொழி விவகாரங்களில் கடுமையான விமர்சனம் செய்தார். பெண்கள் உயிரிழப்பு சம்பவங்களில் அரசியல் கட்சிகள் மௌனம் காக்கின்றன என விமர்சித்தார்.

பெண்கள் உயிரிழப்பில் அரசு அமைதி காப்பது ஏன்? தமிழிசை கேள்வி
தமிழிசை செய்தியாளர் சந்திப்பு Image Source: x
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 19 Mar 2026 16:40 PM IST

தமிழிசை சௌந்தரராஜன் உகாதி விழாவில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தார். திராவிடம் அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்தப்படுகிறது என குற்றம்சாட்டினார். ஸ்டாலின், உதயநிதி மீது பிரிவினை உருவாக்கும் விமர்சனம் முன்வைத்தார். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பாதிப்பு, பெண்கள் பாதுகாப்பு இல்லை என கூறினார். திமுக கூட்டணியில் தொகுதி அழுத்தம் உள்ளது என குற்றம்சாட்டினார். பெண்கள் உயிரிழப்பு சம்பவங்களில் அரசியல் கட்சிகள் மௌனம் காக்கின்றன என விமர்சித்தார்.

உகாதி விழா மற்றும் வாழ்த்து

சென்னையில் தமிழக பாஜக மாநில தேர்தல் அலுவலகத்தில் இன்று தெலுங்கு புத்தாண்டான உகாதி விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன், தமிழகத்தில் வசிக்கும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்தார். பல மொழிகள் பேசும் மக்கள் ஒன்றிணைந்து வாழும் மாநிலமாக தமிழகத்தை அவர் குறிப்பிட்டார். மொழி வேறுபாடு இருந்தாலும் மக்கள் ஒற்றுமையுடன் வாழ்வது மாநிலத்தின் பலமாகும் என்றார்.

திராவிடம் மற்றும் தமிழர் அடையாளம் குறித்த குற்றச்சாட்டு

சென்னையை மையமாகக் கொண்டு பல்வேறு மொழி பேசும் மக்கள் இணைந்து வாழும் சூழலில், அனைவரையும் ஒன்றிணைக்கும் கருத்தாக இருந்த திராவிடம் தற்போது அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்தப்படுவதாக தமிழிசை குற்றம்சாட்டினார். இதன் காரணமாக தமிழர் அடையாளம் மங்கிக்கொண்டிருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார். இந்த நிலைமை மாநிலத்தின் பண்பாட்டு அடையாளத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்தார்.

ஸ்டாலின், உதயநிதி குறித்து விமர்சனம்

முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் யுகாதி வாழ்த்துக்களிலும் கூட பிரிவினையை உருவாக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டுள்ளதாக தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்தார். தமிழர்களின் அடையாளம் மெல்ல மங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். கீழடி ஆய்வுக்காக முதன்முதலில் அதிக நிதி ஒதுக்கியது பிரதமர் மோடிதான் என்றும், அந்த உண்மையை மறைத்து வேறு விதமாக கூறப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

இந்தி மொழி விவகாரம் மற்றும் சட்டம்-ஒழுங்கு குற்றச்சாட்டு

இந்தி மொழி தொடர்பான விவகாரத்தில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை சில அரசியல் தரப்புகள் தங்கள் ஆதாயத்திற்காக பயன்படுத்தி குழப்பத்தை ஏற்படுத்துகின்றன என்று தமிழிசை தெரிவித்தார். இதை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். விளாத்திகுளம் சம்பவத்தை குறிப்பிட்டு, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

கூட்டணி அரசியல் மற்றும் தொகுதி விவகாரம்

திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு எந்த அழுத்தமும் இல்லை என்ற கூற்று உண்மைக்கு புறம்பானது என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார். முன்பு ஆறு தொகுதிகளில் போட்டியிட்ட கம்யூனிஸ்ட் கட்சி தற்போது ஐந்து தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுவது இதற்கு எடுத்துக்காட்டாகும் என்றார். பாஜகவை காரணம் காட்டி கூட்டணி கட்சிகளின் தொகுதிகள் குறைக்கப்படுகின்றன என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

Also Read: திமுகவுடன் சின்னம் தொடர்பான சர்ச்சை – என்ன முடிவெடுக்கப்போகிறார் கமல்?

பெண்கள் பாதுகாப்பு மற்றும் அரசியல் விமர்சனம்

பெண்களை இழிவாக பேசுவது தவறு என்றும் அதனை கண்டிப்பதாகவும் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார். அதே நேரத்தில், விளாத்திகுளம் மாணவி படுகொலை சம்பவத்தில் திமுக கூட்டணி கட்சிகள் கண்டனம் தெரிவிக்காததை அவர் சுட்டிக்காட்டினார். ஒரு வார்த்தை தவறாக பேசப்பட்டதற்காக போராட்டம் நடத்தும் அரசியல் கட்சிகள், பெண்கள் உயிரிழப்பு சம்பவங்களில் மௌனம் காக்கின்றன என்பது வேதனை அளிப்பதாகவும் அவர் விமர்சித்தார்.

பாஜக தேர்தல் அறிக்கை நிலை

பாஜக தேர்தல் அறிக்கை தற்போது இறுதி கட்டத்தில் உள்ளதாகவும், அது இன்று மாலை மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனிடம் ஒப்படைக்கப்படும் என்றும் தமிழிசை தெரிவித்தார். இந்த அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.

Follow Us