Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி.. 4 நாட்களுக்கு கொட்டப்போகும் கனமழை.. வானிலை அப்டேட்!

Tamil Nadu Weather Update : தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வரும் நிலையில், வட மாவட்டங்களான கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி.. 4 நாட்களுக்கு கொட்டப்போகும் கனமழை..   வானிலை அப்டேட்!
தமிழகத்தில் மழைImage Source: PTI
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 15 Sep 2025 06:32 AM IST

சென்னை, செப்டம்பர் 15 :  தமிழகத்தில்  அடுத்த நான்கு தினங்களுக்கு கனமழை தொடரும் என வானிலை மையம்(Tamil Nadu Weather) தெரிவித்துள்ளது. குறிப்பாக, சென்னை அருகே வட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. அதற்கு முன்பாகவே தற்போது தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, வட மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.  தலைநகர் சென்னையை பொறுத்தவரை, மாலை  மற்றும் இரவு நோங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த நிலையில், அடுத்த சில தினங்களுக்கான வானிலை நிலவரத்தை பார்ப்போம்.

வடக்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஒரிசா கடலோரப் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, வடக்கு தெலங்கானா மற்றும் அதனை ஒட்டிய விதர்பா பகுதிகளில் நிலவியது. இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து, மத்திய விதர்பா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளுக்கு நகரக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் 2025 செப்டம்பர் 15ஆம் தேதி 20ஆம் தேதி ஒருசில மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக் கூடும். மேலும், வட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

Also Read : அலர்ட் மக்களே… வரப்போகும் அடுத்தடுத்து 2 புயல்கள்.. வெதர்மேன் சொன்ன தகவல்!

4 நாட்களுக்கு கனமழை அலர்ட்


2025 செப்டம்பர் 16ஆம் தேதி ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும். 2025 செப்டம்பர் 17ஆம் தேதி தருமபுரி, திருப்பத்தூர், சேலம், ராணிப்பேட், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

2025 செப்டம்பர் 18ஆம் தேதி திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் கூறியுள்ளது. மேலும், 2025 செப்டம்பர் 19ஆம் தேதி திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம் பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read : செப். 16 முதல் ரெடியா இருங்க.. வெளுக்கப்போகும் கனமழை.. எந்தெந்த மாவட்டங்களில்?

அடுத்து வரும் சில நாட்களுக்கு தொடர்ச்சியான மழை இருக்கும் என்றாலும், தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒரு சில இடங்களில் இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதியை பொறுத்தவரை, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், நகரின் சில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது