பிச்சு உதறபோகும் கனமழை.. அடுத்த 4 நாட்களுக்கு அலர்ட்.. எந்தெந்த மாவட்டங்கள்?

Tamil Nadu Weather Update : தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், சென்னையை பொறுத்தவரை 2025 அக்டோபர் 6ஆம் தேதியான இன்று இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும்.

பிச்சு உதறபோகும் கனமழை.. அடுத்த 4 நாட்களுக்கு அலர்ட்.. எந்தெந்த மாவட்டங்கள்?

தமிழகத்தில் மழை

Published: 

06 Oct 2025 06:20 AM

 IST

சென்னை, அக்டோபர் 06 : தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், சென்னையில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, வட மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. சென்னையை பொறுத்தவரை விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இன்னும் சில வாரங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், அடுத்த சில தினங்களுக்கான வானிலை நிலவரத்தை பார்ப்போம். வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு அரபிக் கடல் பகுதிகளில நிலவிய சக்தி புயல் மேற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்து, வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் நிலவியது. இது தற்போது துவாரகாவிலிருந்து மேற்கே சுமார் 820 கி.மீ தொலைவில் நிலைக்கொண்டுள்ளது.

இது அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் மேற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக வலுவிழக்க கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது. மேலும், தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக, தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு கனம பெய்ய வாய்ப்புள்ளது. 2025 அக்டோபர் 6ஆம் தேதி திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

Also Read : இன்று இந்த 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – சென்னை வானிலை மையம் எச்சரிக்கை

அடுத்த 4 நாட்களுக்கு அலர்ட்

2025 அக்டோபர் 7ஆம் தேதி கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும். 2025 அக்டோபர் 8ஆம் தேதி கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, திருச்சி, சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

2025 அக்டோபர் 9ம் தேதி கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை இயல்பை விட அதிகமாக இருக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. வெளுக்கப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்களில்?

சென்னையை பொறுத்தவரை நகரின் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துளளது. மேலும், அதிகபட்ச வெப்பநிலை 34 முதல் 35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என வானிலை மையம் கூறியுள்ளது.