Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்தில் வெளுக்கும் கனமழை.. வானிலை மையம் அலர்ட்

Tamil Nadu Weather Update : வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யக் கூடும் எனவும், சென்னையில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்தில் வெளுக்கும் கனமழை.. வானிலை மையம் அலர்ட்
மழைImage Source: PTI
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 26 Jun 2025 15:17 PM

சென்னை, ஜூன் 26 :  வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என்று வானிலை மையம் (Tamil Nadu Weather Forecast) தெரிவித்துள்ளது. இதனால், தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு கனமழை (Tamil Nadu Rains) பெய்யக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோடை வெயில் அதிகமாக இருக்கும் மே மாதத்தில் மழை வெளுத்து வாங்கியது. அதே நேரத்தில் மழை தொடங்க இருக்கும் ஜூன் மாதத்தில் வெயில் கொளுத்தி எடுத்து வருகிறது. 2025 மே மாதம் முழுவதும் மழை பெய்தது. இதனை அடுத்து, 2025 ஜூன் மாதத்தில் மழை பொழிவு குறைந்து வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இருப்பினும், சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி

இந்த நிலையில், அடுத்த சில தினங்களுக்கான வானிலை நிலவரத்தை பார்ப்போம். அதன்படி, 2025 ஜூன் 26ஆம் தேதியான இன்று, வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என வானிலை  மையம் தெரிவித்துள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் ஒடிசா – மேற்கு வங்காள கடலோரப்பகுதிகளை கடந்து நகரக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் 2025 ஜூலை 2ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வெளுக்கும் கனமழை


மேலும், 2025 ஜூன் 26ஆம் தேதி கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் கன முதல் மிக கனமழையும், திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், கன்னியாகுமரி, தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் கனமழையும் பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

2025 ஜூன் 27,28ஆம் தேதிகளில் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், மற்ற இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை பொறுத்தவரை, 2025 ஜூன் 26,27ஆம் தேதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36 முதல் 37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 முதல் 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும் என கூறப்பட்டுள்ளது.