Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்வீடியோ

தமிழ்நாடு: டாஸ்மாக் கடையால் பிரச்னையா? ஒரு புகார் போதும்.. 30 நாட்களில் நடவடிக்கை

Tamil Nadu Tasmac Shops: தமிழகத்தில் உள்ள 4777 டாஸ்மாக் கடைகள் பள்ளி, மருத்துவமனை, கோவில் போன்றவற்றிலிருந்து குறிப்பிட்ட தூரத்தில் இருக்க வேண்டும் என்ற விதிமுறை இருந்தாலும், பல கடைகள் விதிகளை மீறி இயங்குகின்றன. பொதுமக்கள் இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கலாம். புதிய விதிமுறையின்படி, புகார்கள் குறித்து 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு: டாஸ்மாக் கடையால் பிரச்னையா? ஒரு புகார் போதும்.. 30 நாட்களில் நடவடிக்கை
புகாருக்கு 30 நாளில் தீர்வு தர அரசு உத்தரவுImage Source: social media
sivasankari-bose
Sivasankari Bose | Published: 18 Jun 2025 11:03 AM

தமிழ்நாடு ஜூன் 18: தமிழகத்தில் (Tamilnadu) 4,777 டாஸ்மாக் மதுபான கடைகள் (Tasmac Shops) செயல்பட்டு வருகின்றன. இவை பள்ளி, மருத்துவமனை, கோவில் ஆகியவற்றில் இருந்து நகரில் 50 மீட்டரும், கிராமங்களில் 100 மீட்டரும் தொலைவில் இருக்க வேண்டும். இந்த விதிகளை மீறி பல கடைகள் இயங்குகின்றன. இவற்றை அகற்ற பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கலாம். புதிய விதிமுறையின்படி, கடைக்கு பிறகு அமைந்த பள்ளி, கோவில் இருந்தாலும் புகார் வந்தால் 30 நாட்களில் நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவு (District Collector action) பிறப்பிக்க வேண்டும் எனவும் தடை செய்யப்பட்ட பகுதிகளில் இயங்கும் டாஸ்மாக் கடைகள் உடனடியாக அகற்றப்படும் எனவும் தமிழக அரசு (Tamilnadu Government) தெரிவித்துள்ளது.

டாஸ்மாக் கடைகளுக்கான புதிய விதிமுறை

தமிழகத்தில் மொத்தமாக 4,777 டாஸ்மாக் மதுபானக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இக்கடைகள் கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள், வழிபாட்டு தலங்கள் ஆகியவற்றின் அருகில் அமைக்கப்பட கூடாது என்ற நடைமுறையில் நகரப்பகுதிகளில் 50 மீட்டர் மற்றும் கிராமப்பகுதிகளில் 100 மீட்டர் தொலைவில் அமைக்கப்பட வேண்டும். இருந்தாலும், பல இடங்களில் இந்த விதிகளை மீறி கடைகள் இயங்கும் நிலை காணப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக பொதுமக்கள் மாவட்ட கலெக்டர்களிடம் முறையீடு செய்யலாம். ஆனால், சில இடங்களில் டாஸ்மாக் கடைகள் வந்த பிறகே பள்ளிகள், கோவில்கள் அமைக்கப்பட்டதால், இத்தகைய கடைகளை அகற்றும் பணியில் தடைகள் ஏற்பட்டன.

கலெக்டர்களுக்கு உத்தரவு

புகாருக்கு 30 நாளில் தீர்வு தர அரசு உத்தரவு

இதனை தீர்க்க, தமிழக அரசு விதிகளை திருத்தியுள்ளது. புதிதாக வெளியிடப்பட்ட உள்துறை உத்தரவின் படி, டாஸ்மாக் கடைகள் அருகில் கல்வி நிலையங்கள் அல்லது வழிபாட்டு தலங்கள் பிறகு அமைக்கப்பட்டிருந்தாலும், அந்த கடைகளைப் பற்றி புகார்கள் வந்தால், மாவட்ட ஆட்சியர் 30 நாட்களுக்குள் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆட்சியரின் கட்டுப்பாட்டில் உடனடியாக அகற்ற வேண்டும்

இதனுடன், தடை செய்யப்பட்ட பகுதிகளில் அல்லது மக்கள் எதிர்ப்பு வலியிடங்களில் டாஸ்மாக் கடைகள் இயங்கினால், அவற்றை மாவட்ட ஆட்சியரின் கட்டுப்பாட்டில் உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த மாற்றம் மூலம், பொதுமக்களின் நலன் மற்றும் சமூக அமைதியை பாதுகாப்பது நோக்கமாக தமிழக அரசு முன்வந்துள்ளது.

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள்

தமிழகத்தில் தற்போது மொத்தம் 4,777 டாஸ்மாக் (TASMAC) மதுபானக் கடைகள் இயங்குகின்றன. புதிய டாஸ்மாக் கடைகள் அமைக்கும் போது, நகர்ப்புறங்களில் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் வழிபாட்டு தலங்களிலிருந்து குறைந்தபட்சம் 50 மீட்டர் மற்றும் கிராமப்புறங்களில் 100 மீட்டர் தூரத்தில் இருக்க வேண்டும் என விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

இந்த விதிகள் மீறப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், புதிய கட்டுப்பாடுகள் குறித்து அரசு பரிசீலனை நடத்தி வருகிறது. மக்கள் எதிர்ப்பை எதிர்நோக்கிய சில கடைகள் மூடப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

’நாங்க சரணடைய மாட்டோம்' அமெரிக்காவை எச்சரித்த ஈரான்
’நாங்க சரணடைய மாட்டோம்' அமெரிக்காவை எச்சரித்த ஈரான்...
இபிஎஸ் பற்றி கருத்து.. முதலமைச்சருக்கு ஆர்.பி. உதயகுமார் பதிலடி!
இபிஎஸ் பற்றி கருத்து.. முதலமைச்சருக்கு ஆர்.பி. உதயகுமார் பதிலடி!...
இங்கிலாந்து மண்ணில் இந்திய வீரர்கள் படைக்கவுள்ள சாதனைகள்!
இங்கிலாந்து மண்ணில் இந்திய வீரர்கள் படைக்கவுள்ள சாதனைகள்!...
இலவச ரயில் பயணத்துக்காக மாற்றுத்திறனாளி போல் நடித்த நபர்!
இலவச ரயில் பயணத்துக்காக மாற்றுத்திறனாளி போல் நடித்த நபர்!...
தனுஷின் குபேரா படத்திற்கு யு/ஏ கொடுத்த சென்சார் போர்டு
தனுஷின் குபேரா படத்திற்கு யு/ஏ கொடுத்த சென்சார் போர்டு...
பாஸ்டேக் வருடாந்திர பாஸ் அறிமுகம்.. மத்திய அமைச்சர் அறிவிப்பு
பாஸ்டேக் வருடாந்திர பாஸ் அறிமுகம்.. மத்திய அமைச்சர் அறிவிப்பு...
திருமண தடையை போக்கும் கன்னியாகுமரி பகவதி அம்மன் வழிபாடு!
திருமண தடையை போக்கும் கன்னியாகுமரி பகவதி அம்மன் வழிபாடு!...
சிப் திட்டத்தில் 5 ஆண்டுகளில் ரூ.20 லட்சம் சேமிப்பது எப்படி ?
சிப் திட்டத்தில் 5 ஆண்டுகளில் ரூ.20 லட்சம் சேமிப்பது எப்படி ?...
கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அதிகமாக முடி உதிர காரணம் என்ன..?
கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அதிகமாக முடி உதிர காரணம் என்ன..?...
சென்னையில் மினி பேருந்து சேவை.. எங்கெங்கு தெரியுமா?
சென்னையில் மினி பேருந்து சேவை.. எங்கெங்கு தெரியுமா?...
வாகனத்தில் இருந்து தவறி விழுந்த சிறுமி.. பறிபோன உயிர்
வாகனத்தில் இருந்து தவறி விழுந்த சிறுமி.. பறிபோன உயிர்...