Tamil Nadu News Live Updates: ஊர் ஊராக சென்று பொய் பிரச்சாரம் செய்யும் எடப்பாடி பழனிசாமி – மு.க. ஸ்டாலின்..
Tamil Nadu Breaking news Today 03 August 2025, Live Updates: ஊர் ஊராக சென்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பொய் பிரச்சாரம் மேற்கொண்டு வருவதாக தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு செய்திகள்
LIVE NEWS & UPDATES
-
நெல்லை ஆணவப்படுகொலை.. வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்..
நெல்லை ஆணவப்படுகொலை வழக்கில் சுர்ஜித்தை கைது செய்த காவல் துறையினர், சம்பந்தப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் தம்பதிகளான சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி அதாவது சுபாஷினியின் தாய் மற்றும் தந்தை ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடியிடம் மாற்றப்பட்டது.
-
நெல்லை ஆணவப்படுகொலை நடந்தது என்ன?
ஜூலை 27 2025 தேதி அன்று பாளையங்கோட்டை மருத்துவமனைக்கு தனது தாத்தாவை அழைத்து வந்த கவிணை சுர்ஜித் தனியாக பேச்சுவார்த்தைக்காக அழைத்துச் சென்றார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படவே சுர்ஜித் மறைத்து வைத்திருந்த அறிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்து தப்பித்து ஓடியுள்ளார்.
-
இணையத்தில் ஏற்பட்ட காதல்.. 25 சவரன் நகையை பறித்த காதலன்..
விருதுநகர் மாவட்டத்தில் இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட பழகத்தின் காரணமாக சுமார் 25 சவரன் நகையை காதலனுக்கு கொடுத்துள்ளார். சந்தேகம் ஏற்பட்டு நகையை திருப்பி கேட்டப்போது அந்த நபர் தர மறுத்ததால் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் படிக்க
-
இன்ஸ்டாகிராம் காதல் மூலம் 25 சவரன் நகையை பறிகொடுத்த சம்பவம்
இன்ஸ்டாகிராம் காதல் மூலம் 25 சவரன் நகையை பறிகொடுத்த சம்பவம் தமிழகத்தில் நடந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவருக்கு, கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த விவின் என்ற 22 வயது நபருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அவரிடம் இருந்து விவின் கொஞ்சம் கொஞ்சமாக நகையை வாங்கியுள்ளார்.
-
மூச்சுத்திண்றி உயிரிழந்த குழந்தை
வீட்டின் குளியல் அறையில் உள்ள தண்ணீர் வாளியில் குழந்தை தீக்ஷா தலை குப்புற கவிழ்ந்து மூச்சுத்திணறி கிடந்துள்ளது. இதனை கண்ட தாய் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்
-
தண்ணீரில் வாளியில் மூழ்கி 1வயது குழந்தை பலி
சென்னை வானகரம் பகுதியில் 1 வயது பெண் குழந்தை, கழிவறையில் இருந்த தண்ணீர் வாளியில் தலைகுப்புற கவிழ்ந்த நிலையில், மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
-
Aadi Perukku Today : இன்று ஆடிப்பெருக்கு கொண்டாட்டம்
இன்று ஆடிப்பெருக்கு கொண்டாட்டப்படுவதை அடுத்து முக்கிய நீர்நிலைகளில் மக்கள் வழிபாடு செய்தனர். தாலிக்கயிறு மாற்றி அம்மனை தரிசனம் செய்தனர். அதிகம் மக்கள் கூடும் நீர்நிலைகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
-
மோசமான நிர்வாக செயல்பாடு – சீமான்
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் தூத்துக்குடியை சேர்ந்த மென்பொறியாளர் கவின் ஆணவ படுகொலை வழக்கில் திமுக அரசின் மெத்தனப்போக்கு மிக மோசமான நிர்வாக செயல்பாடு என சீமான் குறிப்பிட்டுள்ளார்.
-
Seeman : ஆணவப்படுகொலை தனிச்சட்டம் – சீமான் கோரிக்கை
ஆணவப்படுகொலைகளை கட்டுக்குள் கொண்டுவர, தமிழகத்தில் தனிச்சட்டம் அமைக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். ஆணவப் படுகொலைகளுக்கு எதிராகத் தனிச்சட்டம் கொண்டுவருவதில் என்ன சிக்கல் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
போட்டிபோட்டு பொதுக்குழு கூட்டம்
அன்புமணி ராமதாஸ் சார்பில் ஆகஸ்ட் 9ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. மறுபுறம், ஆகஸ்ட் 17, 2025 அன்று கட்சி நிறுவனர் ராமதாஸ் தலைமையில் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் சின்னம் தொடர்பான அறிவிப்பு அன்புமணிக்கு பலத்தை அதிகரித்துள்ளது
-
PMK Issue : அன்புமணிக்கு வந்த மாம்பழ சின்னம்
பாட்டாளி மக்கள் கட்சிக்கு மாம்பழ சின்னம் ஒதுக்கப்பட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பு அன்புமணிக்கு வந்துள்ளது. இந்நிலையில் பாமகவின் அடுத்தக்கட்ட நகர்வு என்ன என தொண்டர்கள் எதிர்பார்த்துள்ளன.
-
உடலுக்கு முழு அரசு மரியாதை
மூளை சாவு அடைந்து அவர்களது உடல் உறுப்பு தானம் செய்யப்பட்டால், உடலுக்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும் என முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இந்த அறிவிப்பிற்கு பிறகு 479 பேர் உறுப்பு மாற்று தானம் செய்தனர். அவர்களுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டுள்ளது
-
Organ Donation : உடல் உறுப்பு தானம் – தமிழ்நாடு தொடர்ந்து முதலிடம்
உடல் உறுப்பு தானத்தில் இந்திய அளவில் தமிழ்நாடு தொடர்ந்து 8வது முறையாக முதலிடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு மட்டும் 268 பேர் உடல் உறுப்பு தானம் செய்து உள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் குறிப்பிட்டுள்ளார்.
-
O. Panneerselvam Statement : ஓபிஎஸ் வைத்த குற்றச்சாட்டுகள்
பிரதமரை சந்திக்க வேண்டுமென தன்னிடம் சொல்லி இருந்தால் ஏற்பாடு செய்திருப்பேன் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்ததில் எந்தவிதமான உண்மையும் இல்லை என ஓபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார்
-
நயினார் நாகேந்திரன் உண்மை பேச வேண்டும் – ஓபிஎஸ்
தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன் என்ற பொறுப்பில் இருக்கிறார். ஆகவே, இனியாவது நயினார் நாகேந்திரன் உண்மை பேச வேண்டும் என்பதே எனது விருப்பம் என ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
-
நாளை எங்கெல்லாம் மழை இருக்கும்?
ஆகஸ்ட் 4 2025 தேதியான நாளை கோவை, நீலகிரி, கடலூர், கள்ளக்குறிச்சி மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், தேனி, தென்காசி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கன மழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது
-
Rain Today : 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோர பகுதிகளில் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்க சுழற்சி நிலவுகிறது. இதனால், தேனி, தென்காசி, சேலம், விழுப்புரம், திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு
-
Weather Forecast Today : ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை
தமிழ்நாட்டில் வெயில் சற்று தணிந்து மழை தொடங்கியுள்ளது. ஆகஸ்ட் 3 2025 தேதி இன்று நீலகிரி, கோவை, கடலூர், கள்ளக்குறிச்சி மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 3, 2025 அன்று ஆடி பதினெட்டாம் பெருக்கு இந்துக்களால் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் எதை துவங்கினாலும் அது பல மடங்காக பெருகும் என்ற நம்பிக்கை இருக்கிறது. குறிப்பாக அன்றைய நாளில் திருமணம், தொழில் ஆகியவற்றை பற்றிய பேச்சுக்களை துவங்குவார்கள். இதுகுறித்த தகவல்களை இந்தப் பகுதியில் விரிவாக பார்க்கலாம். தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 3, 4, 5 ஆகிய 3 நாட்கள் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு (Rain Update) வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு என்பதால் ஆகஸ்ட் 3, 4, 5 ஆகிய 3 நாட்கள் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. மழை குறித்த தகவல்களை இந்தப் பகுதியில் உடனுக்குடன் தெரிந்துகொள்வோம். ஆகஸ்ட் 3, 2025 முதல் தேமுதிக பொதுச்செயலாளர், பிரேமலதா விஜயகாந்த், சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். வருகிற 2026 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கூட்டணி குறித்து அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 3 வரை வல்வில் ஒரி விழா நடைபெறுகிறது. சிறந்த வில்வித்தை வீரரான “வல்வில் ஓரி”யை கௌரவிக்கும் வகையில் ஒரு மாபெரும் கொண்டாட்டம் கொண்டாடப்படுகிறது. இதுகுறித்த மேலும் தகவல்களை இந்தப் பகுதியில் பார்க்கலாம். மேலும் ஆகஸ்ட் 3, 2025 அன்று நட்பின் மேன்மையைக் கொண்டாடும் விதமாக நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.