Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

உணவகங்களில் மீண்டும் மயோனைஸ் பயன்பாடு? உணவு பாதுகாப்பத்துறை அதிரடி உத்தரவு!

Tamil Nadu Mayonnaise Ban : தமிழகத்தில் உணவகங்களில் மயோனைஸ் பயன்படுத்த ஓராண்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தடையை மீறி சில உணவகங்களில் மயோனைஸ் பயன்படுத்தப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. இதனை அடுத்து, உணவு பாதுகாப்புத்துறை ஒவ்வொரு உணவகங்களிலும் ஆய்வுகளை மேற்கொள்ள குழுக்களை அமைத்து உத்தரவிட்டுள்ளது.

உணவகங்களில் மீண்டும் மயோனைஸ் பயன்பாடு? உணவு பாதுகாப்பத்துறை அதிரடி உத்தரவு!
மயோனைஸ்
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 29 Jun 2025 06:40 AM

சென்னை, ஜூன் 29 : பச்சை முட்டை மூலம் தயாரிக்கப்படும் மயோனைஸுக்கு (Tamil Nadu Mayonnaise Ban) தமிழக அரசு (Tamil Nadu Goverment) தடை விதித்திருக்கிறது. ஆனால், தடையை மீறி பல்வேறு உணவகங்களில் மீண்டும் மயோனைஸ் பயன்படுத்தப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது. இதனை தடுக்க உணவு பாதுகாப்பத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. அதிகம் விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்றாக மயோனைஸ் உள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் மயோனைஸை சாப்பிட்டு வருகின்றனர். தந்தூரி, பார்பிக்யூ, ஷவர்மா, பிரென்சு பிரைஸ் உள்ளிட்டவற்றுக்கு மயோனைஸ் கலந்து மக்கள் சாப்பிட்டு வருகின்றனர். இந்த மயோனைஸ் பச்சை முட்டை, எலுமிச்சை சாறு, எண்ணெய் போன்றவற்றால் தயாரிக்கப்பட்டு வருகிறது. பச்சை முட்டை பயன்படுத்தி தயாரிக்கப்படும் மயோனைஸில் இருக்கும் பாக்டீரியாக்களால் உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் என மருத்துவர்கள் எச்சரித்து வருகின்றனர்.

மயோனைஸுக்கு ஓராண்டு தடை

இப்படியான சூழலில், தமிழகத்தில் உணவகங்களில் மயோனைஸ் ஓராண்டு பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.  இந்த உத்தரவு 2025 ஏப்ரல் 8ஆம் தேதி முதல் அமலில் இருக்கிறது. உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் சட்டம், 2006 இன் பிரிவு 30(2)(a) இன் கீழ் மயோனைஸுக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்து.

பொதுமக்கள் நலன் கருதி ஓராண்டுக்கு தமிகத்தில் உள்ள எந்த ஹோட்டல்களிலும் மயோனைஸ் உற்பத்தி, விற்பனை செய்வது உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்கப்படுகிறது. மயோனைஸில் சால்மோனெல்லா டைபிமுரியம், சால்மோனெல்லா என்டெரிடிடிஸ், எஸ்கெரிச்சியா கோலி மற்றும் லிஸ்டீரியா மோனோசைட்டோஜீன்ஸ் ஆகிய தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்காளல் மாசுபடுவதால் சுகாதார பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என விளக்கம் அளிக்கப்பட்டது.

தடையை மீறி உணவகங்களில் மீண்டும் மயோனைஸ்?

தடை மீறி மயோனைஸ் பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இருப்பினும், பல்வேறு உணவகங்களில் மயோனைஸ் பயன்படுத்தப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது. இதனை அடுத்து, உணவு பாதுகாப்புத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

இதனை தடுக்க உணவுப் பாதுகாப்புத்துறை சிறப்பு குழுக்களை அமைத்து உத்தரவிட்டுள்ளது. இந்த குழுக்கள் உணவகங்களில் ஆய்வுகளை மேற்கொள்ளும் என தெரிவித்துள்ளது. தடையை மீறிய உணவகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் குழுக்களுக்கு உணவு பாதுகாப்பத்துறை அறிவுறுத்தியுள்ளது.

மேலும், எந்தவொரு உணவகத்திலும் முட்டைகளிலிருந்து தயாரிக்கப்படும் மயோனைஸ் பயன்படுத்தப்படுவது அல்லது விற்பனை செய்வது கண்டு அறியப்பட்டால், அந்த உணவகத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளது. எனவே, வரும் நாட்களில் தமிழகம் முழுவதும் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உணவகங்களில் ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.