நடிக்க வாய்ப்பு தருவதாக ஆசை வார்த்தை.. நடிகையை ஆபாச படம் எடுக்க முயன்ற கும்பல் சிக்கியது.. சென்னையில் சம்பவம்!
Chennai Crime : சென்னையில் சின்னத்திரை நடிகையை படத்தில் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என அழைத்து ஆபாசமாக புகைப்படம் எடுக்க முயன்றதாக போலீசாரிடம் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், பெண்கள் உள்பட 3 பேரை சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
சென்னை மாவட்டம், சாலிகிராமம் அருணாச்சலம் சாலை பகுதியை சேர்ந்தவர் நித்தியா ( 31 வயது). இவர், சினிமா மற்றும் சின்னத்திரையில் நடிகையாக நடித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை சுமார் 10 மணி அளவில் பெருங்குடி பகுதியை சேர்ந்த நந்தி ராமநாதன் ( 65 வயது) நித்யாவை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தான் தயாரிக்க இருக்கும் படத்தில் நடிகையாக நடிப்பதற்கு வர வேண்டும் எனவும், இது தொடர்பாக போட்டோ சூட் எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். இதனை உண்மை என நம்பிய நடிகை நித்தியா சாலிகிராமம் பகுதியில் உள்ள லக்ஸ் ரெசிடென்சி என்ற பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது, அந்த இடத்தில் நந்தி ராமநாதன், சென்னை தரமணி பகுதியை சேர்ந்த இந்திராணி ( 40 வயது), விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த கார்த்திகா ( 35 வயது) மற்றும் 7 வயது குழந்தை ஆகியோர் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
முகத்தை மூடி ஆபச படம் எடுக்க முயற்சி
இதை தொடர்ந்து, கார்த்திகா என்பவர் நடிகை நித்யாவை தனது செல்போன் மூலமாக 3 முறை படம் பிடித்துள்ளார். தொடர்ந்து, நடிகை நித்யாவிடம் சாமி வேஷம் போட வேண்டி உள்ளது. இதற்காக, உடலில் எந்த பகுதியிலும் காயத் தழும்பு இருக்கக் கூடாது என்று கூறியுள்ளார். இதற்காக முகத்தை மட்டும் மறைத்துக் கொண்டு நிர்வாணமாக புகைப்படம் எடுக்க வேண்டும் என்று நடிகை நித்தியாவிடம் கார்த்திகா கூறியுள்ளார். இதை கேட்டு நித்தியா கடும் அதிர்ச்சி அடைந்தார். பின்னர், அங்கிருந்து உடனடியாக வெளியே சென்றார்.
மேலும் படிக்க: தவெக அரசுக்கு புதிய நெருக்கடி.. சிக்கிய குதிரை பேர விவகார வீடியோ ஆதாரம்.. ஆளுநரைச் சந்திக்க திமுக திட்டம்!




சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை கைது
இதைத் தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக காவல் கட்டுப்பாட்டு அறை எண் 100- க்கு தொடர்பு கொண்டு சம்பவத்தை தெரிவித்தார். அந்த தகவலின் அடிப்படையில், சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை காவல் உதவி ஆய்வாளர் ஜானகி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அதிரடி விசாரணை மேற்கொண்டனர். இதில், அங்கு இருந்த 7 வயது குழந்தை உள்பட அனைவரையும் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
3 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பு
இதில், அந்த கும்பல் பெண்களை படங்களில் நடிக்க வேண்டும் என்று ஆசை வார்த்தை கூறி அழைத்து வந்து ஆபாசமான புகைப்படம் எடுத்து வந்தது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் 7 வயது குழந்தையை அடையாறில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர். மற்ற 3 பேரை நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் படிக்க: மதுரையில் அதிகாலையில் நேர்ந்த கொடூரம்.. ஆம்னி பேருந்து, அரசுப் பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து.. 5 பேர் பலி, 41 பேர் படுகாயம்!!