AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடிக்கும் மேல் மோசடி.. 59 பள்ளிகள் புகார்; சென்னை மத்திய குற்றப்பிரிவு தீவிர விசாரணை!

இந்த மோசடி தொடர்பாக இதுவரை தமிழகம் முழுவதும் உள்ள 59 தனியார் பள்ளிகள் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளன. இந்த 59 பள்ளிகளிடம் மட்டும் ₹7 கோடியே 34 லட்சத்திற்கும் அதிகமான தொகை மோசடி செய்யப்பட்டுள்ளது முதற்கட்ட விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மோசடி செய்யப்பட்ட தொகையில் பெரும் பகுதி டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மூலமாகப் பெறப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது.

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடிக்கும் மேல் மோசடி.. 59 பள்ளிகள் புகார்; சென்னை மத்திய குற்றப்பிரிவு தீவிர விசாரணை!
தனியார் பள்ளி
Baskar P
Baskar P | Updated On: 13 Jul 2026 14:28 PM IST

சென்னை, ஜூலை 13: தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளுக்கு அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, ₹100 கோடிக்கும் மேல் மோசடி செய்த வழக்கில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இதுவரை 59 பள்ளிகளிடம் இருந்து புகார்கள் பெறப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்த அரசகுமார் என்பவர், ‘தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம்’ என்ற பெயரில் பதிவு செய்யப்படாத போலி அமைப்பு ஒன்றை நடத்தி வந்துள்ளார்.

இதையும் படிக்க: இரும்பு தகடுகள் அறுந்து விழுந்து விபத்து – 3 வயது சிறுவன் பரிதாப பலி – அதிர்ச்சி தகவல்

நடந்தது என்ன?

இதை நம்பி அரசகுமாரை அணுகிய தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் பள்ளிகளுக்கான நிரந்தர அங்கீகாரம், பள்ளிகளின் தரம் உயர்த்துதல், சி.எம்.டி.ஏ (CMDA) மற்றும் டி.டி.சி.பி (DTCP) அனுமதிகள் உள்ளிட்ட பல்வேறு சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, தமிழகம் முழுவதும் உள்ள பல பள்ளிகளிடம் இருந்து கோடிக்கணக்கில் பணம் வாங்கியுள்ளார். ஆனால், உறுதியளித்தபடி எந்தவொரு அனுமதியையும் பெற்றுத் தராமலும், வாங்கிய பணத்தை திருப்பித் தராமலும் ஏமாற்றி வந்துள்ளார்.

கைதும் போலீஸ் விசாரணையும்:

₹100 கோடிக்கும் மேல் மோசடி நடந்ததாகப் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசகுமாரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர், அவரை போலீஸ் காவலில் எடுத்து பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில் திடுக் தகவல்கள்:

இந்த மோசடி தொடர்பாக இதுவரை தமிழகம் முழுவதும் உள்ள 59 தனியார் பள்ளிகள் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளன. இந்த 59 பள்ளிகளிடம் மட்டும் ₹7 கோடியே 34 லட்சத்திற்கும் அதிகமான தொகை மோசடி செய்யப்பட்டுள்ளது முதற்கட்ட விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மோசடி செய்யப்பட்ட தொகையில் பெரும் பகுதி டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மூலமாகப் பெறப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது.

24 வங்கி கணக்குகள் முடக்கம்:

கைது செய்யப்பட்ட அரசகுமாருக்குச் சொந்தமான 24 வங்கி கணக்குகளை போலீசார் கண்டறிந்துள்ளனர். இந்த மோசடிப் பணத்தைக் கொண்டு அவர் எங்கெங்கு சொத்துகளை வாங்கியுள்ளார் என்பது குறித்தும் தீவிரமாக ஆராயப்பட்டு வருகிறது.

இதையும் படிக்க : ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்.. இனி இதை செஞ்சே ஆகணும்.. அமைச்சர் அதிரடி!!

கூட்டாளிகளுக்கு வலைவீச்சு:

இந்த வழக்கில் முக்கிய தொடர்புடைய நபராகக் கருதப்படும் முத்துக்குமார் என்பவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மேலும், இந்த மோசடி வலையில் சிக்கி இதுவரை புகார் அளிக்க முன்வராத பிற பள்ளி நிர்வாகிகளின் விவரங்களையும் திரட்டும் பணியில் போலீசார் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் தமிழக கல்வி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us