AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

லட்டு பிரசாதத்தில் கோடிக் கணக்கில் மோசடி: ராமேசுவரம் கோவிலில் அம்பலமான பயங்கரம்!

Rameswaram Temple Free Laddu Scam: ராமேசுவரம் ராமநாதசாமி கோவில் இலவச லட்டு விநியோகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.3 கோடியே 40 லட்சம் வரை மோசடி நடந்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 22 லட்சத்திற்கும் அதிகமான லட்டுகள் கணக்கில் முறைகேடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதுடன், 3 தற்காலிக ஊழியர்களும் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

லட்டு பிரசாதத்தில் கோடிக் கணக்கில் மோசடி: ராமேசுவரம் கோவிலில் அம்பலமான பயங்கரம்!
ராமேசுவரம் கோவில்Image Source: social media
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 15 May 2026 14:30 PM IST

ராமேசுவரம் ராமநாதசாமி கோவில் இலவச லட்டு விநியோகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.3 கோடியே 40 லட்சம் வரை மோசடி நடந்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 22 லட்சத்திற்கும் அதிகமான லட்டுகள் கணக்கில் முறைகேடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் கோவில் பிரசாத பிரிவை சேர்ந்த 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதுடன், 3 தற்காலிக ஊழியர்களும் பணி நீக்கம் செய்யப்பட்டனர். பக்தர்களுக்கான இலவச பிரசாத திட்டத்தில் நடந்த மோசடி பெரும் அதிர்ச்சியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. ராமேசுவரம் ராமநாதசாமி கோவில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வரும் முக்கிய ஆன்மிக தலமாக விளங்கி வருகிறது. கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு இலவசமாக லட்டு பிரசாதம் வழங்கப்படும் நடைமுறை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இந்த இலவச லட்டு விநியோக திட்டத்தில் பெரும் அளவிலான மோசடி நடைபெற்றதாக சமீபத்தில் புகார்கள் எழுந்ததை தொடர்ந்து, கோவில் நிர்வாகம் தீவிர விசாரணையில் இறங்கியது. இந்த விவகாரம் தற்போது பக்தர்கள் மத்தியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

3 ஆண்டுகளில் ரூ.3½ கோடி வரை மோசடி

கோவில் இணை ஆணையர் செல்லத்துரை தலைமையில் நடைபெற்ற ஆய்வில், கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை வழங்கப்பட்ட இலவச லட்டுகளின் கணக்குகள் ஆராயப்பட்டன. அதில் சுமார் 22 லட்சத்து 71 ஆயிரம் லட்டுகள் விநியோகிக்கப்பட்டதாக பதிவுகள் இருந்தபோதிலும், உண்மையான விநியோகம் மற்றும் கணக்கில் பெரிய முரண்பாடுகள் இருப்பது தெரியவந்தது. இந்த முறைகேட்டின் மூலம் சுமார் ரூ.3 கோடியே 40 லட்சம் அளவுக்கு நிதி மோசடி நடைபெற்றிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பக்தர்களுக்காக அரசு அனுமதியுடன் செயல்படுத்தப்பட்ட திட்டத்தில் இத்தகைய மோசடி நடந்தது பலரிடமும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை

இந்த விசாரணையின் அடிப்படையில் கோவிலின் பிரசாத பிரிவில் பணியாற்றிய பலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. பிரசாத பிரிவு பேஸ்கார் பஞ்சமூர்த்தி, பணியாளர் விக்ரம், சிவனேஸ்வரி, செல்வி, லாவண்யா மற்றும் அம்பிகா உள்ளிட்ட 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் தற்காலிக ஊழியர்களாக பணியாற்றிய பிரபு ரவி, நித்தியானந்தம் மற்றும் பாலாஜி ஆகிய 3 பேரும் பணி நீக்கம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கை கோவில் நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள அலட்சியத்தையும் கண்காணிப்பு குறைபாடுகளையும் வெளிப்படுத்துவதாக பார்க்கப்படுகிறது.

பக்தர்களிடம் அதிருப்தி மற்றும் கேள்விகள்

இலவச பிரசாதம் என்பது பக்தர்களின் நம்பிக்கையுடன் நேரடியாக தொடர்புடைய ஒன்றாக இருப்பதால், இந்த மோசடி சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது. கோவில் வருவாய் மற்றும் பிரசாத விநியோக முறைகள் மீதான கண்காணிப்பை அரசு மேலும் வலுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற முறைகேடுகள் நடைபெறாத வகையில் கணக்காய்வு மற்றும் டிஜிட்டல் கண்காணிப்பு முறைகள் கொண்டு வரப்பட வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Follow Us