Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தொடரும் அட்டூழியம்: இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 8 பேர் கைது..!

Rameswaram Fishermen Arrest: ராமேஸ்வரத்தை சேர்ந்த 8 தமிழக மீனவர்கள், எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். அவர்களது படகும் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, தலைமன்னார் கடற்படை முகாமிற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்

தொடரும் அட்டூழியம்: இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 8 பேர் கைது..!
தமிழக மீனவர்கள் 8 பேர் கைதுImage Source: social media
sivasankari-bose
Sivasankari Bose | Published: 29 Jun 2025 08:47 AM

தமிழ்நாடு ஜூன் 29: ராமேஸ்வரத்தை (Rameshwaram) சேர்ந்த 8 மீனவர்கள் (Tamilnadu Fisherman), ஒரு படகில் மீன்பிடித்து விட்டு கரை திரும்பிக் கொண்டிருந்த போது, எல்லை தாண்டியதாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது (Arrested by Sri Lankan Navy) செய்யப்பட்டுள்ளனர். அவர்களது படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பின்னர், அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, தலைமன்னார் கடற்படை முகாமிற்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டனர். இந்த சம்பவம் மீனவர்களில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. மீன்பிடி தடைக்காலம் முடிந்த பிறகு மீனவர்கள் மீண்டும் கடலுக்கு புறப்பட்ட நிலையில், இத்தகைய நடவடிக்கைகள் மீனவர்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கின்றன. தொடர்ந்து நடைபெறும் இந்த சம்பவங்களுக்கு நிரந்தரத் தீர்வு கோரியுள்ளனர்.

இலங்கை கடற்படையினரால் மீனவர்கள் 8 பேர் கைது

ராமேஸ்வரம் அருகே கடலில் மீன்பிடித்துவிட்டு கரைக்கு திரும்பிக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 8 பேர், எல்லை தாண்டியதாகக் கூறி 2025 ஜூன் 29 ஆம் தேதி இன்று அதிகாலை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரத்தை சேர்ந்த இந்த மீனவர்கள், ஒரே படகில் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். அவர்கள் மீன்பிடித்து விட்டு கரை நோக்கி புறப்பட்டபோது, வடக்கு மன்னார் கடற்பரப்பில் ரோந்து பணியில் இருந்த இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்தனர்.

மீனவர்கள் பயன்படுத்திய படகும் பறிமுதல்

கைது செய்யப்பட்டவர்களுடன், அவர்கள் பயன்படுத்திய படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இந்த மீனவர்கள், விசாரணைக்காக தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம், கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களிடையே பெரும் பதற்றத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மீன்பிடி உபகரணங்களை சேதப்படுத்தும் அட்டூழியங்கள் தொடரும் அவலம்

தமிழகத்தின் நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள், வழக்கம்போல் இலங்கை கடல்சார் எல்லை பகுதியில் மீன்பிடித்து வருகிறார்கள். ஆனால், எல்லை தாண்டியதாகக் கூறி இலங்கை கடற்படை அவ்வப்போது தமிழ்மீனவர்களை கைது செய்து வருகின்றது. இது மட்டுமல்லாமல், மீனவர்கள் படகுகளை பறிமுதல் செய்து, மீன்பிடி உபகரணங்களை சேதப்படுத்தும் அட்டூழியங்கள் தொடர்கின்றன.

மத்திய மாநில அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

இந்த அத்துமீறல் செயல்களை நிறுத்த மத்திய அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டும் இதுவரை நிரந்தர தீர்வு எட்டப்படவில்லை. மீன்பிடி தடைக்காலம் முடிந்ததையடுத்து மீனவர்கள் மீண்டும் கடலில் இறங்கும் நிலையில், இத்தகைய சம்பவம் மீண்டும் நிகழ்வது மீனவர்களின் வாழ்வாதாரத்தையே கேள்விக்குள்ளாக்கி உள்ளது.

இலங்கை கடற்படையால் மீனவர்கள் மீது நடைபெறும் தாக்குதல்கள் மற்றும் கைது சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்கான உரிய நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் என மீனவர் சங்கங்கள் வலியுறுத்துகின்றன.