Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

இதுவரை அன்புமணியை பற்றி தவறாக பேசியதே இல்லை – ஜி.கே மணி உருக்கம்

PMK Leader GK Mani: பாமகவின் கவுரவத் தலைவர் ஜி.கே.மணி அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். பாமக கூட்டணி குறித்த தவறான விமர்சனங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் தன்னைப் பற்றிய தவறான பதிவுகள் குறித்து அவர் வருத்தம் தெரிவித்தார். கட்சியின் நல்லிணக்கத்திற்காக பொறுப்பு பற்றிய வாதங்களைத் தவிர்க்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

இதுவரை அன்புமணியை பற்றி தவறாக பேசியதே இல்லை – ஜி.கே மணி உருக்கம்
ஜி.கே மணி Image Source: social media
sivasankari-bose
Sivasankari Bose | Published: 29 Jun 2025 10:31 AM

சென்னை ஜூன் 29: ஜி.கே.மணி (PMK Leader GK Mani) உடல்நிலை பாதிக்கப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். மன அழுத்தம் காரணமாக உடல் பாதிக்கப்பட்டதாகவும், தொடர்ந்து ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். பாமக (Patali Makkal Katchi) கூட்டணி குறித்து தவறாக விமர்சிக்கப்படுவதை மனவேதனையாக கூறிய அவர், தந்தை-மகன் பிரச்சனை (Father -Son Conflict) காரணமாக கட்சியில் குழப்பம் உள்ளது என குறிப்பிட்டார். ராமதாஸை உயிர்மூச்சாகக் கருதி பல கட்சிகளின் வாய்ப்புகளை நிராகரித்து பாமகவிலேயே இருந்ததாக தெரிவித்தார். சமூக ஊடகங்களில் அவரை குறித்த தவறான பதிவுகள் வருவதை கண்டித்தார். கட்சியின் நல்ல வளர்ச்சிக்காக பொறுப்புகளைப் பற்றிய வாதங்களை தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய ஜி.கே மணி

பட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, உடல்நிலை பாதிக்கப்பட்டு கடந்த வாரம் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். ஒருவாரம் சிகிச்சைக்கு பின் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அவர், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசை சந்திக்க தைலாபுரம் தோட்டத்திற்கு சென்றார். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.மணி, மனஅழுத்தம் காரணமாகவே உடல்நிலை பாதிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

கூட்டணி பற்றி பேச்சு ராமதாஸும், அன்புமணியும் எடுப்பார்கள்

மருத்துவர்கள் தொடர்ந்து ஓய்வு எடுக்க வேண்டும் என்றும், மீண்டும் மருத்துவ பரிசோதனைக்கு வரவேண்டும் என்றும் அறிவுறுத்தியதாகவும் கூறினார். “பாமக கூட்டணிக் குறித்து முடிவு எடுப்பது ராமதாஸும், அன்புமணியும் சேர்ந்தே நடக்கும். இதுபற்றி நான் பேசவில்லை என்றாலும், என்னை தவறாக சமூக வலைதளங்களில் விமர்சிக்கின்றனர்” என்று அவர் வேதனை தெரிவித்தார்.

தன்னைப் பற்றி தவறாக கூறுவது வேதனை – ஜி.கே மணி

பாமக கட்சியின் தற்போதைய குழப்பம் காரணமாக பல்வேறு விமர்சனங்கள் தன்னை நோக்கி வந்துள்ளன என்றும், தந்தை-மகன் இடையேயான பிரச்சனை நீடித்து வருவதால் கட்சிக்குள் அமைதி இல்லாத சூழல் நிலவுகிறது என்றும் கூறினார். தன்னைப் பற்றி தவறாக கூறுவது மனதிற்கு மிகவும் காயத்தை ஏற்படுத்துவதாகவும், பல கட்சிகளிலிருந்து வாய்ப்பு இருந்தும் ராமதாஸை உயிர்மூச்சாகக் கருதி பாமகவிலேயே தங்கி உழைத்ததாகவும் தெரிவித்தார்.

என்னை சமூக ஊடகங்களில் தவறாக விமர்சிக்கின்றனர் – ஜி.கே மணி

“அன்புமணியை ஒன்றிய அமைச்சராகவும், முதலமைச்சராகவும் செய்ய நான் பாடுபட்டேன். ஆனால் இப்போது என்னை சமூக ஊடகங்களில் தவறாக விமர்சிக்கின்றனர். ராமதாஸ் என்னை அழைத்து பாராட்டி, என் வாழ்க்கையைப் பொறுத்து ஒரு புத்தகம் எழுதப்போவதாகக் கூறினார்” என்று அவர் உணர்ச்சியுடன் தெரிவித்தார்.

ராமதாஸ் கண்ணீர் விடுகிறார்- ஜி.கே மணி

இதே பேட்டியில், “நாங்கள் தனியாக பேசும்போது ராமதாஸ் கண்ணீர் விடுகிறார். அவரும் மிகுந்த மனவேதனையில் இருக்கிறார். பாமக நிர்வாகிகள் சமூக ஊடகங்களில் தவறான பதிவுகள் இடக்கூடாது. கட்சியில் பொறுப்பு பற்றிய வாதங்கள் கட்சியின் வளர்ச்சிக்கு பாதகமாகும்” என்றும் ஜி.கே.மணி கேட்டுக்கொண்டார்.