AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

திடீர் உடல்நலக்குறைவு.. கோவை மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி..

Minister Sengottaiyan Hospitalized: லேசான காய்ச்சல் மற்றும் உடல் சோர்வு ஏற்பட்டதன் காரணமாக அமைச்சர் செங்கோட்டையன் உடனடியாக கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

திடீர் உடல்நலக்குறைவு.. கோவை மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 24 May 2026 17:00 PM IST

மே 24, 2026: செங்கோட்டையன்-க்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். லேசான காய்ச்சல் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், நாளை காலை அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

நிதித்துறையிலிருந்து மாற்ற இதுதான் காரணம்:

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக செங்கோட்டையன் இருந்து வருகிறார். விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழக அரசின் அமைச்சரவையில் வயதில் மூத்த அமைச்சராகவும் அவர் உள்ளார்.

மேலும் படிக்க: எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் என சொன்னதும் துள்ளிக்குதித்தார் உதயநிதி.. மே. 4 ஆம் தேதி இதுதான் நடந்தது – மாணிக்கம் தாக்கூர்..

முதலில் அவருக்கு நிதித்துறை ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விளக்கம் அளித்த அவர், “நிதித்துறை அமைச்சர் சென்னையில் இருந்து மட்டுமே பணியாற்ற வேண்டும். நான் மக்களோடு மக்களாக பணியாற்ற விரும்புகிறேன். அதனால்தான் வருவாய்த்துறை அமைச்சர் பொறுப்பை கேட்டுப் பெற்றுள்ளேன்” என குறிப்பிட்டிருந்தார்.

திடீர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி:

கடந்த இரண்டு மாதங்களாக கட்சிப் பணிகள் மற்றும் ஆட்சிப் பணிகளில் தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

மேலும் படிக்க: மாணிக்கம் தாக்கூர் சொல்வது அப்பட்டமான பொய்.. காங்கிரஸ்காரர்கள் நன்றி கெட்டவர்கள் – ஆர். எஸ் பாரதி..

அதாவது, லேசான காய்ச்சல் மற்றும் உடல் சோர்வு ஏற்பட்டதன் காரணமாக அமைச்சர் செங்கோட்டையன் உடனடியாக கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

நாளை டிஸ்சார்ஜ்:

இந்த நிலையில், அவரது காய்ச்சல் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாளை காலை அவர் வீடு திரும்புவார் என்றும் கூறப்பட்டுள்ளது.

அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தகவல் வெளியான நிலையில், அரசியல் வட்டாரத்தில் சற்று சலசலப்பும் கவலையும் ஏற்பட்டுள்ளது.

Follow Us