அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்… அறிவிப்புகளை அள்ளிக் கொடுத்த அமைச்சர் ராஜ்மோகன்!
Minister Rajmohan Announcements : தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு அறிவிப்புகளை அமைச்சர் ராஜ்மோகன் சட்டப் பேரவையில் வெளியிட்டார். அவை என்னென்ன அறிவிப்புகள் என்பதை இந்தப் பதிவில் சற்று விரிவாக பார்க்கலாம். இதில், மாணவர்களுக்கு விளையாட்டு சீருடை உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
தமிழக சட்டப்பேரவையில் 6 துறைகள் மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார். இதில், தமிழகத்தில் தற்போது காலியாக உள்ள 1,443 உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட 1,328 பணியிடங்கள் என மொத்தம் 2,271 பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக உடனடியாக நிரப்பப்படும். தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டால் 1417 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம். அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். கல்வித்துறையில் 358 பேருக்கு விரைவில் கருணை அடிப்படையில் ஆன பணிகள் வழங்கப்படும்.அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மாதத்துக்கு ஒரு நாள் பேக் மற்றும் புக் இல்லாமல் பள்ளிக்கு செல்லலாம். 6- ஆம் வகுப்பு முதல் செயற்கை நுண்ணறிவு பாடம் அறிமுகம் செய்யப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
( தற்போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில் செய்தி வழங்கப்பட்டுள்ளது. மேலதிக தகவல்களுக்கு டிவி9 தமிழுடன் இணைந்திருங்கள்)