அந்தியூர் -பர்கூர் சாலையில் கனரக வாகனங்களுக்கு தடை… ஏன் தெரியுமா?
Erode-Anthiyur Route: ஈரோடு அருகே அந்தியூர்-பர்கூர் மலைப்பாதையில் கர்நாடகா சாலைப் பழுதடைந்துள்ளதால், கனரக வாகனங்கள் கர்நாடகாவிற்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா அரசு சாலைப் பணிகளை மேற்கொள்ள உள்ளது. இதனால், 2025 ஜூலை 5 வரை 6 சக்கரங்களுக்கு மேற்பட்ட வாகனங்கள் தடை செய்யப்பட்டுள்ளன.

ஈரோடு ஜூன் 23: ஈரோடு (Erode) அருகே உள்ள அந்தியூர்-பர்கூர் மலைப்பகுதி (Anthiyur-Bargur hill region) வழியாக கனரக வாகனங்கள் கர்நாடகாவின் கொள்ளேகால், மைசூருக்கு சென்று வருகின்றன. கர்நாடக மாநில எல்லையில் உள்ள சாலை பகுதி மோசமாக பழுதடைந்து, வாகன ஓட்டத்தில் கடுமையான தடையைக் உருவாக்கியுள்ளது. இதனை சீரமைக்க கர்நாடக அரசு நிதி ஒதுக்கி பணிகள் தொடங்க இருக்கிறது. இதற்கிடையே, சாலையில் பணிகள் நடைபெறுவதால் கனரக வாகனங்களுக்கு தடை (Heavy vehicles banned) விதிக்கக்கோரி ஈரோடு கலெக்டருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அதன்பேரில் 2025 ஜூலை 5 வரை பர்கூர் வழியாக 6 சக்கர வாகனங்களுக்கு மேலானவைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. செல்லம்பாளையம் சாவடியில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு, வாகன ஓட்டுநர்களிடம் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
மோசமாக காணப்படும் நெடுஞ்சாலைகள்
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதி, கர்நாடகா மாநில எல்லையை ஒட்டி அமைந்துள்ளதுடன், இந்த வழியாக ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இருந்து கனரக வாகனங்கள் கர்நாடகாவின் கொள்ளேகால் மற்றும் மைசூர் பகுதிகளுக்கு பயணிக்கின்றன.
இந்த நிலையில், கர்நாடக மாநிலம் கொள்ளேகால் தாலுக்கா நால்ரோடு முதல் தமிழக எல்லையான கர்கேகண்டி வரை சாலை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வாகனங்கள் இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பழுதடைந்த சாலையை சீரமைக்கக் கோரி கர்நாடக மாநிலத்தில் போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன.




அந்தியூர் – பர்கூர் சாலையில் போக்குவரத்து தடை
அந்தியூர்-பர்கூர் மலைப்பாதையில் கர்நாடகா சாலைப் பழுதடைந்துள்ளதால், கனரக வாகனங்கள் கர்நாடகாவிற்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா அரசு சாலைப் பணிகளை மேற்கொள்ள உள்ளது. இதனால், 2025 ஜூலை 5 வரை 6 சக்கரங்களுக்கு மேற்பட்ட வாகனங்கள் தடை செய்யப்பட்டுள்ளன.
இதையடுத்து, கர்நாடக அரசு சாலை சீரமைப்பு பணிக்காக நிதி ஒதுக்கி பணி தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில், சாலையில் பணிகள் நடைபெறுவதால் கனரக வாகனங்களை அனுமதிக்க வேண்டாம் என கர்நாடக மாநில சாம்ராஜ்நகர் மாவட்ட நிர்வாகம், ஈரோடு கலெக்டரிடம் கடிதம் மூலம் கேட்டுக்கொண்டது.
அதன்பேரில், ஈரோடு கலெக்டர் ராஜகோபால சுன்கரா, அந்தியூர் – பர்கூர் வழியாக செல்லும் அனைத்து கனரக வாகனங்களையும் செல்லம்பாளையம் வனச்சோதனைச் சாவடியில் நிறுத்தி, மாற்று பாதைகளை பயன்படுத்தும்படி உத்தரவிட்டார்.
கனரக வாகனங்களுக்கு தடை அறிவிப்பு
இதையடுத்து, அந்தியூர் போக்குவரத்து காவல்துறை சார்பில் செல்லம்பாளையம் சாவடியில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. மேலும், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கஸ்தூரி, 2025 ஜூலை 5 வரை 6 சக்கரங்களுக்குமேல் உள்ள எந்தவொரு கனரக வாகனமும் செல்லக்கூடாது எனவும், அந்த தகவலை வாட்ஸ்அப் குழுக்களில் பதிவு செய்யுமாறு லாரி ஓட்டுனர்களிடம் கேட்டுக்கொண்டார்.