AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“முதல்வர் விஜய் குதிரை பேரத்தில் ஈடுபடவில்லை”.. மு.க.ஸ்டாலின் சொன்னது அவரது சொந்த கருத்து.. வைகோ

சமீபத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனை முதலமைச்சராக்க திமுக மற்றும் அதிமுக தரப்பில் திரைமறைவு முயற்சிகள் நடந்ததாகச் செய்திகள் வெளியாகின. இது குறித்துக் கேட்டபோது, அந்த முயற்சிகள் பற்றி தான் எதுவும் சொல்ல விரும்பவில்லை என்று வைகோ நாசூக்காகத் தவிர்த்துவிட்டார்.

“முதல்வர் விஜய் குதிரை பேரத்தில் ஈடுபடவில்லை”.. மு.க.ஸ்டாலின் சொன்னது அவரது சொந்த கருத்து.. வைகோ
வைகோ, முதல்வர் விஜய்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 14 May 2026 08:21 AM IST

தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள பரபரப்பான சூழ்நிலைகளுக்கு மத்தியில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு மற்றும் திமுக உடனான கூட்டணி குறித்து முக்கிய விளக்கங்களை அளித்துள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான ‘தாயகத்தில்’ நடைபெற்ற அக்கட்சியின் நிர்வாகக்குழு கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்து வெளிப்படையாகப் பேசினார்.

இதையும் படிக்க: சட்டமன்றத் தேர்தலில் பாஜக படுதோல்வி.. காரணம் என்ன? அறிக்கை கேட்கும் டெல்லி தலைமை!!

குதிரை பேரப் புகார்களும், வைகோவின் பதிலடியும்:

தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், சட்டசபையில் தனது பெரும்பான்மையை நிரூபிப்பதற்குக் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியிருந்தார். இது குறித்துக் கருத்துத் தெரிவித்த வைகோ, “முதலமைச்சர் விஜய் குதிரை பேரத்தில் ஈடுபட்டார் என்பது மு.க.ஸ்டாலினின் சொந்தக் கருத்து; ஆனால் அவர் அத்தகைய செயல்களில் ஈடுபடவில்லை என்பதே எனது உறுதியான கருத்து” என்று குறிப்பிட்டார். மேலும், ஆளுநர் விதித்த காலக்கெடுவிற்கு முன்பாகவே முதலமைச்சர் விஜய் சட்டசபையில் தனது பெரும்பான்மையை முறையாக நிரூபித்துவிட்டதாக அவர் சுட்டிக்காட்டினார். அண்மையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் விஜய் தலைமையிலான அரசு 144 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

கூட்டணி நிலைப்பாடும், 6 மாத கால அவகாசமும்:

மதிமுக தொடர்ந்து திமுக கூட்டணியிலேயே நீடிக்கும் என்பதை வைகோ மீண்டும் உறுதிப்படுத்தினார். இருப்பினும், புதிய அரசுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதில் அவசரம் காட்டப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதைப் போலவே, நாங்களும் அடுத்த 6 மாதங்களுக்கு அமைதியாகவும் பொறுமையாகவும் இருப்போம். அதே வேளையில், விஜய் தலைமையிலான அரசு கொண்டு வரும் மக்கள் நலனுக்கான நல்ல திட்டங்களை மதிமுக வரவேற்கும்.

மௌனம் காத்த வைகோ:

சமீபத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை முதலமைச்சராக்க திமுக மற்றும் அதிமுக தரப்பில் திரைமறைவு முயற்சிகள் நடந்ததாகச் செய்திகள் வெளியாகின. இது குறித்துக் கேட்டபோது, அந்த முயற்சிகள் பற்றி தான் எதுவும் சொல்ல விரும்பவில்லை என்று வைகோ நாசூக்காகத் தவிர்த்துவிட்டார். சட்டசபையில் மதிமுக எம்எல்ஏக்கள் பங்கேற்காதது ஏன்? நம்பிக்கை வாக்கெடுப்பின் போது மதிமுகவின் 2 எம்.எல்.ஏ.க்கள் சட்டசபைக்குச் செல்லாதது குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு விளக்கமளித்த வைகோ, “அன்றைய தினம் திட்டமிடப்பட்டிருந்த மதிமுக நிர்வாகக்குழு கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதனால்தான் எம்.எல்.ஏ.க்கள் அதில் பங்கேற்றனர்” என்றார். அவர்கள் சபைக்குச் சென்றிருந்தால் விஜய்க்கு ஆதரவளித்திருப்பார்களா என்ற கேள்விக்கு, ஏற்கனவே இந்த அரசுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளதை அவர் நினைவுகூர்ந்தார்.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

மதிமுக நிர்வாகக்குழுவின் முக்கிய தீர்மானங்கள்ஆடிட்டர் அர்ஜூனராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், பொருளாளர் மு.செந்திலதிபன் மற்றும் முதன்மைச் செயலாளர் துரை வைகோ உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் 11 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:PM-SHRI திட்டம்: மத்திய அரசின் பி.எம்.ஸ்ரீ (PM-SHRI) பள்ளிகள் திட்டத்தில் தமிழக அரசு கையெழுத்திடக் கூடாது என்று வலியுறுத்தப்பட்டது. இத்திட்டம் தேசிய கல்விக் கொள்கையை (NEP 2020) அமல்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது என்பதால் மதிமுக இதனை எதிர்க்கிறது.

மேலும் படிக்க: அரசியல் ரீதியாக பதிவிடும் எக்ஸ் கணக்குகள் முடக்கம் – தமிழக அரசின் உத்தரவுக்கு நீதிமன்றம் தடை

முதல்வர் விஜய் – வைகோ சந்திப்பு:

தமிழகத்தின் கல்வி உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் இந்தத் தீர்மானம் முக்கியத்துவம் பெறுகிறது. முதலமைச்சர் விஜய் அண்மையில் வைகோவை அவரது இல்லத்திற்கே சென்று சந்தித்து நலம் விசாரித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அந்த சந்திப்பின் போது வைகோவின் வீட்டுப் பணியாளர்கள் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளித்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

Follow Us