Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி.. கோவை, நீலகிரிக்கு கனமழை எச்சரிக்கை..

Tamil Nadu Weather Update: வடக்கு ஆந்திரா தெற்கு ஒரிசா கடலோர பகுதிகளுக்கு ஒரு காற்றுதாழ்வு பகுதி உருவாகியுள்ளது. மேலும், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று (ஆகஸ்ட் 17, 2025) கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி.. கோவை, நீலகிரிக்கு கனமழை எச்சரிக்கை..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 17 Aug 2025 15:02 PM

வானிலை நிலவரம், ஆகஸ்ட் 17, 2025: மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டி உள்ள வடமேற்கு வங்க கடல் பகுதிகளில் வடக்கு ஆந்திரா தெற்கு ஒரிசா கடலோர பகுதிகளுக்கு அப்பால் ஒரு காற்றுதாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, வருகின்ற 2025 ஆகஸ்ட் 19ஆம் தேதி மாலை தெற்கு ஒரிசா வடக்கு ஆந்திரா இடையே கடலோரப் பகுதிகளை கடக்கக்குக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று அதாவது ஆகஸ்ட் 17 2025 தேதியான இன்று நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மற்றும் நீலகிரியில் தொடரும் கனமழை:

ஆகஸ்ட் 18 2025 தேதியான நாளை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழை பதிவாக கூடும் என்றும் தரைக்காற்று மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 19 2025 முதல் ஆகஸ்ட் 23 2025 வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரையில் கடந்த சில தினங்களாக கோவை மற்றும் நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் நல்ல மழை பதிவு இருந்து வருகிறது.

மேலும் படிக்க: மதுரை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் நாளை முதல் போராட்டம்.. என்னென்ன கோரிக்கைகள்?

அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்) 9, வால்பாறை PAP (கோயம்புத்தூர்), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்) தலா 7, சோலையார் (கோயம்புத்தூர்), சின்கோனா (கோயம்புத்தூர்), நடுவட்டம் (நீலகிரி), வால்பாறை PTO (கோயம்புத்தூர்), உபாசி TRF AWS (கோயம்புத்தூர்) தலா 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

மேலும் படிக்க: பிறந்தநாளில் திருமாவளவன் வீட்டில் நடந்த சோகம்.. சமூக வலைதளத்தில் உருக்கம்!

சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஆகஸ்ட் 16 2025 தேதி ஆன நேற்று மாலை மற்றும் இரவு நேரங்களில் நகரின் அனேக பதிகளில் மிதமான மழை பெய்து வந்தது.

இதன் காரணமாக வெப்பத்தின் தாக்கமும் படிப்படியாக குறைந்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை என்பது 34 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது