AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பேத்திகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தாத்தா.. அடித்து உதைத்த 11 வயது சிறுமி!

Grandfather Misbehaved with Grand Daughters | சிவகங்கையில் 74 வயதாகும் முதியவர் ஒருவர் வீட்டில் தனியாக இருந்த தனது 19 வயது மற்றும் 11 வயது பேத்திகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த 11 வயது பேத்தி, தனது தாத்தாவை அடித்து உதைத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

பேத்திகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தாத்தா.. அடித்து உதைத்த 11 வயது சிறுமி!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 29 Jul 2025 09:20 AM IST

சிவகங்கை, ஜூலஒ 29 : சிவகங்கையில் (Sivagangai) தனக்கும் தனது அக்காவுக்கும் பாலியல் தொல்லை கொடுத்த தாத்தாவை 11 வயது பேத்தி அடித்து உதைத்துள்ளார். வீட்டில் தனியாக இருந்த பேத்திகளிடம் தாத்தா, பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நிலையில் அந்த சிறுமி தைரியமாக தனது தாத்தாவை தாக்கியுள்ளார். வீடு திரும்பிய தாயிடம் அவர்கள் நடந்ததை கூறிய நிலையில், காவல் நிலையத்தில் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பேத்திகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 74 வயது தாத்தா

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் கட்டிட மேஸ்திரியான 75 வயது முதியவர். இவருடைய மகன் வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில், கட்டிடம் மேஸ்திரி, பேரக்குழந்தைகள் மற்றும் அவருடைய மருமகள் என அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். இரண்டு பேத்திகளில் 19 வயது பேத்தி கல்லூரிக்கு செல்லும் நிலையில், 11 வயது பேத்தி பள்ளியில் படித்து வருகிறார்.

இதையும் படிங்க : காதல் விவகாரம்.. பேச்சுவார்த்தைக்கு அழைத்து படுகொலை செய்யப்பட்ட பழங்குடியின இளைஞர்!

19 மற்றும் 11 வயது பேத்திகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாத்தா

கட்டிட மேஸ்திரியின் மருமகள் பஞ்சாலைக்கு வேலைக்கு சென்றுவிடும் நிலையில், பேத்திகளுடன் தாத்தா தனியாக இருந்து வந்துள்ளார். அந்த வகையில் சம்பவத்தன்று மேஸ்திரியின் மருமகள் அதிகாலையில் பஞ்சாலைக்கு வேலைக்கு சென்றுவிட்ட நிலையில், தாத்தாவுடன் பேத்திகள் தனியாக இருந்துள்ளனர். அந்த சந்தர்பத்தை பயன்படுத்திக்கொண்டு முதியவர் தனது 19 வயது பேத்தியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளர். அதுமட்டுமன்றி 11 வயது பேத்தியிடமும் அவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

இதையும் படிங்க : போதைப்பொருள் பழக்கம்.. போலீசார் தேடுதல் வேட்டையில் சிக்கிய இருவர்..

இதனால் ஆத்திரமடைந்த அந்த 11 வயது சிறுமி தனது தாத்தாவை அடித்து உதைத்துள்ளார். பின்னர் வேலை முடிந்து வீட்டிற்கு வந்த தாயிடம் இருவரும் புகார் அளித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த தாய், உடனடியாக காவல் நிலையத்தில் இந்த விவகாரம் குறித்து புகார் அளித்துள்ளார். அதன்படி, முதியவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், முதியவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

வீட்டில் தனியாக இருந்த பேத்திகளிடம் சொந்த தாத்தாவே பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Follow Us