India vs Pakistan 2026: டி20 உலகக் கோப்பையில் முதல் முறை.. இந்தியா – பாகிஸ்தான் போட்டியில் புதிதாக 15 வீரர்கள் களம்!
India vs Pakistan T20 World Cup: இந்தியா - பாகிஸ்தான் இடையிலான டி20 உலகக் கோப்பையில் இரு அணிகளிலிருந்தும் மொத்தம் 15 வீரர்கள் முதல் முறையாக இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க போட்டியில் பங்கேற்க உள்ளனர். அதாவது அபிஷேக் சர்மா, திலக் வர்மா, சஞ்சு சாம்சன், ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர், இஷான் கிஷான் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் இந்திய அணியில் களமிறங்கின்றனர்.
2026 டி20 உலகக் கோப்பையில் (2026 T20 World Cup) அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் மிகவும் ஆவலுடன் காத்திருக்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் (India vs Pakistan) இடையிலான போட்டி நாளை அதாவது 2026 பிப்ரவரி 15ம் தேதி நடைபெற உள்ளது. இந்த போட்டியானது கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாச ஸ்டேடியத்தில் நடைபெறும். குரூப் ஏ போட்டியில் இடம்பெற்றுள்ள இந்தியா, பாகிஸ்தான் இடையிலான போட்டியில் யார் வெற்றி பெறுவார்களோ, அவர்கள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறுவார்கள். இந்திய அணியில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா போன்ற அனுபவமிக்க வீரர்கள் இல்லாமல் நீண்ட காலத்திற்குப் பிறகு முதல் முறையாக ஐசிசி போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்வதால் இந்தப் போட்டி மிகப்பெரிய எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. இப்போது, சூர்யகுமார் யாதவின் தலைமையிலான இந்திய இளம் அணி, இந்த போட்டியை களத்தில் முன்னெடுத்துச் செல்லும். மறுபுறம், சல்மான் அலி அகாவின் தலைமையில் ஒரு இளம் அணியுடன் பாகிஸ்தான் விளையாடும்.
15 வீரர்கள் புதிதாக களம்:
இந்தியா – பாகிஸ்தான் இடையிலான டி20 உலகக் கோப்பையில் இரு அணிகளிலிருந்தும் மொத்தம் 15 வீரர்கள் முதல் முறையாக இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க போட்டியில் பங்கேற்க உள்ளனர். அதாவது அபிஷேக் சர்மா, திலக் வர்மா, சஞ்சு சாம்சன், ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர், இஷான் கிஷான் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் இந்திய அணியில் களமிறங்கின்றனர். இந்த 7 வீரர்களும் இதுவரை பாகிஸ்தானுக்கு எதிராக டி20 உலகக் கோப்பையில் விளையாடியதில்லை. அதன்படி, இந்த இளம் மற்றும் நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் டி20 உலகக் கோப்பையில் தங்கள் அறிமுகத்தை பெறுகிறார்கள்.




பாகிஸ்தானில் எந்த வீரர்கள் களம்.?
இதற்கிடையில், இந்த போட்டியில் பாகிஸ்தானைச் சேர்ந்த பல புதிய முகங்கள் முதல் முறையாக இந்தியாவை எதிர்கொள்ளவுள்ளன. சாஹிப்சாதா ஃபர்ஹான், சைம் அயூப், கவாஜா நஃபே, சல்மான் ஆகா, ஃபஹீம் அஷ்ரஃப், அப்ரார் அகமது, சல்மான் மிர்சா மற்றும் உஸ்மான் தாரிக் ஆகியோர் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். குறிப்பாக, பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகாவுக்கும் டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக விளையாடிய அனுபவம் இல்லை. இந்த முதல் டி20 உலகக் கோப்பை போட்டி, கேப்டன் பொறுப்புடன் சேர்ந்து, சல்மான் ஆகாவுக்கு அதிக அழுத்தத்தை உருவாக்கக்கூடும். அதன்படி, இந்த வீரர்கள் டி20 உலகக் கோப்பையில் முதல் முறையாக இந்தியாவை எதிர்கொள்கின்றனர்.
ALSO READ: மழையால் தடையா..? இந்தியா – பாகிஸ்தான் போட்டி நாளில் மோசமான வானிலை.. வெதர் அப்டேட் இதோ!
இந்திய அணியின் ஆதிக்கம்:
ஐ.சி.சி போட்டிகளை போலவே, இந்திய அணி டி20 உலகக் கோப்பையிலும் பாகிஸ்தானை ஆதிக்கம் செலுத்தி வருகிறது. டி20 உலகக் கோப்பையில் இதுவரை இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மொத்தம் 8 போட்டிகள் நடந்துள்ளன. இந்த காலகட்டத்தில், இந்திய அணி பாகிஸ்தானை 7 முறை தோற்கடித்துள்ளது. பாகிஸ்தான் ஒரு முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2024 டி20 உலகக் கோப்பையிலும் இந்திய அணி பாகிஸ்தானை தோற்கடித்தது. சமீபத்தில், ஆசியக் கோப்பையின் போது, பாகிஸ்தானும் இந்தியாவுக்கு எதிராக தொடர்ச்சியாக 3 தோல்விகளைச் சந்தித்தது.