On This Day in 2024: ஒரு வருடத்திற்கு முன்பு இதே நாள்! 2024 டி20 உலகக் கோப்பையை தூக்கிய ரோஹித் சர்மா படை!
India's T20 World Cup 2024 Victory: கடந்த 2024 ஆண்டு ஜூன் 29ம் தேதி, ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி 2024 T20 உலகக் கோப்பையை வென்றது. 17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வெற்றி இந்திய அணிக்கு கிடைத்தது. குரூப் ஸ்டேஜ் முதல் இறுதிப் போட்டி வரை அணியின் அசத்தலான வெற்றிப் பயணம், ரோஹித் சர்மாவின் தலைமைத்துவத்தின் வெளிப்பாடாகும். இந்த வெற்றியால் இந்திய அணியின் 11 ஆண்டுகால ஐசிசி பட்ட வறட்சி முடிவுக்கு வந்தது.

ரோஹித் சர்மா - விராட் கோலி
கடந்த ஒரு வருடத்திற்கு இதே நாளில் 2024 ஜூன் 29ம் தேதி இந்திய கிரிக்கெட் அணிக்கு மறக்கமுடியாத நாள்! ஏனென்றால், ஒரு வருடத்திற்கு முன்பு இதே நாளில், ரோஹித் சர்மா (Rohit Sharma) தலைமையிலான இந்திய அணி 2024 டி20 உலகக் கோப்பையில் (T20 World Cup 2024) சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. பார்படாஸில் நடந்த 2024 டி20 உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து ஐசிசி கோப்பையை வெல்லும் வறட்சியை இந்திய அணி (Indian Cricket Team) முடிவுக்கு வந்தது. இதன்மூலம், இந்திய அணி 2வது முறையாக டி20 உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது. முன்னதாக, மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணி, கடந்த 2007 செப்டம்பர் 24ம் தேதி முதல் முறையாக டி20 உலகக் கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.
17 ஆண்டுகளுக்கு பிறகு!
2007ல் முதல் டி20 உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்ற பிறகு, 2வது டி20 உலகக் கோப்பை பட்டத்தை வெல்ல இந்திய அணிக்கு 17 ஆண்டுகள் ஆனது. 2013ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபிக்கு வெற்றிக்கு பிறகு, இந்திய அணி எந்த ஐசிசி பட்டத்தையும் வெல்ல முடியுமா என்று இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் காத்திருந்தன. முன்னதாக, ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 2022 டி20 உலகக் கோப்பை மற்றும் 2023 ஒருநாள் உலகக் கோப்பையை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது. இதனால், ரோஹித் சர்மாவின் கேப்டன்சி குறித்து பல கேள்விகள் எழுப்பப்பட்டன. இருப்பினும், கடைசி வரை நம்பிக்கையை கை விடாத ரோஹித் சர்மா, 2024 டி20 உலகக் கோப்பை பட்டத்தை வென்றதன் மூலம் தனது விமர்சகர்களுக்கு தகுந்த பதிலடி கொடுத்தார். இதனால், இந்திய அணி தனது 11 ஆண்டுகால ஐசிசி பட்ட வறட்சியை முடிவுக்கு கொண்டு வந்தது.
2024 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் பயணம்:
2024 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றது. இதில் பாகிஸ்தான், அமெரிக்கா, அயர்லாந்து மற்றும் கனடா ஆகிய அணிகள் இடம் பெற்றிருந்தன. போட்டி தொடங்குவதற்கு முன்பு, இந்தியா வங்கதேசத்திற்கு எதிராக ஒரே ஒரு பயிற்சி ஆட்டத்தில் மட்டுமே விளையாடி, அதிலும் வெற்றி பெற்றது. இந்தியா தனது குரூப் நிலையின் அனைத்து போட்டிகளையும் அமெரிக்காவில் விளையாடியது. போட்டியின் முதல் போட்டி 2024 ஜூன் 5ம் தேதி அயர்லாந்திற்கு எதிராக இருந்தது, அதில் அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதன் பிறகு, 2024 ஜூன் 9ம் தேதி நியூயார்க்கில் பாகிஸ்தானை எதிர்கொண்டது. இந்த போட்டியில் பாகிஸ்தானை 6 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடிப்பதில் இந்தியா வெற்றி பெற்றது. பின்னர் 2024 ஜூன் 12ம் தேதி அணி அமெரிக்காவை எதிர்கொண்டது. அதில், இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று சூப்பர் எட்டு சுற்றுக்கு தகுதி பெற்றது.
இந்தியாவின் கடைசி குரூப் ஸ்டேஜ் போட்டி புளோரிடாவில் கனடாவுக்கு எதிராக இருந்தது. இந்த போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. அடுத்த சுற்றுக்காக இந்திய அணி வெஸ்ட் இண்டீஸூக்கு பறந்தது. இதில், இந்திய அணியின் முதல் போட்டியில் 2024 ஜூன் 20ம் தேதி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக அமைந்தது. இந்த போட்டியில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் பிறகு, 2024 ஜூன் 22ம் தேதி இந்திய அணி வங்கதேசத்தை 50 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. பின்னர், 2024 ஜூன் 24ம் தேதி இந்திய அணி ஒருநாள் உலகக் கோப்பை வென்ற ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது.
ஐசிசி கோப்பைக்காக காத்திருப்பு:
This Day. Last Year. Infinite Memories ♾️
𝗧𝟮𝟬 𝗪𝗼𝗿𝗹𝗱 𝗖𝗵𝗮𝗺𝗽𝗶𝗼𝗻𝘀 🏆#TeamIndia pic.twitter.com/pogI5bjMjM
— BCCI (@BCCI) June 28, 2025
இந்தப் போட்டியில் 24 ரன்கள் வித்தியாசத்தில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது. கடைசி நான்கில், இந்திய அணி நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை எதிர்கொண்டது. 2022ம் ஆண்டு அரையிறுதியில் இந்திய அணியின் பயணத்தை இங்கிலாந்து முடிவுக்குக் கொண்டுவந்தது. இதற்கு இந்தியா பழிவாங்கி நடப்பு சாம்பியன் அணியான இங்கிலாந்து அணியை 68 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இறுதியில், 2024 ஜூன் 29ம் தேதியான இதே நாளில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தூக்கியது.
இந்த வெற்றிக்கு பிறகு, இந்திய அணியின் ஜாம்பவான்களான விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர்.