Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

India’s New Test Captain: கேப்டன்ஷியை வேண்டாம் என்ற பும்ரா.. சுப்மன் கில்..? ரிஷப் பண்ட்..? கடும் போட்டி..!

India vs England Test series: ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, ஜஸ்பிரித் பும்ரா கேப்டன் பதவியில் இருந்து விலகியுள்ளார். இதனால், சுப்மன் கில் அல்லது ரிஷப் பண்ட் ஆகியோர் புதிய கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளது. பணிச்சுமை மற்றும் மன அழுத்தம் காரணமாக பும்ரா இந்த முடிவை எடுத்துள்ளார். அடுத்த வாரம் தேர்வுக்குழு கூடி புதிய கேப்டனை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

India’s New Test Captain: கேப்டன்ஷியை வேண்டாம் என்ற பும்ரா.. சுப்மன் கில்..? ரிஷப் பண்ட்..? கடும் போட்டி..!
சுப்மன் கில் - ரிஷப் பண்ட்Image Source: PTI
mukesh-kannan
Mukesh Kannan | Published: 11 May 2025 22:48 PM

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்பாக, இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் கேப்டனாக இருந்த ரோஹித் சர்மா (Rohit Sharma) டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதையடுத்து, இந்திய அணியின் புதிய டெஸ்ட் கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா வருவார் என அனைவராலும் கருதப்பட்டது. இப்போது அடுத்த கேப்டன் போட்டியில் இருந்து ஜஸ்பிரித் பும்ரா (Jasprit Bumrah) தானாகவே தன்னை விலக்கிக் கொண்டதாக ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக, ரோஹித் சர்மா ஓய்வுக்குப் பிறகு, இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின்  புதிய கேப்டனாகும் போட்டியில் சுப்மன் கில் மற்றும் ரிஷப் பண்ட் முன்னிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்தின் பிரபல ஊடக சேனலான ஸ்கை ஸ்போர்ட்ஸ் வெளியிட்ட செய்தியின்படி, ஜஸ்பிரித் பும்ரா இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக வர விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், அதிக பணிச்சுமை மற்றும் மன அழுத்தம் காரணமாக, இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் உள்ள 5 டெஸ்ட் போட்டிகளிலும் பும்ரா விளையாட விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளது. முன்னதாக பார்டர்-கவாஸ்கர் டிராபியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக பும்ரா சாம்பியன்ஸ் டிராபியில் விளையாட முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பும்ரா 5 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட மாட்டாரா..?

பணிச்சுமை மற்றும் மன அழுத்தம் காரணமாக, இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் 5 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட ஜஸ்பிரித் பும்ரா விரும்பவில்லை என பிசிசிஐயிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியில் தொடர்ந்து விளையாடக்கூடிய ஒரு இளம் வீரரை கேப்டன் பதவிக்கு தேர்வுக்குழு தேர்வு செய்ய விருப்பம் காட்டி வருகிறது. அதன்படி, இளம் வீரர்களான சுப்மன் கில் அல்லது ரிஷப் பண்ட் ஆகியோரில் யாரேனும் ஒருவரை கேப்டனாக நியமிக்க திட்டமிட்டு வருகிறது. புதிய கேப்டன் குறித்து அடுத்த வாரம் தேர்வாளர்கள் மத்தியில் ஒரு கூட்டம் நடத்தப்படலாம் என்றும், இந்த 2 பேரில் யாருக்கு கேப்டன் பதவி வழங்கப்படவில்லையோ, அவருக்கு துணை கேப்டன் பதவி வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

ரோஹித் சர்மாவின் அடுத்த வாரிசு யார்..?<

/h3>
முன்னதாக, செய்தி நிறுவனமான PTI வெளியிட்ட தகவலின்படி, டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் சர்மாவின் வாரிசாக சுப்மன் கில் அறிவிக்கப்படலாம். அதன் தொடர்ச்சியாக, ரிஷப் பண்ட் துணை கேப்டனாக நியமிக்கப்படலாம். சுப்மன் கில் ஏற்கனவே சாம்பியன்ஸ் டிராபியின்போது இந்திய ஒருநாள் அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யா மேல் ஏன் வன்மம்? ரசிகருக்கு கார்த்திக் சுப்பராஜ் பதில்
சூர்யா மேல் ஏன் வன்மம்? ரசிகருக்கு கார்த்திக் சுப்பராஜ் பதில்...
டிடி நெக்ஸ்ட் லெவல் பாடல் - சந்தானத்தின் மீது பாஜகவினர் புகார்
டிடி நெக்ஸ்ட் லெவல் பாடல் - சந்தானத்தின் மீது பாஜகவினர் புகார்...
தொடர்ந்து நம்பர் ஒன்! டெஸ்ட் கேப்டனாக கோலி படைத்த சாதனைகள்!
தொடர்ந்து நம்பர் ஒன்! டெஸ்ட் கேப்டனாக கோலி படைத்த சாதனைகள்!...
கண் புற்றுநோயின் எச்சரிக்கை: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!
கண் புற்றுநோயின் எச்சரிக்கை: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!...
விமான நிலையங்களை மீண்டும் திறக்க மத்திய அரசு உத்தரவு!
விமான நிலையங்களை மீண்டும் திறக்க மத்திய அரசு உத்தரவு!...
தமிழகத்தில் தொடரும் வெயிலும் மழையும்...கனமழை எப்போது?
தமிழகத்தில் தொடரும் வெயிலும் மழையும்...கனமழை எப்போது?...
டூரிஸ் ஃபேமிலி படத்தை பாராட்டிய ரஜினிகாந்த்...
டூரிஸ் ஃபேமிலி படத்தை பாராட்டிய ரஜினிகாந்த்......
உலர் பழங்கள்... நன்மைகள் மற்றும் அவற்றை எப்போது உண்ணலாம்?
உலர் பழங்கள்... நன்மைகள் மற்றும் அவற்றை எப்போது உண்ணலாம்?...
10 செயற்கைக்கோள்கள் மூலம் இந்தியாவை கண்காணிக்கிறோம் - இஸ்ரோ!
10 செயற்கைக்கோள்கள் மூலம் இந்தியாவை கண்காணிக்கிறோம் - இஸ்ரோ!...
பாகிஸ்தானுக்கு எதிராக ராணுவத்திற்கு பிரதமர் மோடி உத்தரவு..!
பாகிஸ்தானுக்கு எதிராக ராணுவத்திற்கு பிரதமர் மோடி உத்தரவு..!...
டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் விராட் கோலி..!
டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் விராட் கோலி..!...