இந்தியாவிற்கு எதிராக 359 ரன்கள் இலக்கு.. கெத்தாக துரத்தி வெற்றி கண்ட தென்னாப்பிரிக்கா!
ராய்ப்பூரில் நடைபெற்ற இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான 2வது ஒருநாள் போட்டியில் 359 ரன்கள் இலக்கை துரத்திய தென்னாப்பிரிக்கா அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை தென்னாப்பிரிக்கா அணி 1-1 என சமன் செய்தது.

தென்னாப்பிரிக்கா வெற்றி
ராய்ப்பூரில் நடைபெற்ற இந்தியா – தென்னாப்பிரிக்கா (IND vs SA) இடையிலான 2வது ஒருநாள் போட்டியில் 359 ரன்கள் இலக்கை துரத்திய தென்னாப்பிரிக்கா அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை தென்னாப்பிரிக்கா அணி 1-1 என சமன் செய்தது. ராய்ப்பூரில் நடந்த போட்டியில் டாஸ் இழந்த இந்தியா, விராட் கோலி (Virat Kohli) மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரின் சதங்களால் 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 358 ரன்கள் குவித்தது. இதுமட்டுமின்றி, கே.எல்.ராகுல் அரைசதமும் கடந்திருந்தார். பதிலுக்கு பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி இறுதி ஓவர் சென்று 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை கண்டது.
ALSO READ: கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறை! 20 முறை தொடர்ந்து டாஸ் இழந்த இந்திய அணி!
இந்திய மண்ணில் அதிகபட்ச ஸ்கோர்:
South Africa win the 2nd ODI by 4 wickets.
We go to Vizag with the series levelled at 1-1.
Scorecard ▶️ https://t.co/oBs0Ns6SqR#TeamIndia | #INDvSA | @IDFCFIRSTBank pic.twitter.com/rGOhm95NnI
— BCCI (@BCCI) December 3, 2025
இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெளிநாட்டு அணி துரத்திய அதிகபட்ச ஒருநாள் ஸ்கோர் இதுவாகும். முன்னதாக, ஆஸ்திரேலியா இந்தியாவில் 359 ரன்கள் என்ற சாதனையை எட்டியது. இந்த சாதனையை கடந்த 2019ம் ஆண்டில் இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியா படைத்தது. இப்போது, தென்னாப்பிரிக்காவும் 359 ரன்களைத் துரத்தியதன் மூலம் ஆஸ்திரேலியாவின் சாதனையை சமன் செய்துள்ளது.
இந்தப் போட்டியில் இந்தியாவின் தோல்விக்கு மோசமான பீல்டிங்கும் ஒரு காரணம் என்றே கூறலாம். இந்திய வீரர்கள் பல கேட்சுகளை தவறவிட்டனர். அதே நேரத்தில், சிறந்த பீல்டர்களான வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் ஏராளமான தவறான ஃபீல்டிங் செய்தனர்.
ALSO READ: 53வது ஒருநாள் சதம்.. 84வது சர்வதேச சதம்.. மிரட்டும் விராட் கோலி..!
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் அதிக ரன் சேசிங்கள்
- தென்னாப்பிரிக்கா – 359 ரன்கள் (2025)
- ஆஸ்திரேலியா – 359 ரன்கள் (2019)
- நியூசிலாந்து – 348 ரன்கள் (2020)
- இங்கிலாந்து – 337 ரன்கள் (2021)
விராட்-கெய்க்வாட் சதம் வீண்:
இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் மொத்தம் 721 ரன்கள் குவிக்கப்பட்டன. இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவின் இன்னிங்ஸ்களில் மூன்று சதங்கள் இடம்பெற்றன. விராட் கோலி இந்திய அணிக்காக 102 ரன்கள் எடுத்து, தனது 53வது ஒருநாள் சதத்தைக் குறித்தார். இதற்கிடையில், ருதுராஜ் கெய்க்வாட் வெறும் 77 பந்துகளில் தனது சதத்தை எட்டினார். இது ஒருநாள் போட்டிகளில் இந்தியாவின் வேகமான சதங்களில் ஒன்றாகும். தென்னாப்பிரிக்கா அணியில் 110 ரன்கள் எடுத்த ஐடன் மார்க்ரம், கோலி மற்றும் கெய்க்வாட்டின் இரண்டு சதங்களும் வீணாகின. டெவால்ட் பிரெவிஸின் 34 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து, வெற்றிக்கு பெரிதும் உதவினார்.