AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மாருதியின் மைந்தன்: அனுமன் ஜெயந்தி கொண்டாட்டத்தின் பின்னணியும் சிறப்புகளும்..!

Hanuman Jayanti: அஞ்சனை மைந்தன் அனுமன் அவதரித்த தினமே அனுமன் ஜெயந்தியாக பக்தி சிரத்தையுடன் கொண்டாடப்படுகிறது. அறிவு, வீரம் மற்றும் ராம பக்தியின் சிகரமாக விளங்கும் அனுமனை வழிபட தடைகள் அனைத்தும் நீங்கும். கோவில்களில் நடைபெறும் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகளில் கலந்துகொள்வது மன அமைதியைத் தரும்.

மாருதியின் மைந்தன்: அனுமன் ஜெயந்தி கொண்டாட்டத்தின் பின்னணியும் சிறப்புகளும்..!
அனுமன் ஜெயந்திImage Source: tv9
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 02 Apr 2026 09:30 AM IST

அனுமன் ஜெயந்தி என்பது வாயு புத்திரன் அனுமனின் பிறந்தநாளைக் குறிக்கும் புனிதமான நாளாகும். இது தீய சக்திகளிடமிருந்து பாதுகாப்பு பெறவும், மனவலிமையை அதிகரிக்கவும் பக்தர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் அனுமன் கோவில்களில் வடை மாலை மற்றும் வெண்ணெய் காப்பு சாற்றி சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. ராமபிரானின் தீவிர பக்தரான அனுமனை வணங்குவதால் புத்தி, பலம் மற்றும் புகழ் கிட்டும் என்பது ஐதீகம். சனி பகவானின் பாதிப்பிலிருந்து விடுபட விரும்புவோர் இந்த நாளில் அனுமனைத் துதிப்பது நற்பலன் தரும். ராமாயண பாராயணம் மற்றும் அனுமன் சாலீசா வாசிப்பது இந்தத் திருநாளின் முக்கிய அம்சமாகும். பௌர்ணமி திதியில் வரும் இந்த விழா பக்தர்களுக்கு ஆன்மீக எழுச்சியையும் நம்பிக்கையையும் வழங்குகிறது.

அனுமன் ஜெயந்தி ஏன் கொண்டாடப்படுகிறது?

இந்து புராணங்களின்படி, சிவனின் அம்சமாக கருதப்படும் வாயு புத்திரன் அனுமன், சித்திரை மாத பௌர்ணமி திதியில் அவதரித்தார். அஞ்சனை மற்றும் கேசரி ஆகியோருக்கு மகனாகப் பிறந்த அனுமன், அறிவாற்றல், உடல் வலிமை மற்றும் தன்னலமற்ற பக்தியின் அடையாளமாகத் திகழ்கிறார். ராமாயணத்தில் ஸ்ரீ ராமபிரானுக்கு உதவியாக இருந்து, சீதையை மீட்கும் பணியில் முக்கிய பங்காற்றிய அனுமனின் பிறப்பை நினைவுகூரும் வகையிலேயே அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. தீய சக்திகளை அழித்து, தர்மத்தை நிலைநாட்டவும், பக்தர்களுக்குத் தைரியத்தை வழங்கவும் அனுமன் அவதரித்ததாகக் கூறப்படுகிறது.

அனுமன் ஜெயந்தியின் ஆன்மீக விசேஷங்கள்

அனுமன் ஜெயந்தி அன்று பக்தர்கள் அதிகாலையிலேயே நீராடி, அனுமன் கோவில்களுக்குச் சென்று வழிபடுவது வழக்கம். அனுமனுக்கு வெண்ணெய் காப்பு சாற்றுதல், வடை மாலை அணிவித்தல் மற்றும் செந்தூரம் பூசுதல் போன்றவை மிகவும் விசேஷமாகக் கருதப்படுகிறது. அனுமன் “சிரஞ்சீவி” வரம் பெற்றவர் என்பதால், இன்றும் அவர் உயிருடன் இருப்பதாக நம்பப்படுகிறது. அவரை வழிபடுவதன் மூலம் சனிக்கிரகத்தின் தோஷங்கள் நீங்கும் என்பதும், தீய சக்திகள் அண்டாது என்பதும் பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. குறிப்பாக, அனுமன் சாலீசா மற்றும் ராம நாமத்தை உச்சரிப்பது இந்த நாளில் அளப்பரிய பலன்களைத் தரும்.

Also Read: வராஹ ஜெயந்தி எப்போது? தேதி மற்றும் வழிபாடு முறை.. முழு விவரம்!!

வழிபாட்டு முறைகளும் கொண்டாட்டங்களும்

இந்தத் திருநாளில் வீடுகள் மற்றும் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. அனுமனுக்குப் பிடித்தமான அவல், பொரி, கடலை மற்றும் பழங்களை நிவேதனமாகப் படைப்பார்கள். ராமாயண பாராயணம் செய்வது இந்த நாளின் மற்றொரு முக்கிய அம்சமாகும். ராமன் இருக்கும் இடத்தில் அனுமன் இருப்பார் என்பதால், ராம நாமத்தை ஜபிப்பதே அனுமனை மகிழ்விப்பதற்கான மிக எளிய வழியாகும். இந்நாளில் வழங்கப்படும் பிரசாதங்கள் பக்தர்களுக்குப் பெரும் மன அமைதியையும், உடல் பலத்தையும் தருவதாக நம்பப்படுகிறது.

Follow Us