AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வராஹ ஜெயந்தி எப்போது? தேதி மற்றும் வழிபாடு முறை.. முழு விவரம்!!

varaha jayanti 2026: குறிப்பாகத் தமிழ்நாட்டில் உள்ள ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி கோவில் மற்றும் திருப்பதியில் உள்ள ஆதி வராஹ சுவாமி கோவில்களில் இந்த நாளில் தரிசனம் செய்வது மிகவும் விசேஷமானது. வீடு அல்லது நிலம் தொடர்பான வழக்குகளில் சிக்கியிருப்பவர்கள் வராஹ மூர்த்தியை வழிபட்டால் விரைவில் தீர்வு கிடைக்கும்.

esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 01 Apr 2026 14:44 PM IST
மகாவிஷ்ணு எடுத்த தசாவதாரங்களில் மூன்றாவது அவதாரமான வராஹ அவதாரம் தோன்றிய தினமே 'வராஹ ஜெயந்தி'யாகக் கொண்டாடப்படுகிறது. பூமியைக் காக்க இறைவன் எடுத்த இந்த உன்னதமான அவதாரத்தைப் பற்றிய முழுமையான தகவல்களைக் கீழே காணலாம்.

மகாவிஷ்ணு எடுத்த தசாவதாரங்களில் மூன்றாவது அவதாரமான வராஹ அவதாரம் தோன்றிய தினமே 'வராஹ ஜெயந்தி'யாகக் கொண்டாடப்படுகிறது. பூமியைக் காக்க இறைவன் எடுத்த இந்த உன்னதமான அவதாரத்தைப் பற்றிய முழுமையான தகவல்களைக் கீழே காணலாம்.

1 / 5
2026-ஆம் ஆண்டு வராஹ ஜெயந்தி எப்போது?: ஏப்ரல் 7, 2026 (செவ்வாய்க்கிழமை) தமிழ் மாதம் பங்குனி 24ம் தேதி ஆகும். வராஹ அவதாரத்தின் பின்னணி மற்றும் முக்கியத்துவம் புராணங்களின்படி, இரண்யாட்சன் எனும் அசுரன் பூமியைப் பாய் போலச் சுருட்டிச் சென்று பாதாள லோகத்தில் (கடலுக்கடியில்) மறைத்து வைத்தான். இதனால் தேவர்களும் முனிவர்களும் கலக்கமடைந்தனர்.

2026-ஆம் ஆண்டு வராஹ ஜெயந்தி எப்போது?: ஏப்ரல் 7, 2026 (செவ்வாய்க்கிழமை) தமிழ் மாதம் பங்குனி 24ம் தேதி ஆகும். வராஹ அவதாரத்தின் பின்னணி மற்றும் முக்கியத்துவம் புராணங்களின்படி, இரண்யாட்சன் எனும் அசுரன் பூமியைப் பாய் போலச் சுருட்டிச் சென்று பாதாள லோகத்தில் (கடலுக்கடியில்) மறைத்து வைத்தான். இதனால் தேவர்களும் முனிவர்களும் கலக்கமடைந்தனர்.

2 / 5
உலகைக் காக்க மகாவிஷ்ணு ஒரு பிரம்மாண்டமான பன்றி (வராஹம்) உருவெடுத்து கடலுக்குள் சென்றார். அங்கு அசுரனை வதம் செய்து, தனது கூர்மையான கோரைப் பற்களால் பூமி தேவியைத் தூக்கி வந்து பழையபடி நிலைநிறுத்தினார். இந்த அவதாரம், அதர்மம் அழியும் என்பதையும், பூமி தேவியின் மீதான இறைவனின் கருணையையும் பறைசாற்றுகிறது.

உலகைக் காக்க மகாவிஷ்ணு ஒரு பிரம்மாண்டமான பன்றி (வராஹம்) உருவெடுத்து கடலுக்குள் சென்றார். அங்கு அசுரனை வதம் செய்து, தனது கூர்மையான கோரைப் பற்களால் பூமி தேவியைத் தூக்கி வந்து பழையபடி நிலைநிறுத்தினார். இந்த அவதாரம், அதர்மம் அழியும் என்பதையும், பூமி தேவியின் மீதான இறைவனின் கருணையையும் பறைசாற்றுகிறது.

3 / 5
விரத முறைகள் மற்றும் வழிபாடு: அதிகாலையிலேயே நீராடி, தூய ஆடை அணிந்து விரதத்தைத் தொடங்க வேண்டும். மகாவிஷ்ணுவின் வராஹ அவதாரப் படம் அல்லது விக்கிரகத்திற்குத் துளசி மாலை அணிவித்து, சந்தனம் மற்றும் குங்குமத்தால் அலங்கரிக்க வேண்டும். 'ஓம் நமோ பகவதே வராஹரூபாய' போன்ற வராஹ கவசம் மற்றும் விஷ்ணு சகஸ்ரநாமம் ஓதுவது மிகுந்த பலனைத் தரும். சர்க்கரைப் பொங்கல், பால், தேன் மற்றும் பழங்களை நைவேத்தியமாகப் படைக்கலாம்.

விரத முறைகள் மற்றும் வழிபாடு: அதிகாலையிலேயே நீராடி, தூய ஆடை அணிந்து விரதத்தைத் தொடங்க வேண்டும். மகாவிஷ்ணுவின் வராஹ அவதாரப் படம் அல்லது விக்கிரகத்திற்குத் துளசி மாலை அணிவித்து, சந்தனம் மற்றும் குங்குமத்தால் அலங்கரிக்க வேண்டும். 'ஓம் நமோ பகவதே வராஹரூபாய' போன்ற வராஹ கவசம் மற்றும் விஷ்ணு சகஸ்ரநாமம் ஓதுவது மிகுந்த பலனைத் தரும். சர்க்கரைப் பொங்கல், பால், தேன் மற்றும் பழங்களை நைவேத்தியமாகப் படைக்கலாம்.

4 / 5
வழிபாட்டின் பலன்கள்: இந்த நாளில் ஏழைகளுக்கு உணவு அல்லது வஸ்திர தானம் செய்வது விசேஷமானது. வீடு அல்லது நிலம் தொடர்பான வழக்குகளில் சிக்கியிருப்பவர்கள் வராஹ மூர்த்தியை வழிபட்டால் விரைவில் தீர்வு கிடைக்கும். மனதில் உள்ள தேவையற்ற பயம் நீங்கி, மன உறுதி மற்றும் தைரியம் பெருகும். இழந்த செல்வம் மற்றும் கௌரவத்தை மீண்டும் பெற இந்தத் திருநாள் உகந்தது.

வழிபாட்டின் பலன்கள்: இந்த நாளில் ஏழைகளுக்கு உணவு அல்லது வஸ்திர தானம் செய்வது விசேஷமானது. வீடு அல்லது நிலம் தொடர்பான வழக்குகளில் சிக்கியிருப்பவர்கள் வராஹ மூர்த்தியை வழிபட்டால் விரைவில் தீர்வு கிடைக்கும். மனதில் உள்ள தேவையற்ற பயம் நீங்கி, மன உறுதி மற்றும் தைரியம் பெருகும். இழந்த செல்வம் மற்றும் கௌரவத்தை மீண்டும் பெற இந்தத் திருநாள் உகந்தது.

5 / 5
Follow Us