Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Ayyappan Temple: சனிதோஷ நிவர்த்தி பூஜை.. இந்த ஐயப்பன் கோயிலுக்கு போங்க!

பக்தர்களின் நன்கொடையால் கட்டப்பட்ட இந்த கோயில், தனித்துவமான நீராஜன பூஜை மற்றும் ஆண்டுதோறும் நடைபெறும் சகஸ்ர கலாசபிஷேகம் போன்ற சிறப்பு வழிபாடுகளுக்குப் பெயர் பெற்றது. சபரிமலை பக்தர்களுக்கு தங்குமிடம் மற்றும் உணவும் வழங்கப்படுவதுடன், நெய் அபிஷேக அனுமதிச்சீட்டும் இங்கு வழங்கப்படுகிறது. மகரஜோதி பூஜையும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

Ayyappan Temple: சனிதோஷ நிவர்த்தி பூஜை.. இந்த ஐயப்பன் கோயிலுக்கு போங்க!
சேலம் ஐயப்பன் கோயில்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Published: 20 Jun 2025 13:10 PM

பலபேருக்கும் ஐயப்பன் என்றாலே சபரிமலை தான் நினைவுக்கு வரும். அதேசமயம் கேரளாவிலும் ஐயப்பனின் அறுபடை வீடானது அமைந்திருக்கிறது. ஐயப்பனை காண ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் உள்ளூர் முதல் உலகம் வரையுள்ள பல்வேறு இடங்களில் இருந்தும் வருகை தருகின்றனர். மிகவும் சக்தி வாய்ந்த கடவுள்களில் ஒன்று தான் ஐயப்பன். அவரிடம் நாம் சரணடைந்தாலே வாழ்க்கையில் இருக்கும் துன்பங்களை நீக்கி இன்பங்களைப் பெற்று தருவார் என நம்பிக்கை பக்தர்களிடத்தில் உள்ளது. ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் இருப்பவர்களை காட்டிலும் எதிரில் இருப்பவர்கள் கூட மிகவும் கட்டுக்கோப்பாகவும், விதிமுறைகளை பின்பற்றியும் இருக்கும் அளவுக்கு அவரின் பக்தி அளப்பறியது. இப்படியான ஐயப்பனுக்கு தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களிலும் தனி கோயில்கள் உள்ளது. அந்த வகையில் சேலம் மாவட்டம் சாஸ்தா நகரில் அமையப் பெற்றிருக்கும் ஐயப்பன் கோயில் வரலாறு மற்றும் சிறப்புகளைக் காணலாம்.

கோயில் உருவான வரலாறு 

சபரிமலை சென்று வழிபடும் ஐயப்ப பக்தர்கள் சேலம் மாவட்டத்தில் ஐயப்பனுக்கு சன்னிதானம் அமைக்க வேண்டும் ஒரு அமைப்பை தொடங்கினார்கள். அதன்படி பக்தர்களிடம் நன்கொடை பெறப்பட்டு இந்த ஐயப்பன் கோயில் ஆனது அமைக்கப்பட்டது. சேலத்தில் எந்த இடத்தில் கோயில் கட்டலாம் என இந்த அமைப்பின் நிர்வாகிகள் குரங்கு சாவடியில் உள்ள சென்றாய பெருமாள் கோயில் நிர்வாகிகள் இடம் ஆலோசனை செய்தனர்.

அப்போது திடீரென ஒரு ஒளி தோன்றி கோயில் அமைய வேண்டிய இடத்தை காண்பித்ததாக சொல்லப்படுகிறது. அதன் பிறகு ஐயப்பன் சேவா நிர்வாகிகள் அந்த இடத்தை வாங்கி அங்கு கோயில் கட்டி உள்ளனர். இந்தக் கோயில் எப்படி அமைய வேண்டும் என்பதற்கான வரைபடத்தை காணிப்பையூர் ஸ்ரீ கிருஷ்ணன் நம்பூதிரி வரைந்து கொடுத்துள்ளார். இவர் சபரிமலை மற்றும் குருவாயூர் கோயில்கள் எப்படி கட்டப்பட வேண்டும் என்பதை தீர்மானித்த பரம்பரையினர் வழிவந்தவராவார். இந்த ஐயப்பன் கோயிலை மகாபலிபுரம் கணபதி ஸ்தபதி கட்டி முடித்தார்.

கோயிலின் சிறப்புகள்

சனி தோஷ நிவர்த்தி பூஜையான நீராஜனம் இக்கோயிலில் நடைபெறுகிறது. இந்த பூஜை தமிழ்நாட்டில் வேறு எந்த கோயில்களிலும் கிடையாது. இவ்வளவு ஏன் புகழ்பெற்ற திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில் கூட இந்த நீராஜனம் பூஜை கிடையாது. அதேபோல் ஆண்டு தோறும் சகஸ்ர கலாசபிஷேகம் நடைபெறுகிறது. இந்த நிகழ்வுக்காக இந்தியாவில் உள்ள புண்ணிய நதிகளில் இருந்து புனித நீர் கொண்டுவரப்பட்டு பிரம்மாண்ட வேள்வி நடத்தி அந்த புனித நீர்களின் பெயர்களை கொண்டு அபிஷேகம் செய்து ஐயப்பனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் சபரிமலை செல்லும் வெளியூர் பக்தர்களுக்கு இந்தக் கோயிலின் சேவா சங்கம் மூலம் தங்குவதற்கு இடமும், உணவும் வழங்கப்படுகிறது. சபரிமலையில் செய்யப்படும் நெய் அபிஷேகத்திற்கு தேவையான அனுமதிச்சீட்டும் இந்த கோயிலில் வழங்கப்படுகிறது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த கோயிலுக்கு வந்து மனம் உருகி ஐயப்பனை வேண்டிக் கொண்டால் அடுத்த ஆண்டு மழலை செல்வ வளம் அருளுவார் என்பது நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது.

மகர ஜோதி பூஜை

இந்தக் கோயில் ஆனது தினமும் காலை 6 மணி முதல் 11 மணி வரையும், மாலையில் 4மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்திருக்கும். கோயிலின் உள்ளே நுழைந்ததும் அங்கிருக்கும் பலிபீடமும் 42 அடி உயர கொடி மரமும் நம்மை வரவேற்கிறது. மூலஸ்தானத்திற்கு இடது பக்கத்தில் நவகிரக சன்னதி உள்ளது. இந்தக் கோயிலின் நடுவாக பிறந்த குழந்தையை போன்று ஹரிஹர மைந்தன் ஐயப்பன் காட்சி கொடுக்கிறார். அவருக்கு வலப்பக்கத்தில் விநாயகர் அருள் பாலிக்கிறார்.

இந்த ஐயப்பன் கோயிலில் மகரஜோதி பூஜை வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அதன்படி உற்சவருக்கு பவானி கூடுதுறையில் ஆறாட்டு விழாவானது நடைபெறுகிறது. அதன்பிறகு யானை மேல் திருவாபரண பெட்டி வைத்து ஊர்வலமாக வந்து சேலம் கொண்டு வரப்படுகிறது. பின்பு கூச மலையில் கற்பூர ஜோதியானது ஏற்றப்படுகிறது. தினமும் காலையில் கணபதி ஹோமம் செய்தும் மற்றும் இரவில் ஹரிவராசனம் பாடி கோயில் நடையானது சாற்றப்படுகிறது. வாய்ப்பு கிடைப்பவர்கள் இந்த கோயிலுக்கு ஒரு முறை சென்று வாருங்கள்.

(ஆன்மிக மற்றும் இறை நம்பிக்கை அடிப்படையில் இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு அறிவியல் பூர்வமாக விளக்கம் இல்லை)