AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அதிகரிக்கும் குருவின் பலம்.. இந்த 6 ராசிக்காரர்களுக்கு குபேர யோகம்!

Astrology: 2025 ஜூலை 8ம் தேதி குரு மௌத்யம் நீங்கியதால், ரிஷபம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் ராசிகளுக்கு அக்டோபர் 5 வரை குபேர யோகம் உண்டாகும். இந்த யோகத்தால் செல்வ வளர்ச்சி, வீடு, குழந்தை பாக்கியம், வேலை, வியாபாரத்தில் லாபம் போன்ற பலன்கள் கிடைக்கும். ராசிக்கேற்ப பலன்கள் மாறுபடும் என கணிக்கப்பட்டுள்ளது.

அதிகரிக்கும் குருவின் பலம்.. இந்த 6 ராசிக்காரர்களுக்கு குபேர யோகம்!
ஜோதிடப்பலன்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 10 Jul 2025 13:00 PM IST

ஜோதிட சாஸ்திரத்தைப் பொறுத்தவரை கிரகங்களின் பார்வை, பெயர்ச்சி, தாக்கம் ஆகியவை மிகப்பெரிய அளவில் மாற்றங்களை கொடுக்கக் கூடியது. அந்த வகையில் 2025, ஜூலை மாதம் 8 ஆம் தேதி குரு பகவான் சூரியனுடன் இணையும் நிலையை குறிக்கும் குரு மௌத்யமி நீங்கியுள்ளது. இதன் காரணமாக, குரு, சூரியனின் செல்வாக்கு மட்டுமல்லாமல், மற்ற கிரகங்களின் சேர்க்கை மற்றும் தீய அம்சங்களிலிருந்தும் வலுவடைந்து வருகிறார். செல்வம், வீடு மற்றும் மகனின் அதிபதியான குருவின் பலம் அதிகரிப்பதால், ரிஷபம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு மற்றும் கும்பம் ராசிக்காரர்களுக்கு குபேர யோகம் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த பலன்கள் சம்பந்தப்பட்ட ராசிக்காரர்களுக்கு அக்டோபர் 5 ஆம் தேதி வரை கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதனைப் பற்றி நாம் காணலாம்.

6 ராசிக்கு அடிக்கப்போகும் குபேர யோகம்

  1. ரிஷபம்: பணவீட்டில் குரு இருப்பதால், இந்த ராசிக்காரர்கள் அடுத்த மூன்று மாதங்களில் செல்வந்தர்களாக மாற வாய்ப்புள்ளது. நிதிப் பிரச்சினைகள் கிட்டத்தட்ட முழுமையாகத் தீர்க்கப்படும் வாய்ப்பு உண்டாகும். சிறிது முயற்சி செய்தாலே போதும், வீட்டு யோகம் நிச்சயமாக உருவாகும். வேலையில் பதவி உயர்வுகளைப் பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்ததை விட அதிகரிக்கும். வேலை மற்றும் திருமண முயற்சிகள் வெற்றி பெறும். வீட்டில் சுப நிகழ்வுகள் நடக்க வாய்ப்பு உள்ளது. மனதில் உள்ள ஆசைகள் நிறைவேறும்.
  2. மிதுனம்: இந்த ராசிக்கு குருவின் பலம் அதிகரிப்பதால், திட்டமிட்ட பணிகள் அனைத்தும் விரைந்து நிறைவேறும், மனதின் முக்கியமான ஆசைகள் மற்றும் நம்பிக்கைகள் உண்டாகும். பங்குகள் மற்றும் முதலீடுகள் மிகவும் லாபகரமாக இருக்கும். வருமான வளர்ச்சிக்கு இது மிகவும் சாதகமான நேரமாக இருக்கும். சொந்த வீடு வாங்கும் கனவோடு, வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் ஆசை கைகூடும். பெரும்பாலான உடல்நலப் பிரச்சினைகளிலிருந்து  நிவாரணம் கிடைக்கும்.  தந்தையிடமிருந்து  சொத்து கிடைக்க வாய்ப்பு உள்ளது.
  3. சிம்மம்: இந்த ராசியின் சுப ஸ்தானத்தில் குருவின் பலம் அதிகரிக்கிறது. இதனால் ராசிக்காரர்களுக்கு திடீர் நிதி ஆதாயங்கள் ஏற்படும். மேலும் பங்குகள் மற்றும் முதலீடுகளால் குறிப்பிடத்தக்க நன்மை கிடைக்கும். வேலையில் பதவி உயர்வுகளுக்கு வாய்ப்புண்டு. சம்பளம் மற்றும் சலுகைகள் எதிர்பார்த்ததை விட அதிகரிக்கும். குழந்தைகள் பிறப்பு தொடர்பான நல்ல செய்தி வந்து சேரும். வேலை மற்றும் வணிக நோக்கங்களுக்காக வெளிநாடு செல்வீர்கள்.  உடல்நலப் பிரச்சினைகள் தீரும். நிதி சிக்கல்கள் குறையும்.
  4. துலாம்: இந்த ராசியின் அதிர்ஷ்ட ஸ்தானத்தில் குருவின் பலம் அதிகரிக்கும். இதனால்  லட்சுமியின் ஆசிகளைப் பெறுவீர்கள். நீங்கள் தொடும் அனைத்தும் தங்கமாக மாறும். திடீர் நிதி ஆதாயம் ஏற்படும்.  செலுத்த வேண்டிய பணம் முழுமையாக வரும். வராக்கடன்கள்  வசூலாகும். பங்குகள் மற்றும் முதலீடுகள் எதிர்பார்த்ததை விட லாபத்தைத் தரும். தொழில்முறை மற்றும் வேலை நோக்கங்களுக்காக வெளிநாடு செல்வீர்கள்.  உங்களுக்கு மூதாதையர் சொத்து கைக்கு கிடைக்கும்.
  5. தனுசு: இந்த ராசிக்கு ஏழாம் இடத்தில் குருவின் பலம் அதிகரிப்பதால், காதல் விவகாரங்களிலும், திருமண முயற்சிகளிலும் எதிர்பாராத வெற்றிகளைப் பெறுவீர்கள். வசதியான குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரைக் காதலித்து திருமணம் செய்து கொள்ள வாய்ப்பு உள்ளது. தொழில்   கூட்டாளிகளுடன் இருந்த பிரச்சனைகள் தீரும். வேலையில் பதவி உயர்வு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்ட லாபம் ஈட்டுவீர்கள். உங்கள் குழந்தைகள் பற்றிய நல்ல செய்திகள் கிடைக்கும்.
  6. கும்பம்: இந்த ராசிக்கு ஐந்தாம் வீட்டில் குரு பலம் வாய்ந்தவராக இருப்பதால், சந்தான யோகத்தில் குழந்தைகள் நல்ல வளர்ச்சி பெற வாய்ப்பு உள்ளது. வேலை மற்றும் பதவி உயர்வில் உங்கள் திறமையை அங்கீகரிக்க வாய்ப்பு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் செயல்பாடுகள் மற்றும் பரிவர்த்தனைகள் பெரிதும் அதிகரிக்கும். மிக முக்கியமானவர்களுடன் நெருங்கிய உறவுகள் உருவாகும். இறை வழிபாடு அதிகரிக்கும். பங்குகள் மற்றும் முதலீடுகள் போன்ற அனைத்து முயற்சிகளும் மிகவும் லாபகரமாக இருக்கும்.

(ஜோதிட நம்பிக்கையின் அடிப்படையில் இக்கட்டுரையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் உள்ளது. இதற்கு அறிவியல் பூர்வ விளக்கம் இல்லை. டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)

Follow Us