AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இன்று கிருத்திகை விரதம்: முருகனின் அருளைப் பெற இந்த 3 விஷயங்களை செய்யுங்க!

Krithigai Viratham: தீபம் ஏற்றுவது நம் உள்ளம் முழுவதும் ஒளி பரவச் செய்வதற்கான அடையாளம். இந்த நாளில் மனதில் நன்மை, சமநிலை, அன்பு, கருணை ஆகியவை வேரூன்றும் வகையில் வாழ்வது நம் வாழ்க்கைக்கு ஒளியாக அமையும் என்பது ஐதீகம். அதனால், தவறாமல் வீடுகளில் இன்று தீபம் ஏற்றவும்.

இன்று கிருத்திகை விரதம்: முருகனின் அருளைப் பெற இந்த 3 விஷயங்களை செய்யுங்க!
முருகன்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 06 Nov 2025 14:41 PM IST

கிருத்திகை நாள் என்பது தமிழ் மக்கள் மற்றும் முருக பக்தர்களின் ஆன்மீக புண்ணிய நாளாகக் கருதப்படுகிறது. ஒவ்வொரு மாதத்திலும், முருகப்பெருமானுக்கு உகந்த நட்சத்திரமாகிய கிருத்திகை நட்சத்திரத்தன்று முருகப்பெருமானை நினைத்து விரதம் மேற்கொள்வதால், முருகனின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்நாளில் அறிவு, ஆன்மிகம், ஒளி மற்றும் அன்பு ஆகியவை முக்கியமாக வலியுறுத்தப்படுகின்றன. ஆண்டுக்கு மூன்று கார்த்திகை தினங்கள் சிறப்பானவை. அவை உத்தராயன துவக்கமான தை மாதம் வரும் தை கிருத்திகை, கார்த்திகை மாதம் வரும் பெரிய கிருத்திகை மற்றும் தட்சிணாயன துவக்கமான ஆடி மாதத்தில் வரும் ஆடிக் கிருத்திகை.

Also Read : வீட்டை உப்பு நீரால் துடைப்பதால் இவ்வளவு நன்மைகளா? வாஸ்து நிபுணர் சொல்வது என்ன?

கந்தனை வளர்க்க சிவபெருமான் கார்த்திகை பெண்களான ஆறு பேரை நியமினார். அவர்கள் குமாரனை பாலூட்டி வளர்த்த காரணத்தால், தான் முருகனுக்கு கார்த்திகேயன் என்ற மற்றொரு பெயர் உள்ளது. கிருத்திகை நட்சத்திரத் தன்று விரதமிருந்து முருகனை வழிபடுவோர் இன்னல்கள் அனைத்தும் நீங்கி வாழ்வில் சகல செல்வங்களும் பெற்று வாழ்வார்கள் என்று சிவபெருமான் ஆசிர்வதித்தார். இன்று கிருத்திகை நாளை சிறப்பாகக் கொண்டாட சில வழிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

விரதம் அவசியம்:

காலை முற்பகலில் எழுந்து நீராடி, வீட்டைச் சுத்தம் செய்து, துலசிமரம், முருகன் சிலை அல்லது வீட்டுப் பூஜை அறை முன் எண்ணெய் தீபம் ஏற்றுங்கள். “ஓம் சரவணபவா”, “சுப்பிரமண்யோஹ நம:” போன்ற மந்திரங்களை 108 முறை ஜபிப்பது மன அமைதியையும், ஆன்மிக சக்தியையும் தரும். இன்று விரதம் இருந்து, எளிய உணவு – பழம், பால், நீர் – போன்றவற்றை எடுத்துக்கொள்வது பரம புண்ணியமானது.

தீபம் ஏற்றுக:

சூரியன் மறையும் நேரத்தில் வீட்டின் வாசல், ஜன்னல்கள், மாடி மற்றும் தோட்டத்தில் எண்ணெய் தீபங்கள் ஏற்றுவது வழக்கம். ஒவ்வொரு தீபமும் நமது வாழ்க்கையில் உள்ள இருளை (அறிவின்மை, துயரம்) நீக்கி, ஒளியையும் ஞானத்தையும் வரவேற்கிறது. திருவண்ணாமலை தீபம் இந்நாளின் பிரதானம்; சாத்தியமானால் அதனை ஆன்லைனில் காணலாம் அல்லது “அருணாசல சிவசிவா” என மனதார ஜபிக்கலாம்.

Also Read : கடவுளுக்கு முடி காணிக்கை செலுத்துவதன் பின்னணி என்ன தெரியுமா? இந்து புராணம் சொல்வது என்ன?

கார்த்திகை தீபம் என்பது சிவனின் திருவொளி என்றும், முருகனின் ஞான தீபம் என்றும் சொல்லப்படுகிறது. தீபம் ஏற்றுவது நம் உள்ளம் முழுவதும் ஒளி பரவச் செய்வதற்கான அடையாளம். இந்த நாளில் மனதில் நன்மை, சமநிலை, அன்பு, கருணை ஆகியவை வேரூன்றும் வகையில் வாழ்வது நம் வாழ்க்கைக்கு ஒளியாக அமையும்.

ஏழைகளுக்கு தானம் வழங்கலாம்:

முருகனுக்கு பிடித்த சக்கரை பொங்கல், பழங்கள், வேப்பிலை-பனைஒட்டு தீபம் ஆகியவற்றை நைவேத்யமாக சமர்ப்பிக்கலாம். கந்த சஷ்டி கவசம், திருப்புகழ் பாடல்கள் போன்றவற்றை பாடுவது பக்தி உணர்வை அதிகரிக்கிறது. அந்த நாளில் ஏழைகளுக்கு தானம், உணவு வழங்குவது மிகுந்த புண்ணியமானதாகக் கூறப்படுகிறது.

Follow Us