AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அட, இதையெல்லாம் கூட சாப்பிடலாமா? நம்ம ஊர் மழைக்கால கீரை…….

Monsoon Greens: இந்தியாவில் பருவமழைக்காலத்தில் காடுகள், நீர்நிலைகள் மற்றும் கிராமப்புற நிலப்பரப்புகளில் பூச்சிக்கொல்லிகள் இன்றி இயற்கையாக விளையும் காட்டுக்கீரைகள், உடலுக்குத் தேவையான இரும்புச்சத்து, கால்சியம், வைட்டமின்கள் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தியை வழங்கும் அரிய ஊட்டச்சத்துப் பெட்டகமாகத் திகழ்கின்றன. இயற்கை வளங்களையும் தலைமுறை தலைமுறையாகப் பின்பற்றப்பட்டு வரும் அறுவடை சார்ந்த பாரம்பரிய அறிவையும் பாதுகாக்க வேண்டியது அவசியமாகிறது.

அட, இதையெல்லாம் கூட சாப்பிடலாமா? நம்ம ஊர் மழைக்கால கீரை…….
காட்டுக்கீரைகள்Image Source: pinrest
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 05 Aug 2026 06:00 AM IST

இந்தியாவில் பருவமழை பொழியத் தொடங்கியவுடன், நாட்டின் பல்வேறு பகுதிகளில் விற்கப்படும் மற்றும் உணவில் சேர்த்துக்கொள்ளப்படும் காட்டுக்கீரைகள் இயற்கையின் கொடையாகும். நவீன சந்தைகளில் கிடைக்கப்பெறும் கீரை வகைகளை விட, எந்தவொரு பூச்சிக்கொல்லியும் செயற்கை உரங்களும் இன்றி இயல்பாக வளரும் இக்கீரைகள், மழைக்காலத்தின் சில வாரங்கள் மட்டுமே கிடைக்கக்கூடியவை. கோடைகாலத்தில் மண்ணுக்குள் உறங்கிக்கொண்டிருக்கும் இவற்றின் விதைகள், முதல் மழையின் ஈரப்பதத்தைப் பெற்று மிக விரைவாக முளைத்து வளர்கின்றன. விவசாயிகள் மற்றும் கிராமப்புற மக்கள் இவற்றைச் சேகரித்துத் தங்கள் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்கின்றனர்.

மாநிலங்கள் தோறும் பரவியுள்ள பாரம்பரிய சமையல் முறை

இந்தியாவின் வெவ்வேறு மாநிலங்களில் இக்கீரைகள் வெவ்வேறு பெயர்களுடனும் தனித்துவமான முறைகளிலும் சமைக்கப்படுகின்றன. ஒடிசாவில் ‘சாகா’ என்று அழைக்கப்படும் கோசலா சாகா, சுன்சுனியா போன்றவை பூண்டு மற்றும் கடுகு தாளித்துச் சமைக்கப்படுகின்றன. மேற்கு வங்கத்தில் நீர்நிலைகளின் அருகில் விளையும் ‘கொல்மி’, ‘தங்குனி’ போன்ற கீரைகள் மதிய உணவில் முதன்மை பெறுகின்றன. மகாராஷ்டிராவின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கிடைக்கும் ‘டக்ளா பாஜி’ கடலை மாவு மற்றும் வேர்க்கடலையுடன் சேர்த்துச் சமைக்கப்படுகிறது. அதேபோல், கர்நாடகாவில் ‘சொப்பு’ வகைகளும், கேரளாவில் ஆயுர்வேத முக்கியத்துவம் வாய்ந்த ‘முதில்’, ‘தொழுதாமை’ போன்ற கீரைகளும், வடகிழக்கு மாநிலங்களில் ‘தேகியா’ என்ற சுருள் பேரணி தாவரமும் உணவாகப் பயன்படுத்தப்படுகின்றன.

செறிவான ஊட்டச்சத்துக்களும் இயற்கை மருத்துவ நன்மைகளும்

ஆராய்ச்சி முடிவுகளின்படி, இயற்கையாக விளையும் இத்தகைய காட்டுக்கீரைகளில் இரும்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம், ஃபோலேட் மற்றும் வைட்டமின் ஏ, சி ஆகிய அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மிக அதிகளவில் நிறைந்துள்ளன. மேலும், இவற்றில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து, செரிமான மண்டலத்தைச் சீராக வைத்திருக்க உதவுகின்றன. வணிக ரீதியாகப் பயிரிடப்படும் காய்கறிகளுடன் ஒப்பிடுகையில், இவற்றால் சுற்றுச்சூழல் பாதிப்போ அல்லது நீர் விரையமோ ஏற்படுவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Also Read: தினமும் சாதம் சாப்பிட்டும் உடல் எடையைக் குறைக்க முடியுமா?

அழிந்துவரும் பாரம்பரிய அறிவும் பாதுகாப்பின் அவசியமும்

இன்றைய காலகட்டத்தில் நகர்ப்புறமயமாக்கல், நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு மற்றும் காடுகள் அழிப்பு காரணமாக இதுபோன்ற அரிய தாவரங்களின் வளர்ச்சிப் பகுதிகள் சுருங்கி வருகின்றன. மேலும், இளம் தலைமுறையினரிடையே இத்தாவரங்களை அடையாளம் காணும் பாரம்பரிய அறிவு குறைந்து வருகிறது. எந்தக் கீரையை எவ்வாறு பறிக்க வேண்டும், வேர்களைப் பாதிக்காமல் அடுத்த ஆண்டு மீண்டும் வளரக்கூடிய வகையில் எவ்வாறு அறுவடை செய்ய வேண்டும் என்ற நுட்பமான பாரம்பரிய அறிவைப் பாதுகாப்பது, நமது உணவுப் பாதுகாப்பிற்கும் பல்லுயிர்ப் பெருக்கத்திற்கும் மிகவும் அவசியமான ஒன்றாகும்.

Follow Us