AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Skin Care: பராமரிப்பிற்கு பிறகும் சருமம் பொலிவை இழக்கிறதா? மிகப்பெரிய காரணம் இதுதான்!

Skincare Tips: அழுக்கு தலையணை உறையில் தூங்குவது சருமத்திற்கும் ஆடைகளுக்கும் இடையில் உராய்வை ஏற்படுத்துகிறது. இந்த உராய்வு கண்கள் மற்றும் கன்னங்களைச் சுற்றி மெல்லிய கோடுகள் மற்றும் சுருக்கங்கள் தோன்றுவதை துரிதப்படுத்துகிறது. அழுக்கு தலையணை உறை இரவில் உங்கள் முகத்தில் கிரீம்கள் மற்றும் சீரம்கள் ஒட்டிக்கொள்ள வழிவகுக்கும்.

Skin Care: பராமரிப்பிற்கு பிறகும் சருமம் பொலிவை இழக்கிறதா? மிகப்பெரிய காரணம் இதுதான்!
சரும பராமரிப்புImage Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 28 Jan 2026 19:41 PM IST

நம் சருமம் (Skin Care) எப்போதும் ஆரோக்கியமாகவும், தெளிவாகவும், பளபளப்பாகவும் இருக்க வேண்டும் என்று நாம் அனைவரும் விரும்புகிறோம். இதை பெற கடைகள் மற்றும் ஆன்லைன்களில் அதிக தொகையை செலவழித்து அழகு சாதன பொருட்களை வாங்கி குவிக்கிறோம். இருப்பினும், நாம் பெரும்பாலும் நம் சருமத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு சிறிய விஷயத்தை கவனிக்காமல் விட்டு விடுகிறோம். அதுதான் தலையணை உறை. நாம் ஒரு நாளைக்கு 6 முதல் 8 மணி நேரம் தலையணையில் (Sleeping) தூங்குகிறோம். தலையணை உறை அழுக்காகவும், தொடர்ந்து சுத்தம் செய்யப்படாமலும் இருந்தால், அது பல்வேறு சரும பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே அழுக்கு தலையணை உறையின் தீமைகள் என்ன என்பதையும், அதைத் தவிர்ப்பதற்கான எளிய வழிகளை பற்றி தெரிந்து கொள்வோம்.

ALSO READ: சருமத்தில் வயதான தோற்றத்தால் அவதியா? இந்த 4 பானங்கள் தீர்வை தரும்!

அழுக்கு தலையணை உறைகளின் தீமைகள்:

தலையணை உறைகளில் வியர்வை, எண்ணெய், தூசி மற்றும் பாக்டீரியாக்கள் நாம் பயன்படுத்த பயன்படுத்த சேர தொடங்கும். அதாவது, இரவில் நாம் தலையணை உறைகளைப் பயன்படுத்தும்போது, ​​இந்த பாக்டீரியாக்கள் மற்றும் எண்ணெய்கள் நமது சருமத் துளைகளில் படிந்துவிடும். அவை சருமத் துளைகளை அடைத்து, முகப்பரு, கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளைப் புள்ளிகள் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். ஒருவருக்கு எண்ணெய் பசை சருமம் இருந்தால் இந்த பிரச்சனை விரைவாக நிகழலாம்.

ஒருவர் எவ்வளவு தூங்கினாலும் சருமம் சோர்வாகவும் உயிரற்றதாகவும் இருந்தால், அதற்கு அழுக்கு தலையணை உறைகள் காரணமாக இருக்கலாம். அழுக்கு தலையணை உறைகள் சருமத்தின் இயற்கையான பளபளப்பை படிப்படியாக அழித்துவிடும். எனவே, தோல் பராமரிப்புப் பொருட்களைப் பயன்படுத்திய பிறகும், பலரின் சருமம் பளபளப்பாகத் தெரிவதில்லை. மேலும், அழுக்கு தலையணை உறைகள் தூசி மற்றும் அழுக்குகளைப் பிடித்து வைக்கும். இது அலற்ஜி, அரிப்பு, சிவத்தல் மற்றும் தோலில் தடிப்புகள் ஏற்பட வழிவகுக்கும். ஒருவருக்கு சென்சிடிவ் வாய்ந்த சருமம் இருந்தால், பருக்கள் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படும்.

அழுக்கு தலையணை உறையில் தூங்குவது சருமத்திற்கும் ஆடைகளுக்கும் இடையில் உராய்வை ஏற்படுத்துகிறது. இந்த உராய்வு கண்கள் மற்றும் கன்னங்களைச் சுற்றி மெல்லிய கோடுகள் மற்றும் சுருக்கங்கள் தோன்றுவதை துரிதப்படுத்துகிறது. எனவே, தலையணை உறை அழுக்காக இருந்தால், தோல் முன்கூட்டியே வயதான தோற்றத்தை கொடுக்க தொடங்கும். அழுக்கு தலையணை உறை இரவில் உங்கள் முகத்தில் கிரீம்கள் மற்றும் சீரம்கள் ஒட்டிக்கொள்ள வழிவகுக்கும். இது தோல் பராமரிப்பு பொருட்களின் செயல்திறனைக் குறைத்து, சருமம் சரியாக ஈரப்பதமாக்குவதையும் தன்னைத்தானே சரிசெய்வதையும் தடுக்கலாம்.

ALSO READ: சருமத்தில் பிரச்சனைகளா..? இந்த உணவுமுறையும் காரணமாக இருக்கலாம்!

இதை எப்படி சரிசெய்வது..?

  • உங்கள் தலையணை உறையை வாரத்திற்கு 2 முறையாவது மாற்றவும்.
  • எப்போதும் பருத்தி அல்லது பட்டு உறைகளைப் பயன்படுத்துவது சரும ஆரோக்கியத்தை பராமரிக்கும்.
  • தூங்க செல்வதற்கு முன் உங்கள் முகத்தை நன்கு கழுவி, உங்கள் சருமத்தை சுத்தமாக வைத்திருங்கள்.
  • உங்கள் தலைமுடியை சுத்தமாகவும், பின்புறமாகவும் கட்டி வைக்கவும், இதனால் எண்ணெய் மற்றும் தூசி உங்கள் முகத்தில் நேரடியாக விழாது.
  • ஒருவருக்கு எண்ணெய் பசை அல்லது உணர்திறன் வாய்ந்த சருமம் இருந்தால், அதிக கவனம் செலுத்துவது முக்கியம்.
  • பாக்டீரியா மற்றும் தூசி படிவதைத் தடுக்க தலையணை உறைகள் மற்றும் படுக்கை விரிப்புகளை தவறாமல் குறைந்தது வாரத்திற்கு ஒரு முறையாவது மாற்றவும்.

Follow Us