கர்நாடகாவை புரட்டி எடுத்த கனமழை.. 2 மாதங்களில் 71 பேர் உயிரிழப்பு.. வீடுகளை இழந்து நிற்கும் மக்கள்!

Karnataka Heavy Rains : கர்நாகாவில் பெய்த கனமழையால் இரண்டு மாதங்களில் 71 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. கர்நாடகாவில் 125 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2025 மே மாதத்தில் மழை பெய்துள்ளது. 2025ஆம் ஆண்டு மே மாதத்தில் 219 மீ.மீ அளவுக்கு மழை பொழிந்துள்ளது. இது வழக்கத்தை விட 197 சதவீதம் அதிமான மழை பொழிவு இருந்துள்ளது.

கர்நாடகாவை புரட்டி எடுத்த கனமழை.. 2 மாதங்களில் 71 பேர் உயிரிழப்பு.. வீடுகளை இழந்து நிற்கும் மக்கள்!

கர்நாடகாவில் மழை

Updated On: 

01 Jun 2025 08:26 AM

கர்நாடக, ஜூன் 01 : கர்நாடகாவில் 2025 ஏப்ரல் மாதம் முதல் பெய்த கனமழையால் 71 பேர் உயிரிழந்துள்ளதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. கர்நாடகாவில் 125 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2025 மே மாதத்தில் மழை பெய்துள்ளது. மழை தொடர்பான பல்வேறு விபத்துகளில் 71 பேர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. தென்மேற்கு பருவமழை கேளராவில் 2025 மே 24ஆம் தேதி தொடங்கியது. பருவமழை தொடங்கியதை அடுத்து, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிராவில் பலத்த மழை பெய்தது. குறிப்பாக, கர்நாடகாவில் வரலாறு காணாத அளவுக்கு பலத்த மழை பெய்தது. 125 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அங்கு மழை பெய்தது. இதனால், பொதுமக்களில் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.

கர்நாடகாவை புரட்டி எடுத்த கனமழை

ஆங்காங்கே சாலைகளில் நீர் தேங்கி இருந்தது. வழக்கமா கர்நாடகாவில் மே மாதத்ல் 74 மீ.மீ மழை பொழிவு இருக்கும. அனால், 2025ஆம் ஆண்டு மே மாதத்தில் 219 மீ.மீ அளவுக்கு மழை பொழிந்துள்ளது. இது வழக்கத்தை விட 197 சதவீதம் அதிமாக மழை பொழிவு இருந்துள்ளது.

அதே போல, மார்ச் 1 முதல் 31ஆம் தேதி வரை மழையின் பொழிவு 115 மீ.மீ இருக்கும். ஆனால், இந்தாண்டு 286 மீ.மீ இருந்தது. இது சராசரியை விட 149 சதவீதம் கர்நாடகாவில் மழை பொழிவு இருந்துள்ளது.

கடந்த 125 ஆண்டுகளில் முதல் முறையாக மே மாதத்தில் கர்நாடகாவில் அதிக மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாகவும், 28 மாவட்டங்கள் இயல்பை விட அதிகமாக மழை பெய்துள்ளதாகவும் முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

71 பேர் உயிரிழப்பு


அனைத்து மாவட்ட துணை ஆணையர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில், முதல்வர் சித்தராமையா ழையால் சேதமடைந்த பகுதிகளை உடனடியாகப் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான இழப்பீடு வழங்குமாறு உத்தரவிட்டார்.

கனமழை, வெள்ளத்தால் மொத்தம் 2,252 கிராமங்களும், 1,702 வீடுகளும் சேதம் அடைந்துள்ளதாக அவர் கூறினார்.  டிவி 9 தகவலின்படி, மேலும், மழை தொடர்பான விபத்துகளில் 71 பேர் உயிரிழந்தனர். இறந்தவர்களின் குடும்பங்ளுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

மொத்தம் 15,378.32 ஹெக்டேர் பயிர்கள் சேதமடைந்துள்ளன. இதற்கான இழப்பீட்டு தொகையும் வழங்கப்படும் என்றும் கூறினார். வீடுகளை இழந்தவர்களுக்கு புதிய வீடுகள் கட்டித்தரப்படும் என்றும் உறுதியளித்தார். மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டு நிவாரணப் பணிகளைக் கண்காணிக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டார்.