போர் பதட்டம்.. கச்சா எண்ணெய் கையிருப்பு.. மாநிலங்களவையில் விளக்கம் அளித்த வெளியுறவு அமைச்சர்
மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் குறித்து மக்களவையில் விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கோரிக்கை விடுத்தார். அங்கு வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பு குறித்தும் அவர் கவலை தெரிவித்தார். இந்நிலையில் இது குறிடதது வெளியுறவுத்துறை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்
மேற்கு ஆசியாவில் நிலவும் அமைதியின்மை மற்றும் ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்கள் குறித்து, வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் திங்களன்று மாநிலங்களவையில் விளக்கம் அளித்தார். அதில், மத்திய கிழக்கில் நடந்து வரும் போரில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து வருத்தமடைந்தேன். வளைகுடா நெருக்கடி குறித்து, பிரதமர் நரேந்திர மோடி நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறார். பிரதமர் மோடி வளைகுடா நாடுகளுடன் தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அவர் ஈரானிய வெளியுறவு அமைச்சருடன் பேசியுள்ளார் என்றார். மேலும், கச்சா எண்ணெய் இருப்பு தொடர்பாக மத்திய அரசு எச்சரிக்கையுடன் இருப்பதாகவும் தெரிவித்தார்
முன்னதாக, அவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் முழக்கங்களுக்கு மத்தியில், வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “அங்கு நடந்து வரும் மோதல்கள் இந்தியாவிற்கு மிகுந்த கவலை அளிக்கும் விஷயமாகும். நாங்கள் ஒரு அண்டை பகுதி, மேற்கு ஆசியாவில் ஸ்திரத்தன்மையைப் பேணுவது எங்கள் தெளிவான பொறுப்பு. கிட்டத்தட்ட 10 மில்லியன் இந்தியர்கள் வளைகுடா நாடுகளில் வசித்து வேலை செய்கிறார்கள். சில ஆயிரம் இந்தியர்கள் படிப்பு அல்லது வேலைவாய்ப்புக்காக ஈரானிலும் உள்ளனர்” என்று கூறினார். “இந்தப் பகுதி நமது எரிசக்தி பாதுகாப்பிற்கு மிகவும் முக்கியமானது மற்றும் எண்ணெய் மற்றும் எரிவாயுவின் பல முக்கிய சப்ளையர்களை உள்ளடக்கியது. விநியோகச் சங்கிலியில் கடுமையான இடையூறுகள் மற்றும் அதன் விளைவாக ஏற்படும் உறுதியற்ற தன்மை எங்களுக்கு கடுமையான பிரச்சினைகள்” என்று அவர் மேலும் கூறினார்.
வீடியோ
VIDEO | Delhi: EAM S. Jaishankar briefs the Rajya Sabha on the West Asia crisis.
He says, “Every effort is being made to bring back Indians stuck in West Asia. Throughout this period, the government maintained close contact with relevant countries. I have similarly been in close… pic.twitter.com/uLlXyKdrse
— Press Trust of India (@PTI_News) March 9, 2026
எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்
இதற்கிடையில், வளைகுடா நெருக்கடி மற்றும் அதன் தாக்கம் குறித்து காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சி மற்றும் சில எதிர்க்கட்சித் தலைவர்கள் திங்களன்று நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிரதமர் நரேந்திர மோடி தேசிய நலன்களை சமரசம் செய்து கொண்டதாக குற்றம் சாட்டினர். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் மற்றும் வேறு சில கட்சிகளின் தலைவர்களும் நாடாளுமன்றக் கட்டிடத்திற்கு அருகே நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
Also Read: போரின் தாக்கம் – எரிபொருள் மட்டுமல்ல… இண்டெர்நெட் சேவையும் பாதிக்கும் அபாயம் – என்ன காரணம்?
மாநிலங்களவையில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை முன்வைத்த பிறகு, மக்களவையில் ஈரான் மோதல் குறித்தும் வெளியுறவு அமைச்சர் உரையாற்றினார். பாதிக்கப்பட்ட நாடுகளுடன் இந்திய அரசு தொடர்பில் இருப்பதாகவும், எரிசக்தி தேவைகள் குறித்து விழிப்புடன் இருப்பதாகவும் அவர் கூறினார். அங்கு சிக்கித் தவிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பு அரசாங்கத்திற்கு முன்னுரிமை. ஆலோசனைகள் மற்றும் உதவி எண்கள் வழங்கப்பட்டுள்ளன. மாநிலங்களவையில் இருந்ததைப் போலவே, மத்திய கிழக்கு நெருக்கடி குறித்து விவாதிக்கக் கோரி, மக்களவையில் வெளியுறவு அமைச்சரின் உரையின் போது எதிர்க்கட்சி தொடர்ந்து கூச்சலில் ஈடுபட்டனர்