AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

நேபாளத்தை புரட்டிப்போட்ட வெள்ளப்பெருக்கு.. 133 இந்தியர்களின் நிலை என்ன?

Nepal Flash Flood: நேபாளத்தின் ராசுவா மற்றும் தாதிங் மாவட்டங்களில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு, திபெத் பகுதியில் ஏற்பட்ட பேரிடரைத் தொடர்ந்து உருவானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் போடே கோஷி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பாலங்கள், கட்டிடங்கள் மற்றும் பல்வேறு உள்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன.

நேபாளத்தை புரட்டிப்போட்ட வெள்ளப்பெருக்கு.. 133 இந்தியர்களின் நிலை என்ன?
நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 27 Aug 2026 09:35 AM IST

ஆகஸ்ட் 27, 2026: நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, அந்நாட்டின் எல்லையோரம் உள்ள இந்திய மாநிலங்கள் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த வெள்ளத்தில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 750-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதில் 133 இந்தியர்களும் அடங்குவர். குறிப்பாக கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 36 பேரின் நிலை குறித்து கவலை எழுந்துள்ளது.

நேபாளத்தின் ராசுவா மற்றும் தாதிங் மாவட்டங்களில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு, திபெத் பகுதியில் ஏற்பட்ட பேரிடரைத் தொடர்ந்து உருவானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் போடே கோஷி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பாலங்கள் மற்றும் பல்வேறு உள்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன.

மேலும் படிக்க: திடீர் வெள்ளம்.. நேபாள பிரதமரிடம் நிலைமையை விசாரித்த பிரதமர் மோடி

நேபாள வெள்ளப்பெருக்கில் சிக்கியுள்ள தமிழக யாத்திரிகர்கள்:

தமிழகத்தைச் சேர்ந்த 57 பேர் கைலாஷ் யாத்திரைக்காக மூன்று பேருந்துகளில் பயணம் செய்துள்ளனர். புதன்கிழமை காலை சுமார் 9 மணியளவில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது, ஒரு பேருந்து மட்டும் தப்பியதாகவும், பின்னால் வந்த மற்றொரு பேருந்து பள்ளத்துக்குள் உருண்டு சென்றதைப் பார்த்ததாகவும் சுற்றுலா நிறுவன உரிமையாளர் சையத் உமர் பாரூக் தெரிவித்துள்ளார்.

பேருந்தில் இருந்தவர்களில் 21 பேர் திமுரே பகுதியில் உள்ள ஆயுதக் காவல் படை முகாமில் பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மற்ற இரண்டு பேருந்துகளில் பயணித்தவர்களின் நிலை குறித்து இதுவரை உறுதியான தகவல் கிடைக்கவில்லை. அவர்களில் நிறுவன உரிமையாளரின் மகனும் இருப்பதாகக் கூறப்படுகிறது. ராணுவ உதவியுடன் காணாமல் போன பேருந்தைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.

மேலும் படிக்க: வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு அதிரடி நடவடிக்கை! கிலோ ரூ.35க்கு விற்பனை செய்ய திட்டம்..

இதனிடையே, தமிழகத்தைச் சேர்ந்த யாத்திரிகர்களின் குடும்பத்தினருக்கு உதவுவதற்காக தமிழக அரசு 24 மணி நேர உதவி மையத்தைத் தொடங்கியுள்ளது. டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லம் மூலமாகவும் தேவையான உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேபாளத்தில் சிக்கியுள்ள யாத்திரிகர்களை விரைந்து மீட்கவும், காணாமல் போனவர்களின் குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை வழங்கவும் டெல்லியில் உள்ள தமிழக அரசின் மூத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

திபெத் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம்:

நேபாளத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு முன்பு திபெத் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து பனிப்பாறை ஏரி உடைப்பு காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கலாம் எனவும் நேபாள வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழக யாத்திரிகர்களின் நிலை குறித்து தகவல் கிடைக்காததால், அவர்களின் குடும்பத்தினர் கவலையில் உள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Follow Us