குலைநடுங்க வைத்த சம்பவம்.. மனைவியை 17 துண்டுகளாக வெட்டிக் கொன்ற கணவர்.. பகீர் பின்னணி!
Maharashtra Murder : மகாராஷ்டிரா மாநிலத்தில் மனைவியை கணவர் 17 துண்டுகளாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மனைவியின் தலையை துண்டித்து, உடலை 17 துண்டுகளாக வெட்டி, ஆங்காங்கே வீசியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து, அந்த நபரை கைது செய்தனர்.

கைதான நபர்
மகாராஷ்டிரா, செப்டம்பர் 06 : மகாராஷ்டிரா மாநிலத்தில் மனைவியின் உடலை 17 துண்டுகளாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மனைவியின் தலை துண்டித்த கணவர், உடலை 17 துண்டுகளாக வெட்டி பல்வேறு இடங்களில் வீசியுள்ளது தெரியவந்துள்ளது. நாட்டில் கொலை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. குறிப்பாக, வட மாநிலங்களில் நடக்கும் கொலை சம்பவங்கள் ஒட்டுமொத்த நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாகி வருகிறது. பெண்களுக்கு தெரிந்தே நபர்களே இந்த கொலையை செய்து வருகின்றனர். குடும்ப தகராறால் நடக்கும் கொலை சம்பவங்கள் ஏராளம். இதனை தடுக்க அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் கொலை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. அப்படியொரு சம்பவம் தான் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் மனைவியை 17 துண்டுகளாக கணவர் வெட்டிக் கொலை செய்துள்ளார்.
மகாராஷ்டிராவின் பிவானி நகரைச் சேர்ந்தவர் முஸ்கன் முகமது தாஹா. இவரது மனைவி பிரவீன். இவர்கள் இரண்டு வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். தம்பதிக்கு இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், இட்கா சாலை குடிசை மற்றும் இறைச்சி கூடம் பகுதிக்கு அருகில் துண்டிக்கப்பட்ட தலையை போலீசார் கண்டெடுத்தனர். இதனை அடுத்து, சந்தேகத்தின் பேரில் முஸ்கன் முகமது தாஹாவை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் அவர் முரண்பாடான வாக்குமூலங்களை அளித்திருக்கிறார். இதனால், போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
Also Read : 3 குழந்தைகளை கொன்ற தந்தை.. பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூரம்.. ஆந்திராவில் ஷாக்
17 துண்டுகளாக பெண் வெட்டிக் கொலை
இதனை அடுத்து, போலீசார் அவரிடம் விசாரணை தீவிரப்படுத்தினர். அப்போது, அவர் தனது மனைவி பர்வீனைக் கொலை செய்து, அவரது உடல் பாகங்களை 17 துண்டுகளாக வெட்டியதாக அவர் ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது. அவரது உடலை 17 துண்டுகளாக அப்புறப்படுத்தி வீசயதாக கூறினார். இதனை அடுத்து, தாஹவை போலீசார் அழைத்து சென்று சில உடல் பாகங்களை கண்டெடுத்தனர்.
மீதமுள்ள உடல் பாகங்களைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. இதற்காக ட்ரோன்கள் மற்றும் தீயணைப்புப் படைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினார். முஸ்கனின் தாயார் ஹனிபா கான், தனது மகனைக் காணவில்லை என்று போலீசில் புகார் அளித்தபோது இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.
போய்வாடா காவல் நிலைய மூத்த ஆய்வாளர் அசோக் ரத்தன்பர்கியின் கூற்றுப்படி, ஹனிஃபா தனது மகளின் தொலைபேசி இரண்டு நாட்களாக ஆஃப் செய்யப்பட்டு இருப்பதாகவும், மருமகனுக்கு அழைப்புகள் செல்லவில்லை என்றும் கூறினார். முஸ்கனின் துண்டிக்கப்பட்ட தலையின் புகைப்படம் ஹனிஃபாவிடம் காட்டப்பட்டது. பின்னர், அவரது தனது மகள் என அடையாளம் காட்டினார்.
Also Read : மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து பெண் பலி.. பிரேத பரிசோதனையில் பகீர்.. சென்னையில் சோகம்!
துண்டிக்கப்பட்ட தலை இந்திரா காந்தி துணை மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது” எனக் கூறினார். கொலைக்கான நோக்கம் மற்றும் கொலை நடந்த இடம் போன்ற விவரங்களைக் கண்டறிய முயற்சிகள் நடந்து வருவதாக போலீசார் கூறியுள்ளனர். கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தையும் போலீசார் தேடி வருகின்றனர். இந்த வழக்கை விசாரிக்க துணை காவல் ஆணையர் மற்றும் உதவி காவல் ஆணையர் தலைமையில் இரண்டு சிறப்பு புலனாய்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.