இந்தியாவின் முதல் வறுமை இல்லாத மாநிலமான கேரளா.. பிணறாயி விஜயன் அறிவிப்பு!

Kerala Become Poverty Free State in India | கடவுளின் தேசம், கல்வியின் சிறந்த மாநிலம் என்ற பெருமைகளை கொண்டுள்ள கேராளா தற்போது புதிய பெருமைமை அடைந்துள்ளது. அதாவது, இந்தியாவின் முதல் வறுமை இல்லாத மாநிலம் என்ற இலக்கை அடைந்துள்ளது.

இந்தியாவின் முதல் வறுமை இல்லாத மாநிலமான கேரளா.. பிணறாயி விஜயன் அறிவிப்பு!

மாதிரி புகைப்படம்

Published: 

01 Nov 2025 15:31 PM

 IST

திருவனந்தபுரம், நவம்பர் 01 : இந்தியாவில் (India) வறுமையில் இருந்து விடுபட்ட முதல் மாநிலம் (Poverty Free State) என்ற பெருமையை கேரள (Kerala) மாநிலம் பெற்றுள்ளது. கேரளாவின் நிறுவன தினம் இன்று (நவம்பர் 01, 2025) கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அந்த மாநில முதலமைச்சர் பிணறாயி விஜயன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த நிலையில், தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளா இந்தியாவின் முதல் வறுமை இல்லாத மாநிலமாக அறிவிக்கப்பட்டது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இந்தியாவின் முதல் வறுமை இல்லாத மாநிலமான கேரளா

கேராளாவின் நிறுவன தினம் இன்று (நவம்பர் 01, 2025) கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், கேரள சட்டமன்ற விதி 300-ன் கீழ் அந்த மாநில முதலமைச்சர் பிணறாயி விஜயன் ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இது குறித்து சட்டமன்றத்தில் பேசிய அவர், இந்தியாவில் வறுமையில் இருந்து விடுபட்ட முதல் மாநிலம் என்ற குறிப்பிடத்தக்க இலக்கை கேரளா அடைந்து புதிய சாதனை படைத்துள்ளதாக கூறியுள்ளார்.

இதையும் படிங்க : National Unity Day : தேசிய ஒற்றுமை தினம் ஏன் கொண்டாடப்படுகிறது தெரியுமா? வரலாறு இதுதான்!

வரலாற்று சாதனை – பிணறாயி விஜயன் வாழ்த்து

நூற்றாண்டு முன்பு மொழிவாரி மாநிலங்களை உருவாக்குவது பற்றிய யோசனை முன்வைக்கப்பட்டது. எனினும், இந்திய நாட்டின் சுதந்திரத்திற்கு பின்பு தொடக்க ஆண்டுகளில் நீண்ட, நெடிய போராட்டங்கள் மேற்கொண்டு இதனை அடைந்திருக்கிறோம். அந்த போராட்டங்களின் விளைவாக, ஒருங்கிணைந்த கேரளா உருவானது. அதுவே மலையாளிகளின் கனவாகவும் இருந்தது. இன்று ஒருங்கிணைந்த கேரளா உருவாகி 69 ஆண்டுகள் ஆகின்றன. வறுமை விகிதம் அதிகரித்திருந்த 1961-62 காலக்கட்டத்தில் இருந்து மாநிலம் வளர்ச்சியடைந்து வந்துள்ளது.

இதையும் படிங்க : இந்தியாவின் அடுத்த தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் நியமனம் – யார் இவர்?

அப்போது கிராமப்புறத்தில் 90.7 சதவீதம் என்ற அளவிலும், நகர பகுதிகளில் 88.89 சதவீதம் என்ற அளவிலும் மக்கள் வறுமையில் இருந்தனர். இந்த நிலையில், வறுமையை ஒழித்த முதல் மாநிலம் என்ற பெருமையை கேரளா பெற்றுள்ளதாக பிணறாயி விஜயன் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us
Related Stories
ஈரான் – அமெரிக்க போர் பதற்றம் – 3 வாரங்களில் மாறிய இந்தியர்களின் மனநிலை – ஆச்சரியமளிக்கும் கருத்து கணிப்பு முடிவுகள்
நிர்வாகத் தோல்விகளை மறைப்பதற்காக இந்தித் திணிப்பு வாதம்? முதல்வருக்கு மத்திய அமைச்சர் கேள்வி
மூன்றாவது குழந்தையை கருக்கலைப்பு செய்யாததால் ஆத்திரம்.. மனைவி மற்றும் மகள்களை நீச்சல் குளத்தில் மூழ்கடித்து கொலை செய்த நபர்!
6ம் வகுப்பு முதல் மும்மொழிக் கொள்கை.. 2026 முதல் அமல்.. சிபிஎஸ்இ அதிரடி அறிவிப்பு!!
வடமேற்கு இந்தியாவில் வானிலை மாற்றம்.. மேற்கு காற்றழுத்த அலை தாக்கத்தால் கனமழை எச்சரிக்கை
குடும்ப தகராறு.. உபியில் மனைவியின் மூக்கை கடித்து துப்பிய கணவன்!
மறைந்த பாடகர் எஸ்பிபிக்கு கேரளாவில் பிரம்மாண்ட சிலை - ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பங்கேற்பு
உணவளித்தவரின் மரணத்துக்கு வந்து இரங்கல் தெரிவித்த குரங்கு - வைரல் வீடியோ
விண்ணில் ஏவப்பட்ட நாசாவின் ஆர்டெமிஸ் 2 விண்கலத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் - பரபரப்பு தகவல்
ரூ.50,000க்காக ஏற்பட்ட தகராறு... வெளிச்சத்துக்கு வந்த மிகப்பெரிய கிட்னி கடத்தல் கும்பல் நெட்வொர்க்