AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

உயர் பறிக்கும் நஞ்சா மாம்பழம்? 5 வயது சிறுவன் பலி, இருவர் மருத்துவமனையில் அனுமதி!

Asifabad Mango Tragedy: தெலங்கானா மாநிலம் ஆசிஃபாபாத்தில் ரசாயனம் மூலம் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களைச் சாப்பிட்ட ஐந்து வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்ததோடு, அவனது உடன்பிறந்த இருவர் கடுமையான நச்சு பாதிப்புடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சந்தேகத்திற்குரிய கடைகள் பற்றி புகார் அளிக்குமாறும் சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.

உயர் பறிக்கும் நஞ்சா மாம்பழம்? 5 வயது சிறுவன் பலி, இருவர் மருத்துவமனையில் அனுமதி!
Image Source: social media
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 18 May 2026 14:00 PM IST

தெலங்கானா மாநிலம் கொமரம் பீம் ஆசிஃபாபாத் மாவட்டத்தில், ரசாயனங்கள் மூலம் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை சாப்பிட்ட ஐந்து வயது சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கோடைக்காலத்தில் சந்தைக்கு வரும் மாம்பழங்களின் வரத்தை சாதகமாக்கிக் கொண்டு, அதிக லாபம் சம்பாதிக்கும் நோக்கில் சில வியாபாரிகள் கால்சியம் கார்பைடு போன்ற ஆபத்தான ரசாயனங்களைப் பயன்படுத்தி பழங்களை பழுக்க வைக்கின்றனர். இத்தகைய நச்சுத்தன்மை வாய்ந்த பழங்களை அறியாமல் வாங்கி உட்கொண்டதால், ஒரு அப்பாவி குழந்தையின் உயிர் பறிபோயுள்ளதோடு, அவனது குடும்பமே தற்பொழுது நிலைகுலைந்து போயுள்ளது.

தீவிர உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட மூன்று குழந்தைகள்

அப்பகுதியில் வசிக்கும் ஒரு குடும்பத்தினர் உள்ளூர் சந்தையிலிருந்து மாம்பழங்களை வாங்கி வந்து வீட்டில் உள்ள குழந்தைகளுக்குக் கொடுத்துள்ளனர். அந்த மாம்பழங்களை ஆசையோடு சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே, வீட்டில் இருந்த மூன்று குழந்தைகளுக்கும் அடுத்தடுத்து கடுமையான வாந்தி, மயக்கம் மற்றும் கடுமையான வயிற்று வலி போன்ற ஒவ்வாமை அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன. குழந்தைகளின் உடல்நிலை மிக வேகமாக மோசமடைவதைக் கண்டு பதறிய பெற்றோர்கள், அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் அவர்களை உடனடியாக அருகில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

சிறுவனின் பரிதாப மரணமும் தொடரும் சிகிச்சையும்

மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே நச்சுத்தன்மையின் வீரியம் தாங்காமல் 5 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், கடுமையான பாதிப்புகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மற்ற இரண்டு குழந்தைகளுக்கும் தற்பொழுது தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அவசர கால சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள உள்ளூர் காவல்துறையினர், அந்த மாம்பழங்கள் எந்தக் கடையில் இருந்து விற்பனை செய்யப்பட்டன மற்றும் அதில் என்ன வகையான ரசாயனங்கள் கலக்கப்பட்டன என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொதுமக்களுக்கு விடுக்கப்படும் அவசர விழிப்புணர்வு எச்சரிக்கை

இந்த கோர விபத்து அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும், சந்தைகளில் விற்கப்படும் பழங்கள் குறித்த அச்சத்தையும் விதைத்துள்ளது. செயற்கை முறையில் பழுக்க வைக்கப்படும் பழங்களை மக்கள் எவ்வாறு கண்டறிவது என்பது குறித்தும், நச்சுப் பழங்களை உண்பதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்தும் உணவுப் பாதுகாப்புத் துறையினர் உடனடியாகப் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் கடுமையான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தற்பொழுது கோரிக்கை விடுத்துள்ளனர்.

Also Read: திருச்சி ஐஜி பங்களா எதிரே கொடூரம்.. பேச மறுத்த காதலி மீது கல்லால் கொலை வெறி தாக்குதல்.. காதலன் அதிரடி கைது!

அரசின் அதிரடி உத்தரவும் தீவிர சோதனைகளும்

சிறுவனின் மரணத்தைத் தொடர்ந்து அரசு மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை (FSSAI) அதிகாரிகள் உடனடியாக அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். ஆசிஃபாபாத் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பழக் கிடங்குகள், கடைகள் மற்றும் சந்தைகளில் அதிகாரிகள் தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். சட்டவிரோதமாக கால்சியம் கார்பைடு மற்றும் அளவுக்கு அதிகமான எத்திலீன் ரசாயனங்களைப் பயன்படுத்தி பழங்களை பழுக்க வைக்கும் வியாபாரிகளுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை பாயும் என அரசு எச்சரித்துள்ளது.

Follow Us