AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ரூ.19,300 பணம் எடுக்க இப்படியா? சகோதரியின் எலும்புக்கூட்டை வங்கிக்கு கொண்டு வந்த நபர்.. பரபர சம்பவம்!

Keonjhar Incident: ஒடிசாவின் கியோஞ்சர் மாவட்டத்தில் வாரிசு ஆவணங்கள் இல்லாததால் வங்கிப் பணத்தைப் பெற முடியாமல் தவித்த ஜிது முண்டா, தனது இறந்த சகோதரியின் எலும்புக்கூட்டைத் தோளில் சுமந்து வங்கிக்கு வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனிதாபிமான அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் உறுதியளித்துள்ளனர்.

ரூ.19,300 பணம் எடுக்க இப்படியா? சகோதரியின் எலும்புக்கூட்டை வங்கிக்கு கொண்டு வந்த நபர்.. பரபர சம்பவம்!
கியோஞ்சர் சம்பவம்Image Source: social media
Sivasankari Bose
Sivasankari Bose | Updated On: 28 Apr 2026 12:54 PM IST

ஒடிசா மாநிலம் கியோஞ்சர் மாவட்டத்தில் உள்ள தியானாலி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜிது முண்டா. இவரது சகோதரி கக்ரா முண்டா கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு காலமானார். கக்ராவின் கணவர் மற்றும் ஒரே குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதால், ஜிது மட்டுமே அவருக்கு இருக்கும் ஒரே வாரிசாக இருந்தார். இந்நிலையில், உயிரிழந்த கக்ராவின் வங்கி கணக்கில் இருந்த ₹19,300 பணத்தை எடுப்பதற்காக ஜிது அந்த கிராமத்தில் உள்ள ஒடிசா கிராமின் வங்கிக்குச் சென்றார். அங்குள்ள வங்கி மேலாளர், பணத்தைப் பெற வேண்டுமானால் கணக்கு வைத்திருப்பவர் நேரில் வர வேண்டும் அல்லது முறையான வாரிசு சான்றிதழ்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

நடைமுறைச் சிக்கலும் கல்வியறிவற்ற ஏழையின் தவிப்பும்

படிப்பறிவில்லாத பழங்குடியினரான ஜிதுவுக்கு இறப்புச் சான்றிதழ் பெறுவதற்கோ அல்லது வாரிசுரிமை ஆவணங்களைத் தயார் செய்வதற்கோ வழியில்லாமல் போயுள்ளது. வங்கியின் சிக்கலான விதிமுறைகளைப் புரிந்து கொள்ள முடியாமல் அவர் தவித்துள்ளார். பலமுறை வங்கிக்குச் சென்றும் பலன் கிடைக்காத நிலையில், வங்கி மேலாளர் “கணக்கு வைத்திருப்பவர் நேரில் வர வேண்டும்” என்று கூறியதை அப்படியே நம்பிய ஜிது, ஒரு விபரீதமான முடிவை எடுத்தார். தனது சகோதரியின் பணத்தை எப்படியாவது பெற்றுவிட வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் சுடுகாட்டிற்குச் சென்றார்.

சுடுகாட்டைத் தோண்டி எலும்புக்கூட்டை சுமந்து வந்த அவலம்

சுடுகாட்டில் புதைக்கப்பட்டிருந்த தனது சகோதரியின் சடலத்தைத் தோண்டி எடுத்த ஜிது, அங்கிருந்த எலும்புக்கூட்டை ஒரு துணியில் மூட்டையாகக் கட்டினார். சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல், சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வங்கிக்கு அந்த எலும்புக்கூட்டைத் தனது தோளில் சுமந்தபடி நடந்து வந்தார். உயிருடன் இருக்கும்போது பணத்தை எடுக்க முடியாத நிலையில், இறந்த பிறகாவது சகோதரியின் உடலைக் காட்டினால் பணம் கிடைக்கும் என்று அவர் நினைத்திருக்கலாம். இந்தத் திகைப்பூட்டும் காட்சி வங்கியில் இருந்தவர்களையும் அந்தப் பகுதி மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

வங்கி அதிகாரிகளின் மெத்தனப்போக்கும் மக்கள் கொந்தளிப்பும்

ஜிது எலும்புக்கூட்டுடன் வங்கி வாசலில் நிற்பதைக் கண்டு மக்கள் கண்ணீர் விட்டனர். வங்கியின் மெத்தனப்போக்கையும், மனிதாபிமானமற்ற செயலையும் கண்டு கிராம மக்கள் ஆத்திரமடைந்தனர். ஒரு ஏழை மனிதனுக்குச் சேர வேண்டிய உரிமையைப் பெற்றுத்தர வங்கியினர் நினைத்திருந்தால், கிராமத் தலைவரிடம் (Sarpanch) விசாரித்திருக்கலாம் அல்லது ஒரு கள ஆய்வை மேற்கொண்டிருக்கலாம் என்று மக்கள் குற்றம் சாட்டினர். வெறும் காகித ஆவணங்களுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தை, ஒரு மனிதனின் கண்ணீருக்கு அதிகாரிகள் கொடுக்கவில்லை என்பதே அப்பகுதி மக்களின் வேதனையாக இருந்தது.

காவல்துறை தலையீடு மற்றும் மனிதாபிமான உறுதிமொழி

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், ஜிதுவை சமாதானப்படுத்தி அவரிடமிருந்த எலும்புக்கூட்டை மீட்டனர். இச்சம்பவம் குறித்து வங்கியிடம் விளக்கம் கேட்கப்படும் என்றும், சட்ட ரீதியான நடைமுறைகளைத் தாண்டி மனிதாபிமான அடிப்படையில் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காணப்படும் என்றும் காவல்துறையினர் உறுதியளித்துள்ளனர். இந்தச் சம்பவம் ஒடிசா முழுவதும் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Follow Us