பாகிஸ்தானில் 90 நாட்கள்.. உளவு பார்த்த நபர் அதிரடி கைது.. பகீர் தகவல்கள்!
Pakistan Spy Arrest : பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக ராஜஸ்தானைச் சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்ததாகவும், அங்கு 90 நாட்கள் தங்கி இருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டவர் ராஜஸ்தானைச் சேர்ந்த காசிம் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

டெல்லி, மே 30 : பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக, ராஜஸ்தானைச் சேர்ந்த நபரை டெல்லி போலீசார் கைது (Pakistan spy arrest) செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தானுக்கு உளவு பார்ப்பதாக இந்தியாவைச் சேர்ந்த பலரும் கைது செய்யப்பட்டு வரும் நிலையில், மேலும் ஒருவரை டெல்லி போலீசார் பிடித்துள்ளது. இவர் 90 நாட்கள் பாகிஸ்தானில் தங்கி இருந்ததாகவும், சிம் கார்டுகளை பாகிஸ்தானுக்கும் அனுப்பி வைத்ததும் தெரியவந்துள்ளது. ராஜஸ்தானின் பரத்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த காசிம் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர் நீண்ட நாட்களாக கண்காணித்த அதிகாரிகள், 2025 மே 29ஆம் தேதியான நேற்று கைது செய்யப்பட்டனர். அதிகாரிகளின் கூற்றுப்படி, காசிம் இரண்டு முறை பாகிஸ்தானுக்குச் சென்றுள்ளார்.
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த நபர் கைது
2024 ஆகஸ்ட் மற்றும் 2025 மார்ச் மாதம் என இரண்டு முறை சென்றுள்ளார். மொத்தம் அவர், 90 நாட்களாக சட்டவிரோதமாக பாகிஸ்தானுக்கு சென்றுள்ளதாக கூறினர். அப்போது, அவர் பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகளை சந்தித்ததாகவும் போலீசார் கூறினர்.
இதுகுறித்து டெல்லி போலீசார் கூறுகையில், “இந்திய ராணுவம் மற்றும் அரசு நிறுவனங்கள் தொடர்பான முக்கியமான தகவல்களைச் சேகரிக்க இந்திய மொபைல் எண்களை தவறாக பயன்படுத்தியதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது.
இந்த மொபைல் சிம் கார்டுகள் இந்தியாவில் வாங்கப்பட்டு இந்திய நாட்டினரின் உதவியுடன் எல்லையைத் தாண்டி அனுப்பப்பட்டது தெரிந்தது. இந்த சிம் கார்டுகளை பயன்படுத்தி பாகிஸ்தான் அதிகாரிகள் இந்தியர்களை தொடர்பு கொண்டு முக்கிய தகவல்களை பெற்றதாக தெரிகிறது.
தொடரும் கைது நடவடிக்கை
Delhi Police arrested Kasim from Bharatpur, Rajasthan, for aiding ISI agents in extracting sensitive information via Indian mobile numbers used by Pakistan Intelligence Operatives (PIOs). Kasim visited Pakistan twice and communicated with PIOs to target Indian Army and government… pic.twitter.com/HWuhURiXGC
— IANS (@ians_india) May 29, 2025
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்தோம். அதில் காசிம் என்பவர் தெரியவந்தது. இதனை அடுத்து, அவரை நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்” என்று கூறினார். மேலும், காசிம் இந்தியாவில் பல நபர்களை தீவிரவாதத்தில் ஈடுபடுத்தியதாகவும் போலீசார் கூறுகின்றனர். பஹல்காம் தாக்குதலுக்கு பாகிஸ்தானுக்கு உளவு பார்க்கும் நபர்களை அதிகாரிகள் கைது செய்து வருகின்றனர்.
அதன்படி, பெண் யூடியூப் பிரபலம் ஜோஷி மல்ஹோத்ரா தொடங்கி பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த 15 பேர் கைது செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து, டெல்லியில், சிஆர்பிஎஃப் வீரர், ராஜஸ்தானைச் சேர்ந்த அரசு ஊழியர் என அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், தற்போது ராஜஸ்தானைச் சேர்ந்த ஒருவரை கைது செய்தனர்.
2025 ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக பாகிஸ்தானும் தாக்குதல் நடத்தியது. தொடர்நது மூன்று நாட்கள் நடந்த தாக்குதல், 2025 மே 10ஆம் தேதி முடிவுக்கு வந்தது. இருப்பினும், பாகிஸ்தானுடன் வர்த்தகத்தையும், சிந்துநதி நீர் ஒப்பந்தத்தையும் இந்தியா நிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.